நீண்ட காலம் அரசாங்கம் இல்லாத நாடு,,,,,கின்னஸ் சாதனை!

உலகில் நீண்ட காலமாக அரசாங்கம் என்ற ஒன்றே இல்லாத நாடு என்ற பெருமை பெல்ஜியத்துக்குக் கிடைத்துள்ளது. இது கின்னஸ் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது.
பெல்ஜியத்தின் பிளமிஷ் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக கடந்த வசந்த காலத்தின் போது அரசாங்கம் கவிழ்ந்தது.
கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் நடத்தப்பட்ட தேர்தல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. பெல்ஜியத்தின் வடபகுதியைச் சேர்ந்த டச் மொழி பேசும் செல்வந்தர்கள் பெல்ஜியத்தில் பிரிவினை கோரும் பிளமிஷ் பிரிவை ஆதரித்தனர்.
அதனையடுத்து ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டதால் இன்னமும் உத்தியோகப் பூர்வமாக அரசொன்று அங்கு நிறுவப்படவில்லை. இதற்கு முன் ஈராக்கில் தான் இவ்வாறாதோர் நிலை காணப்பட்டது. அது 289 தினங்கள் நீடித்தது. ஆனால் பெல்ஜியம் தற்போது அதைத் தாண்டிவிட்டது.
அடுத்ததாக கம்போடியாவில் இவ்வாறான நிலை இதற்கு முன் 353 தினங்கள் நீடித்தது. பெல்ஜியம் அதையும் தாண்டி சாதனைப் படைக்குமா? என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

                                                                                                                                                                                                                                                                                               

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?