இது புதுசுங்க,,,,,,,,

 ரூ.45 ஆயிரம் கோடி சூறை ” ரிலையன்ஸ் எரிவாயு ஊழல்”

 
 கொஞ்சம் நாளா மத்தியில் இருந்துபுதிதாக ஊழல் ஒன்றையும் காணோமே என பார்த்துக் கொண்டிருந்த உங்களை ஏமாற்றாமல் மன்மோகன் சிங்-சோனியா வழங்கும் அடுத்த மகா ஊழல் இதோ.
    இம்முறை இவ்வூழலை நமக்கு தயாரித்து வழங்குவது 9000 கோடி குடிசைக்கு சொந்தக்காரரான அம்பானி.
      முன்பு தொலைத்தொடர்பில் ரிலயன் செல்பேசி நிறுவன செல்பேசிகளின்  வெளிநாடு அழைப்புகளை எல்லாம் உள்ளுர் அழைப்புகள் என அரசை ஏமாற்றி 1400 கோடியை அமுக்கிய தேசபக்தர் குழுமத்தைசேர்ந்த பெட்ரொலிய நிறுவனம்தான் இம்முறை 45000 கோடி முறைகேடைச்செய்து சாதனை படைத்துள்ளது.
 ”அம்பானி ஒரு வெற்றியின் சரித்திரம்” எழுதிய வர்களுக்கு இந்த ஊழல்சமர்ப்பணம்.
 அடுத்து அவர்கள் “அம்பானி ஊழல்களின் மகத்துவம்” எழுதுவாரகளா? 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விண்வெளி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என வரலாறு காணாத ஊழல்களின் அணிவகுப்பில் சிக்கித்திணறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, மத்திய அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்ப டுத்தி அம்பானியின் ரிலை யன்ஸ் கம்பெனி நடத்தியுள்ள மிகப்பெரும் எரிவாயு ஊழலி லும் சிக்கியுள்ளது.

மன்மோகன் சிங் அரசின் பெட்ரோலியத்துறை அதிகாரி களும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சட்டத்தை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கோடி அளவிற்கும் அதிகமாக மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதை மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கையகம் ஆதாரப் பூர்வமாக அம்பலப்படுத்தி யுள்ளது.

நாட்டு மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கும் இந்த அனைத்து ஊழல்கள் தொடர் பாகவும் தொடர்ந்து மவுனம் காக்கும் பிரதமர் மன்மோகன் சிங், ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தியுள்ள எரிவாயு ஊழல் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவசியம் பதில் சொல்லியே தீரவேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.

ஆந்திரா-ஒரிசா எல்லையை யொட்டி கிருஷ்ணா-கோதா வரி ஆறுகளின் கழிமுகப்பகு தியில் மிகப்பெரும் பெட்ரோ லியம்- இயற்கை எரிவாயு வளம் குவிந்திருக்கிறது. இந்த பகுதி யில் அரசு பொதுத்துறை பெட் ரோலிய நிறுவனங்கள், எண் ணெய் மற்றும் இயற்கை எரி வாயு சுத்திகரிப்பு பணியில் ஈடு பட்டிருந்தாலும், உள்நாட்டில் கிடைக்கும் இந்த மகத்தான வளத்தை கொள்ளையடித்து தனது லாபத்தை பெருக்க, பெரும் முதலாளியான முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இந்த பொதுச்சொத்தை பயன் படுத்துவதில் முகேஷ் அம்பா னிக்கும், அனில் அம்பானிக் கும் இடையே மோதல் கூட ஏற்பட்டது. முதலாளிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலை பிரதமர் மன்மோ கன் சிங்கும், ப.சிதம்பரம் உள் ளிட்ட அமைச்சர் பெருமக்க ளும் ஓடோடிச்சென்று தீர்த்து வைக்க முற்பட்டார்கள் என் பது தனிக்கதை.

இந்நிலையில், முகேஷ் அம் பானியின் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம், கிருஷ்ணா கோதாவரி இயற் கை எரிவாயு தளத்தில் (கேஜி கேஸ் பேசின்) மிகப்பெரிய 18 எரிவாயுக் கிணறுகளை, அர சிடம் ஒப்பந்தம் போட்டு பயன்படுத்தத் துவங்கியது. ஒரு குறிப்பிட்ட காலம் பயன்படுத் திவிட்டு-அதிலிருந்து பெட் ரோலியத்தையும் இயற்கை எரிவாயுவையும் எடுத்து கொள் ளை லாபம் பார்த்துவிட்டு- பின்னர் இந்தக்கிணறுகளில் பெட்ரோலியமோ அல்லது இயற்கை எரிவாயுவோ கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறியது. அதைத்தொடர்ந்து இதில் பெருமளவில் மூலதனச் செலவு செய்துவிட்டதாகக் கூறி, பெட்ரோலியத்துறை யிடமிருந்து மிகப்பெருமளவி லான தொகையை கறந்து விட்டது. இந்தத்தொகையின் அளவு ரூ.45 ஆயிரம் கோடி என்று அதிர்ச்சிதரத்தக்க அறிக் கை ஒன்றை மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை யகம் தயாரித்துள்ளது.

193 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின்படி, கிருஷ்ணா கோதாவரி எண் ணெய் மற்றும் எரிவாயுக் கிண றுகளில் உற்பத்தியை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப் பந்தங்கள் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், பெட்ரோலிய அமைச்சகத்திற் கும் இடையே மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் னர், சம்பந்தப்பட்ட எரிவாயு கிணறுகளை மீண்டும் அரசி டம் ஒப்படைக்காமல், ஒப்பந் தக்காலம் முடிந்தபின்னர் அதே கிணறுகளில் தனது தந்தை பெயரில் திருபாய் 1 மற்றும் திருபாய் 3 என சுத்திகரிப்பு ஆலைகளை முகேஷ் அம்பா னியின் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்தது. எண்ணெய் வளம் கொழிக்கும் கேஜி - டி6 பிளாக் எனப்படும் தளத்தை சட்ட விரோதமாகக் கைப்பற்றியே ரிலையன்ஸ் நிறுவனம் தனது சொந்த ஆலைகளை அமைத் தது. இப்படிச் செய்ததன் மூலம் அரசு நிறுவனங்களுக்கு 117 சதவீதம் அளவிற்கு வரு மான இழப்பை ஏற்படுத்தியது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த சட்டவிரோத செயல் களை சட்டப்பூர்வமாக ‘மாற் றியதில்’ காங்கிரஸ் தலைமையி லான அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முனைப் புடன் செயல்பட்டது. பெட் ரோலியத்துறையில் இயற் கை எரிவாயு தளங்களுக்கு பொறுப் பான ‘ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரக’த்தைச் சேர்ந்த மிக முக்கிய அதிகாரி கள் பெருமளவில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள்.

இந்த இயற்கை எரிவாயு தளங்களில் பணியைத்துவக்கிய போது தனது மூலதனச் செலவு என்று 2.39 பில்லியன் டாலர் களை கணக்குக்காட்டிய ரிலை யன்ஸ் நிறுவனம், பின்னர் மூலதனச்செலவினம் 8.8 பில்லியன் டாலர் என்று கணக் கை மாற்றி, அரசிடமிருந்து ரூ.45 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டது. இதுதொடர் பான ஏராளமான விவரங்கள் மத்திய தலைமை கணக்கு மற் றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நாட்டை உலுக்கியுள்ள இந்த ரிலையன்ஸ் எரிவாயு ஊழல் 2006க்கும் 2011க்கும் இடையில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெட்ரோ லியத்துறை அமைச்சராக இருந்தவர் முரளி தியோரா ஆவார். இவர் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கெல்லாம் ஏஜெண்டாக செயல்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சிதரத்தக்க இந்த விவரங்கள் கடந்த 2 நாட்களாக மன்மோகன் சிங் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள் ளன. பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சர்களுடன் அவ சரமாக கலந்தாலோசனைகள் நடத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா, தயாநிதிமாறன் போன்ற மத்திய அமைச்சர்களின் வரிசையில் முரளி தியோராவும் சிக்குகி றார். இவர்கள் அனைவருக்கும் தலைமைப்பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேள் விக்கு உள்ளாகியிருக்கிறார்.
==========================================================================
ஆஷ் படுகொலை-   -+ நூறாவது ஆண்டு
 
மணியாச்சி சந்தியில் படுகொலை செய்யப்பட்ட ஆஷ் தனது மனைவியுடன்
 ஆஷ் தனது மனைவியுடன்
*இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க அரசியல் படுகொலைச் சம்பவமென கருதப்படும், பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ் துரை, என்றறியப்படும், ராபர்ட் வில்லியம் டெஸ்கூர்ட் ஆஷ் என்ற அதிகாரி, சுதந்திரப்போராளி வாஞ்சிநாதனால், மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு( ஜூன் 17) நூறாண்டுகள் ஆகின்றன.
வாஞ்சிநாதன்
வாஞ்சிநாதன்
இந்தக் கொலைச் சம்பவம் குறித்தும், வாஞ்சியின் வாழ்க்கை குறித்தும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி, அவர்களுக்கு, கொல்லப்பட்ட ஆஷ் அவர்களின் பேரன், அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில், இந்தக் கொலை சம்பவம் குறித்து நினைவு கூர்ந்து எழுதியிருப்பதாக செய்திகள் தெரிவித்தன.
இந்த மின்னஞ்சல் குறித்து பேராசிரியர் வெங்கடாசலபதி பிபிசி தமிழோசைக்கு தெரிவித்த கருத்துக்களில், ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்ட நூறாண்டு, வெள்ளிக்கிழமை, நிறைவு பெறும் தருணத்தில், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு ஆஷின் பேரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில், நடந்தவைகள் மறக்கப்படவேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குதிரையில் ஆஷ்

ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்களால் ஒடுக்கப்படுவர்களாக இருந்தாலும், அரசியல் உக்கிரம்பெறும்போது, சில சமயம் பெரும் பிழைகளை செய்யும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன என்றும் அவர் எழுதியிருந்ததாக வெங்கடாசலபதி தெரிவித்தார்.
ஆனால், வாஞ்சிநாதனைப் பற்றி ஆஷ் துரையின் பேரன் பெரிய கசப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் வெங்கடாசலபதி.

# ஆஷின் குடும்பத்தினரின் இந்த கருத்தைப் பகிர்ந்துகொள்ள வாஞ்சி நாதனின் குடும்பத்தினர் எவரும் இன்று உயிருடன் இல்லை. அவருக்கிருந்த ஒரே ஒரு பெண் குழந்தையும் இறந்துவிட்டது. அவரது மனைவி பொன்னம்மாள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------
முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள தாவூத் இப்ராஹிம்
#உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளான அய்மேன் அல் ஜாவாஹிரி, சிராஜ் ஹக்கானி, மேஜர் இக்பால், சஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரை கைது செய்வதில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கவனம் செலுத்த வேண்டும்' என, அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் தொடர்பான இதழின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் நம்பர் ஒன் பயங்கரவாதியான ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொன்ற பின், அவரைப் பற்றி அமெரிக்காவின் உளவுப் பிரிவுக்கு தகவல் கொடுத்தவர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கண்டுபிடித்து கைது செய்துள்ளது. மிக விரைவில் இதைச் செய்துள்ளது. அதே நேரத்தில், உலக நாடுகளால் தேடப்படும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் மிக மோசமான பயங்கரவாதிகளை மட்டும் ஐ.எஸ்.ஐ.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானில், பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளான அய்மேன் அல் ஜாவாஹிரி, சிராஜ் ஹக்கானி, மேஜர் இக்பால், சஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரை, ஐ.எஸ்.ஐ., கைது செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

மும்பையில், 2008ம் ஆண்டில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய சஜித் மிருக்கு, லஷ்கர்- இ- தொய்பா மற்றும் ஐ.எஸ்.ஐ.,யுடனும் தொடர்பு உண்டு. ஆனால், இதை ஐ.எஸ்.ஐ., மறுத்து வருகிறது. மும்பை சம்பவத்தில், அமெரிக்காவின் டேவிட் ஹெட்லியை, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தியவரும் சஜித் மிர் தான். சஜித் பேசிய தொலைபேசி உரையாடலில் இருந்து இது தெரிய வந்துள்ளது. இப்போதைய அல்-குவைதா தலைவர் அய்மேன் அல் ஜாவாஹிரியும், ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கி, பயங்கரவாதிகளை பணியில் அமர்த்திய சிராஜ் ஹக்கானியும் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கின்றனர். 2008ல், மும்பையில் தாக்குதல் நடத்த மேஜர் இக்பால் தான் நிதி உதவி அளித்ததாக அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.

மும்பையில், 1993ல் நிகழ்ந்த தொடர்ந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாயினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில் தான் மறைந்திருக்கிறார். அவர் தன் அடையாளத்தை மறைப்பதற்காக, முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இவருக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு உள்ளது. இவர்களை எல்லாம் பிடிப்பதில் ஐ.எஸ்.ஐ., தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?