"அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது."அபரிமிதமான உற்பத்தி, போதுமான அளவில் கையிருப்பு இருப்பதால், கோதுமை, அரிசி மற்றும் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது பற்றி, அரசு தீவிரமாக யோசித்து கொண்டுள்ளது' என, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார்.
டில்லியில், நிருபர்களிடம் நேற்று பேசிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியதாவது: கோதுமை உற்பத்தி, இந்தாண்டு, எதிர்பார்த்ததை விட, அமோகமாக உள்ளது. சிறந்த சீதோஷ்ண நிலை காரணமாக, இதுவரை, 8 கோடியே 40 லட்சம் டன் கோதுமை உற்பத்தியாகி உள்ளது. இது, இந்தாண்டு மதிப்பிடப்பட்டதை விட, 25 லட்சம் டன் அதிகம். இது போன்று, அரிசி மற்றும் சர்க்கரை உற்பத்தியும் அதிகமாக உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில், சில உணவு தானியப் பொருட்கள் ஏற்றுமதி பற்றி, அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
சரத்பவாருக்கு இந்தியாவில் விலைவாசிகுறையக்கூடாது என்பதில் அப்படி என்ன வேண்டுதலோ.


அதிக உற்பத்தி என்றால் பொருட்களின் விலையைக்குறைக்கலாமே? அதைவிடுத்து கட்டுப்பாடின்றி ஏற்றுமதி செய்து சிலமுதலாளிகள் மட்டும் பணம் சேர்க்க, பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் உயர ,,ஏன் இந்த பணமுதலைகள் புத்தி.  முன்பு சீனியை ஏற்றுமதி செய்து விட்டு பின் அதிகவிலை கொடுத்து இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை சரிசெய்தது மறந்து போய் விட்டதா? கிடங்கில் கிடந்து எலிகளால் வீணானாலும் சரி, ஏழைகளுக்கு மலிவுவிலையில் கொடுக்கமாட்டோம் என்ற அரசிடம் இப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான்.
       எப்போதும் மக்கள் விரோத போக்கையும்,பணமுதலைகள் சார்புநடவடிக்கைகளுமே எடுக்கும் சரத் பவார் போன்றோரை மராட்டிய மக்கள் ஓட்டு போட்டு எந்தவகையில்தான் ஒருதலைவராக தேர்ந்தேடுக்கிறார்களோ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?