அமெரிக்க உதவி,,,,,,,,,,

கடாபியின் மகன் காமீஸ் கடாபி மரணம்.


       லிபியா அதிபர்
 கடாபியின் பல மகன்களில் ஒருவரான காமீஸ் கடாபி என்பவர் போரில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரிப்போலி மருத்துவமனையில் பலத்த காவல்களுக்கு மத்தியில் இவருடைய சிகிச்சைகள் நடைபெற்றதாகவும், கடந்த வாரமே இவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவர் மரணமடைந்த செய்தி  இதுவரை உறுதி செய்யப்படவில்லை. போராளிகளின் விமானி ஒருவரே கடாபியின் பப் அல் அஸீசியா விமான கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. கடாபியின் மகன் காமீஸ் கடாபி தலைமையிலான இராணுவ அணி லிபியாவில் போராடியவர்கள் மீது தாக்குதல்களை செய்த அணியாகும். காமீஸ் படை அணி என்பது லிபியாவில் உள்ள போராட்டக்காரர்களைநடுங்க வைத்த அணியாக இயங்கி வந்தது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம்
அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகள் லிபியா மீது வான் வெளி தாக்குதல் நடத்தி குண்டுமாரி பொழிகிறது.இதில் பழி்யாவது அப்பாவி மக்கள்தானே எத்தனையோ நாடுகள் சுதந்திரம் கேட்டு போராடும் போது அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத அமெரிக்கா லிபியா,ஈராக்,ஈரான்,போன்ற நாடுகள் மீது மட்டும் மக்களுக்காக கரிசனை காட்டி போர் முழக்கமிட்டு இறங்குவது ஏன்?இலங்கையில் போரில் ஒடுக்கப்பட்ட தமிழர்களைக் கண்டு கொள்ளாததும் ஏன்?
 காரணம்  நாலே வார்த்தைகள்தான்,,,
                      “பெட்ரோல்   “,
 இலங்கையிலும் ஈராக்,ஈரான்,லிபியா போன்ற அரபு நாடுகளைப்போல் பெட்ரோல் ஊற்றெடுத்தால் விடுதலைப் புலிகளுக்காகவோ அல்லது பக்சே அரசுக்கு ஆதரவாகவோ களம் இறங்கியிருக்கும்.
      அமெரிக்க ஆதரவெல்லாம் ஆதாயம் இல்லாமல் ,,,,,, யாரும் ஆற்றோடு போகமாட்டார்கள் என்ற கதைதான்......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?