ரசிகனாக மட்டுமிரு

         தங்கள் அபிமான நடிகர் விஜய் நடித்த காவலன் படம் திரையிட தாமதமானதால் அவர் ரசிகர்கள் 
ரகளையில் ஈடுபட்டு சாலையில் சென்ற பேருந்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.
            அவர்கள் கையில் கிடைத்தது அரசுப்பேருந்து.[தனியார் பேருந்தை அடித்து நொறுக்கிட அவர்கள் என்ன முட்டாளா}
 மக்கள் சொத்தை சேதப்படுதிய ரசிகர்களை காவல் துறையினர் விசாரிக்கிறார்களாம். இதில் விசாரிக்க என்ன இருக்கிறது?
             ஒரு சினிமா படம் போட தாமதம் என்றால் ரகளையா? இவர்களை சுயபுத்தியுள்ள மனிதர்கள் பட்டியலில் சேர்க்கலாமா.
             இவர்களை கைது செய்து உடனெ சிறையில் அடைக்க வேண்டும். குண்டர்கள் போன்று செயல் பட்ட இவர்களை குண்டர் சட்டத்தில்  உள்ளே தள்ள வேண்டும்.
              அது தான் மற்ற ரசிகர்கள் என்று திரியும் சில தறுதலைகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.இதில்இவர்கள் இளைய தளபதி அரசியலில் வேறு குதிக்கப்போகிறாராம்.நாடு விளங்கிடும்.  
               ரசிகன் என்றால் கலாரசிகனாக இருக்க வேண்டும்.வெறிரசிகர்களாக இருக்கக்கூடாது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?