கசாப் எம்.பி,

சிறை பதிவேட்டின்படி அஜ்மல் கசாபுக்கு 23 வயதாகிறது. அவரது சொந்த ஊர் பாகிஸ்தானில் உள்ள ஃபரித்கோட். கல்வித் தகுதி 4 ம் வகுப்பு. "கசாப் குறித்து சிறையில் எங்களிடம் உள்ள தகவலையும், அவரிடம் நேரில் பேசி பெற்றத் தகவலையும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியிடம் அளித்துள்ளோம் என்று ஆர்தர் சிறை அதிகாரி ஒருவர் கூறினார். 
                     தூக்கில் போட வேண்டியவனை வைத்து அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையில் பாகிஸ்தான்காரனைக் கணெக்கெடுக்க வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது.அதுவும் நம்நாட்டில் தீவிரவாதம் செய்யவந்தவன். நூற்றுக்குமேற்பட்டவர்களை கொன்று குவித்தவன் .அவனை நம் நாட்டு மக்கள் தொகையில் சேர்த்து கணக்கெடுக்க இவர்களுக்கு பைத்தியமா பிடித்துள்ளது. தீவிரவாதிகள் பட்டியல் கணக்கில் அல்லவோ அவனை சேர்க்க வேண்டும். 
                  நம்மவர்கள் அவனுக்கு போகிறபோக்கில் குடும்ப அட்டை,வாக்களர் அட்டையும் தந்துவிடுவார்கள்.
                 கசாப் வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டிகூட போடுவான். அவனுக்கு ஓட்டு போட வும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.வாழ்க இந்திய இறையாண்மை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?