இளமை இதோ -இதோ,


என்றும் இளமையாக இருக்க,,,,,,,,,,
அனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே.அதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் மூன்று:
 உணவு உணவு என்றாலே நமக்குத் தெரிந்தது சாதம் தான். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும்.
நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். வெறும் அரிசி சாதம், சப்பாத்தி போன்றவைகளைச் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்டுகள் தான் உடலில் சேர்கிறது. மற்ற விஷயங்கள் சேருவதில்லை.
காய்கறிகளிலும், பழங்களிலும் வயோதிகத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவை நம் உடலை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே போல் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. கொஞ்சமாய்ச் சாப்பிட்டாலே போதும்.
 உடற்பயிற்சி நம் உடல் அழகாக இருக்க வேண்டும் என்று ஆர்வப்படும் அளவுக்கு அதற்காக நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. தினம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் அதை ஏதோ ஒரு பெரிய வேலையாக பலர் கருதுகிறார்கள்.
அவர்கள் உடல் இளமையாக இருக்காது. ஒரு நாளில் இருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அரைமணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு மிதமான வியர்வை வரும் வரை பயிற்சிகள் செய்யலாம்.
வீட்டில் இருந்த படியே செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முதல் இரண்டு நாள் செய்வதற்குத் தயக்கமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.
 மனம் இளமைக்கு அடிப்படையான விஷயம் மனம். அது சந்தோஷமாவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனம் சரியில்லை என்றால் எதைச் செய்தாலும் இளமை வராது. உடலில் ஒரு களைப்புத் தெரியும். முதிர்வு வந்திடும். ஆனால் இன்றைய உலக சூழ்நிலையில் மனதை எப்பவும் சந்தோஷமாக வைத்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயம். அதற்கு நமக்கு உதவுவது தியானம் மட்டுமே.
தினமும் அரைமணி நேரம் தியானம் பண்ண வேண்டும். காலையில் எழுந்ததும் கண்ணை மூடி உட்கார்ந்து முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பது கூட ஒரு விதமான தியானம் தான்.
தியானம் செய்வதால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. நமக்கு இளமையைக் கொடுக்கின்ற மெலோடோனின்ங் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.                                                                                                                                               இந்த முறைகளை கடைபிடித்தால் உங்களுக்கு எவ்வளவு வயதானாலும் இளமையாகத் தான் தோன்றுவீர்கள்.
 ன்னதான் இருப்பினும் மனம் சார்ந்த செயல்தான் இளமை.அதற்கு உங்கள் மனம் எப்போதும் நீங்கள் இளமையானவர்,சுறு,சுறுப்பானவர், கவர்ச்சியானவர் என முதலில் நம்பவேண்டும்.அதற்கு நீங்கள் அப்படித்தான் இருப்பதாக அடிக்கடி மனதில் எண்ணவேண்டும்.பின் பாருங்கள் உங்கள் இளமை உங்களுக்கே வியப்பூட்டும். 
வியப்பு இருக்கட்டும் .மனம் இளமையானாலும்,செயல்கள் சுறு,சுறுப்பானாலும் காலம் நம் உடல் அளவில் சில வயதிற்குரிய வடிவங்களை காட்டத்தான் செய்யும்.அதை கண்டு கொள்ளாமல் என்றும் இளமையுடன் வாழ வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?