மீண்டும் படுகொலை

மீண்டும் இலங்கைப் படையினர் ஒரு மீனவரை  படுகொலை செய்துள்ளனர்.
இடு தினசரி நிகழ்வாகிப்போனது.ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தாகிவிட்டது.
இப்போது இந்தியாவில் வந்து கொல்லுகின்றனர்.
நமக்குஒரு பாதுகாப்பும் இல்லை என்றாகிவிட்டது.
ஓரு கொலை நடந்தவுடன்  தமிழ் நாட்டை ஆள்வோர்  ஒரு மடல் தீட்டுவர்,
இந்தியாவை ஆள்வோர் ஒரு கண்டனம் தெரிவிபர், இலங்கை அரசு  நாங்கள்
செய்யவில்லை  அல்லது  இதுதான் பூலோகமா? எனக்கேட்கும்
 நாடகம் முடிந்துவிடும்.
இதை பார்த்து,கேட்டு  சலித்துவிட்டது. சிதம்பரம் உள்துறை அமைச்சர் .
இவர் தமிழராக இருந்து ஒருப்பயனும் இல்லை.அவர் காங்கிரஸ்காரரகப்
போய்விட்டா ர். அவர்கள் தான் தமிழன் என்றாலே  எட்டிக்காய் போன்று
முகம் சுழிப்பவர்களாகிவிட்டனரே.
வேன்டும் என்றேதான் இந்தப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றதோ
என்ற சந்தேகம் இப்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம் இந்திய 
அரசு இந்தப்படுகொலைகள் விடயத்தில்  ஒரு அழுத்தமான  ,வலிவான
நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. இலங்கையைப்பார்த்துப்பயப்
படும் தோற்றம் உள்ளது.
கச்சத்தீவு தாரைவார்ப்பு  நடக்கும் படு கொலைகலுக்கு முக்கிய காரணமாக
உள்ளது.அதன் பக்கம் நம்மவர்களை வரவிட மாட்டேன்  என்கிறார்கள்.
அங்கு இந்தியாவுக்கு  குறிப்பாக தமிழகத்திற்கு அதன் பாதுகாப்பிற்கு
கேடு விளைவிக்கும் செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
       சரி  அதை எல்லாம் விடுங்க,,,,,,,
  இந்தியாவில்  கடலோரப் பாது காப்புப் படை  என்று ஒன்று உண்டே
     அவர்கள்  வேலை என்ன செய்வது..
தமிழக மீனவர்களைச்சுடும்  இலங்கைக் காடையருக்குப் பாதுகாப்பு
கொடுப்பதுதானா,,,. நாள் தவறாமல் நடை பெறும்  இந்தக் கொலைகளில்
அவர்கள்  பாதுகப்பு லட்சணம்   பற்றி மிகப்பெரிய கேள்வி எழுகிறது.
அவர்கள்  இந்தியபாதுகாப்புப் படையினரா?
இலங்கை படையினர் பாதுகாவலர்களா,,,
காரணம்  ,, இப்போது காவல் துறையினர்  இலங்கை தூதரகத்திற்கும்,
இலங்கை வங்கிக்கும், புத்தமடத்திற்கும் தானே பாதுகாப்பு தருகிறார்கள்.
தமிழக மீனவர்களுக்கு அல்லவே,,,
அன்பு உரு புத்தனை வணங்கும்  இவர்களை அந்த புத்தன் தான்
காப்பாற்றவேண்டும், 
இப்போது மீனவர்கள் மத்தியில்..ஒரு கருத்து நிலவுகிறது.
அது விடுதலைப்புலிகள் இருகும் வரை இது போன்ற கொலைகள்
நடக்க வில்லை என்பதுதான்,,,,,
புத்தம் சரணம்  கச்சாமி,,,,,,,,,,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?