2-ஜி அலைக்கற்றை மீண்டும் சில சந்தேகங்கள்,

-ஆர்.பத்ரி
  2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ் வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங் களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை, பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு விவா திக்கப்படவேண்டும்.

கடந்த ஆட்சியில் பின்பற்றப்பட்ட ‘முத லில் வருபவருக்கு முன்னுரிமை’ என்கிற நடைமுறையைத்தான் பின்பற்றினேன். நான் தவறேதும் இழைக்கவில்லை என சொல் கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. முதலில் வருபவர்க்கு எடுத்துக்கொடுக்க இது என்ன முத்துமாரி அம்மன் கோவில் பிரசாதமா என கேள்வி எழுப்புகின்றனர் எதிர்தரப்பினர். ஆ.ராசா பின்பற்றிய நடைமுறையின் மூலம் அரசிற்கு ரூ.1,76,379 கோடி நஷ்டம் என்கிறார் மத்திய அரசின் தலைமை தணிக்கை அதி காரி. ‘அவர் சொல்வதில் உண்மையில்லை. இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டுதான்’ என மறுக்கிறார் தற் போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச் சர் கபில்சிபல். இத்தகைய விவாதங்கள் ஒரு புறம் இருக்க, இப்பிரச்சனைக்கு சற்றும் தொடர்பற்ற முறையில் ‘இது திராவிடர் களுக்கு எதிராக ஆரியர்களால் தொடுக்கப்பட் டிருக்கும் யுத்தம்’ என மக்களை திசை திருப்ப முயன்று தோற்றிருக்கிறார்கள் கலை ஞரும், வீரமணி வகையறாக்களும். உண்மை யில் என்னதான் நடந்திருக்கிறது என்பதை இன்னும் சற்று தெளிவாக அறிந்துகொள்ள ஒரு பிளாஷ்பேக் கதையைப் பார்ப்போம்.

தொலைபேசித் துறை-

பணம் கொட்டும் அட்சயப் பாத்திரம்

தொலைத்தொடர்பு சேவை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நமது இந்திய நாட்டில், கடந்த 1995ம் ஆண் டில்தான் காங்கிரஸ் ஆட்சியில் தனியார் நிறுவனங்களுக்கு சேவை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு, லைசென்ஸ் வழங்கப்பட் டது. அன்றைக்கு 9 மாநிலங்களில் தொலை பேசி சேவை வழங்க எச்.எப்.சி.எல் என்ற ஒரே ஒரு தனியார் நிறுவனம் மட்டும் ரூ.85,000 கோடி செலுத்துவதாக வாக்குறுதி அளித்து லைசென்ஸ் பெற்றது. ஆனால் சொன்னபடி அரசிற்கு பணமும் கட்டாமல், முழுமையான சேவையும் வழங்காமல் இழுத்தடித்த இந் நிறுவனத்திற்கு ஆதரவாக தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராம் செயல்பட்டதும், அவ ருக்கு பின்புலமாக ருனுகோஷ் என்ற பெண் மணி இருந்ததும் நாடறிந்த உண்மை. மேலும் சிபிஐ பரிசோதனையின் போது அவர் வீட் டில் கட்டுக்கட்டாக பணமூட்டைகளும், விலை உயர்ந்த பரிசு பொருட்களும் கண்டுபிடிக்கப் பட்டதை மறந்துவிட முடியுமா...

அடுத்த வந்த பாஜக ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக ஜக்மோகன் சிங் இருந்தபோது செல்லுலர் சேவை வழங் குவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டண சலுகையால் பத்து ஆண்டுகளில் மத்திய அரசிற்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம் என அப்போதைய அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி பகி ரங்கமாக கருத்தை வெளிப்படுத்தினார். தனி யார் நிறுவனங்களுக்கு ஆதரவான இத்தகைய பேரத்தில் அப்போதைய தொழிலதிபர் சுனில் பாரதி மிட்டல், புட்டபர்த்தி சாமியார் சாய்பாபா, ஜென்டில்மேன் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோர் ஈடுபட்டிருந்ததை நாடு பார்த்தது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவான இம் முறையை அமல்படுத்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜக்மோகன் விரும்பாததா லும், தனியார் நிறுவனங்கள் கொடுத்த நெருக் கடியின் காரணமாகவும் தொலைத்தொடர்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக்மோகன் கழட்டிவிடப்பட்டு, பிரதமர் வாஜ்பாயே நேரடி யாக அத்துறையின் பொறுப்பை ஏற்று இப் பணிகளை செவ்வனே செய்து முடித்தார். அப் போது நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந் திப்பில் ஒரு ஒப்பந்ததாரர் “தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஜக்மோகன் தூக்கியெறியப்படுவார்” என பகிரங்கமாக அறி வித்த சிலமணி நேரங்களிலேயே அவரிட மிருந்து அத்துறை பறிக்கப்பட்டதையும் தற் போது நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கு பிறகு இத்துறையின் பொறுப்பை ஏற்ற பிரமோத் மகாஜன் லைசென்ஸ் முறை யை மாற்றி வருவாய் பகிர்வு முறையை கொண்டு வந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கஜானாவை நிரப்ப பெரிதும் உதவினார். இந்த புதிய முறையினால் ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களை சுருட்டிய நிறு வனங்கள் டாடாவும், ரிலையன்சும்தான். இம் முறையினால் அரசுக்கு ரூ.64,000 கோடி நஷ் டம் என அப்போதும் கணக்குப்போட்டு சொன்னது மத்திய அரசின் தலைமை தணிக் கைத்துறை. இதற்கு பிரதியுபகாரமாக ரிலை யன்ஸ் நிறுவனங்கள் தங்கள் பலகோடி மதிப் புள்ள பங்குகளை பிரமோத் மகாஜனின் பினாமிகளுக்கு வழங்கியது. அதற்கு பிறகு இத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஷோரி ஒருபடி மேலேயே சென்று, ஒருங்கிணைந்த லைசென்ஸ் முறை என் பதை அறிமுகப்படுத்தி, அனைத்து நிறுவ னங்களும் ஒரே லைசென்ஸ் பெற்றுக் கொண்டு அனைத்து சேவைகளையும் வழங்கலாம் என வழியேற்படுத்தி, தனியார் நிறுவனங் களை ஊக்கப்படுத்தி அழகுபார்த்தார்.

ஊழலே நடக்கவில்லை என்ற வாதம் சரியா?

மற்றவர்கள் சொல்வதைப்போல இதில் ஊழல் ஏதும் நடைபெறவில்லை என ஆ. ராசாவும், அவரைச் சார்ந்தவர்களும் மறுக் கிறார்களே... அது சரியா, இல்லையா என்பதற்கு பின்வரும் சில உண்மைகளைப் படித்தாலே நமக்கு எளிமையாக புரிந்துவிடும்.

1அலைவரிசை உரிமம் பெற்ற நிறுவனங் களில் யூனிடெக் மற்றும் அலையன்ஸ் 
  இன் பிரா ஆகிய நிறுவனங்கள் கட்டுமான தொழி லில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள். லூப் டெலி காம் என்ற நிறுவனமும் லைசென்ஸ் பெறும் வரை தொலைபேசி சேவையில் ஈடுபடாத நிறுவனமே. இத்தகைய இந்நிறுவனங்க ளுக்கு ஏன் உரிமம் வழங்க வேண்டும்.

2. சொற்பத் தொகைக்கு அலைவரிசை உரிமம் பெற்ற யூனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் ஏன், ஒரு சில நாட்க ளிலேயே மிக மிக அதிகமான தொகைக்கு தங்கள் பங்குகளை விற்க வேண்டும். அரசு எப்படி அதை அனுமதித்தது.

3. அலைவரிசை உரிமம் பெறுவதற்கான இறுதி தேதி அவசர அவசரமாக ஒரு வார காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு இந்நிறு வனங்களுக்கு ஏன் உரிமம் வழங்கப்பட்டது.

4. அலைவரிசை உரிமம் பெற்ற நிறுவனங் கள், லைசென்ஸ் பெற்ற வெறும் 45 நிமிடங் களுக்குள்ளாகவே ரூ.1600 கோடி வங்கி உறுதிப்பத்திரம் வழங்க வேண்டும் என்ற விதியை எவ்வாறு நிறைவேற்றினார்கள். பல ஆண்டுகளாக தொழில்களில் ஈடுபட்டிருக் கும் பெரிய பெரிய நிறுவனங்களாலேயே முடி யாதபோது இந்நிறுவனங்களால் அது எப்படி சாத்தியமாயிற்று. எனவே முன் கூட்டியே ஒப் பந்த விதிகள் தனக்கு வேண்டிய இந்நிறுவ னங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம் என் பது உண்மைதானே...

5. 2ஜி அலைவரிசை உரிமம் வழங்குவதற் கான வழிகாட்டுதல்களை டிராய், பிரதமர் அலுவலகம், சட்ட அமைச்சகம், நிதி அமைச் சகம் ஆகியவை தெரிவித்து இருந்தும் இவை அனைத்தும் ஏன் ஒரேயடியாக புறக்கணிக் கப்பட்டன. விடையின்றி தொடரும் கேள்வி கள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இதுவரையில் இந்தியாவில் இல்லாத இமா லய ஊழல் தான் இது என்பதை ஊர்ஜிதம் செய்கிறத

, அரசு செய்யவேண்டியது என்ன.. நேர்மையற்ற முறையில் வழங்கப் பட்ஊழல்களை பொறுத்தக்கொள்ள மாட் டோம் என காங்கிரஸ் வீரவசனம் பேசுவது உண்மைட அனைத்து அலைவரிசை உரிமங்க ளையும் முழுவதும் ரத்து செய்துவிட்டு புதி தாக, வெளிப்படையாக ஏலம் விடப்பட வேண் டும். அப்படி செய்ய சட்டத்தில் இடமுண்டா... நிச்சயம் உண்டு... ஒரு ஒப்பந்தத்திலோ அல் லது உரிமம் வழங்கியதிலோ ஊழல் அல்லது முறைகேடு நடந்திருந்தால், இந்திய ஒப்பந்த சட்டம் 1872 பிரிவு 23 மற்றும் 24ன்படி அவற்றை அடியோடு ரத்து செய்ய முடியும்.

அப்படி ஏதும் நடந்திருக்கிறதா.. ஆம்.. உதாரணம் இருக்கிறது... கடந்த 2007ம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு, ஐரோப்பா வின் யூரோகாப்டர் என்ற நிறுவனத்திலிருந்து 197 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறை கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த தால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணை யத்தின் வழிகாட்டுதல்படி அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப் பட்டது. எனவே அரசு தனது சொத்தையான வாதங் களை கைவிட்டு செயலில் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் நம்புவார்கள்.

இவற்றையெல்லாம் விட நாம் குறித்துக் கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான கருத்து ஒன்று இருக்கிறது. இத்தகைய ஊழல்கள் என்பது முதலாளித்துவத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளின் வெளிப் பாடுதான். எனவே இத்தகைய நவீன தாராள மயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் ஊழல்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது.
                                                                                         நன்றி;தீக்கதிர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?