ஸ்பெக்ட்ரம்:


ஆ.ராசாவின் கேள்விகள்.


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனக் காக வாதாடி வரும் முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தொடர் பல்டி அடித்து வருகிறார். முன் னுக்குபின் முரணான வாதங் களை அவர் முன்வைத்து வருகிறார்.

திங்களன்று வாதாடிய அவர், பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதிய மைச்சர் ப.சிதம்பரம் ஆகி யோருக்கு தெரிந்துதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்தும் நடந்தது என்று கூறினார்.

ஆனால், செவ்வாயன்று ஆ.ராசாவின் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் சுசீல்குமார், பிரதமர் மன் மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது ஆ.ராசா வின் கருத்தல்ல என்றும், பத்திரிகைகள் அவ்வாறு திரித்து எழுதிவிட்டன என் றும் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்கிவிட்டன என்று திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூறி வரும்நிலை யில், ஆ.ராசாவின் வழக்கறி ஞரும் அதை எதிரொலிக் கும் வகையில் இவ்வாறு கூறினார். ஊடகங்கள் தங்க ளது வார்த்தைகளை எனது வாயில் திணிக்கக் கூடாது. நீதிமன்றத்தை விட்டு வெளி யே செல்லும்போது உண் மையை மட்டும் அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆ.ராசாவின் கருத் தை வழக்கறிஞர் கூறினார்.

ஆனால், இவ்வாறு கூறிய ஒரு மணி நேரத்தி லேயே அவர் தனது கருத் தை மாற்றிக் கொள்ளும் வகையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை யில் சாட்சியாக அப்போ தைய நிதியமைச்சர் ப.சிதம் பரத்தையும் சேர்க்க வேண் டும் என்று தனது வாதத்தில் ஆ.ராசா குறிப்பிட்டார்.

ஸ்வான் மற்றும் யுனி டெக் நிறுவனங்கள் தங்க ளது பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றது தொடர்பாக ப.சிதம் பரத்தை சாட்சியாக விசா ரிக்க வேண்டும் என்று கூறிய அவர், எனது நிலையைத் தான் நான் நியாயப்படுத்துகி றேன். யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் தவறு நடந் தது என்று பிரதமர் மன் மோகன்சிங் கருதியிருந் தால், இந்தப் பிரச்சனையை மத்திய அமைச்சர்கள் குழு வின் பரிசீலனைக்கு அவர் அனுப்பாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். அவ்வாறு அவர் அனுப் பாத நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் குற் றத்தில் பங்கு உண்டு என்றார் அவர்.

இந்தப் பிரச்சனையை மத்திய அமைச்சர்கள் குழு வுக்கு அனுப்பாமல், பிர தமர் மன்மோகன்சிங் நிராக ரித்தது ஏன்? இதுகுறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர்கள் குழுவை அவர் அமைக்காதது ஏன்? அவரது கடமையை அவர் செய்யாததால் சதி நடவடிக் கை என்று கூறப்படுவதில் அவருக்கும் பங்கு உண்டு என்று பொருளாகிறது என்றார் ராசா.

தம்மை ஜாமீனில் விடு தலை செய்ய வேணடும் என்றும், சட்டவிரோதமாக தம்மை சிறையில் அடைத் திருப்பதாகவும் ஆ.ராசா கூறினார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?