பிரிட்டனில் அய்ரோப்பியரல்லாதோர்க்கு விசா இல்லை,

; நம் இந்திய மாணவர்கள் பிரிட்டனில் வேலை தேடும் வேலைக்கு அந்த நாடு ஆப்பு வைத்துள்ளது.
 பிரிட் டனில் எம்.பி.ஏ., படித்து முடித்த இந்திய மாண வர்கள் வேலை தேடுவற் காக இரண்டாண்டு காலம் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, பிரிட்டனில் வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்து வருவதையடுத்து, இதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக எம்.பி.ஏ., படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமா கக் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை போன்று பிரிட்டனிலும் வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்து வரு கிறது.

இதனால், அய்ரோப் பிய நாடுகளைச் சாராத பிற பன்னாட்டு மாண வர்கள் பிரிட்டனில் தங்கி வேலை தேடுவதைத் தடுக்க விசா வழங்கும் நடைமுறையில் படு கெடு பிடிகளை கொண்டுவர அந்நாட்டு அரசு திட்ட மிட்டுள்ளது.

பிரிட்டினில் எம்.பி.ஏ., படிப்பு படிப்பதற்காக இந்தியா உள்பட பல் வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமள வில் வருவர். இரண் டாண்டு காலம் படிப்பை முடித்ததும், பல மாண வர்கள், பிரிட்டனில் வேலை தேடுவர். குறிப் பாக இந்தியா, சீனா, நாடுகளிலிருந்து தான் அதிகளவில் மாணவர் கள் வருவர். இவர்களின் வருகையால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனைச் சேர்ந்த மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் நிலவியது.

சமீபத்தில், விழா ஒன்றில் பேசிய பிரிட் டன் குடியேற்றத்துறை அமைச்சர் டாமின் கிரீன் பேசுகையில்," அய்ரோப் பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து வந் துள்ள மாணவர்கள் எண் ணிக்கையால், பிரிட் டனைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு பெறு வதில் சிக்கல் நிலவுகிறது.

இதைத் தடுக்க, பிரிட் டனில் படிக்க வரும் மாணவர்கள் தங்கள் படிப் புக் காலம் முடிந்ததும், இரண்டாண்டுகள் வேலை பார்க்க அனுமதிக் கப்பட்டனர். தற்போது, இதற்கான விசாவை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆனால், படிப்பு முடித்த பிறகு, இரண் டாண்டு காலத்திற்கு வழங்கப்பட்ட விசாவை தடை செய்யும் முடிவால், பலரும் பாதிக்கப்படுவர். மேலும், எம்.பி.ஏ., படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும். படிப்பை முடித்ததும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதால் பலரும் வருவதற்கு தயங் குவர்.

இதனால் கனடா, ஆஸ்திரேலியா, அமெ ரிக்கா பக்கம் மாணவர் கள் திரும்புவர். இது பிரிட்டன் கல்லூரிகளுக்கு பாதிப்பாக அமையும். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
 இந்தியாவில் படித்து இந்தியாவில் பணி புரிய இனியாவது நம் இளையோர் முன் வரவேண்டும். என்னவளம் இல்லை இந்தியாவில். இந்தியா இப்போதுள்ள சீர்கேடுகளை  நம் இளைய சமுதாயம் தானே களையமுடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?