பலவீனமாக்கப்படும்-2-ஜி


 யாரைக் காப்பாற்ற?


ஆறு மாதங்களுக்கு முன் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒருகோடியே 76 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த குற் றச்சாட்டு நாட்டை ஓர் உலுக்கு உலுக்கியது. காரணம், அந்தக் குற்றச்சாட்டை பொது அரங் கில் வைத்தது எதிர்க்கட்சிகள் அல்ல. ஊட கங்கள் அல்ல. அரசை விமர்சிக்கும் சமூக நல ஆர்வலர்கள் அல்ல. விக்கிலீக்ஸ் அல்ல. அந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டவர் தேர் தல் கமிஷன் போல அரசமைப்புச் சட்டத் தால் சுயாட்சி வழங்கப்பட்ட மத்திய கணக்கு மற்றும் தணிக்கை ஆணையர்(ஊஹழு).

அதையடுத்து அரசியல் அரங்கம் பரபரப் பானது. ஊடகங்கள் உரத்து முழங்கின. நாடா ளுமன்றம் செயல்பட முடியாமல் நாள் கணக் கில் முடக்கப்பட்டது. தொலைத் தொடர்புத் துறைக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குத் தொடர பிரதமர் அனு மதி அளித்தார். ராசா ராஜினாமா செய்தார். மத் தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத் தரவாயிற்று. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சாதிக் பாட்சா என்ற அவரது நண்பர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். சதியில் கூட்டு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கைது செய்யப்பட்டார். இந்தியாவின் முக்கியமான தொலைத் தொடர்பு நிறுவனங் களின் முதல் நிலை அதிகாரிகள் கைது செய் யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு அனைவரும் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

இதையெல்லாம் இன்னும் நாடு மறந்து விடவில்லை. இதற்கெல்லாம் ஆதாரமான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறை கேடுகளால் அரசுக்கு கோடிக்கணக்கில் வரு வாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் மறந்து விடவில்லை. அதிலும் முக்கியமாக, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதே தவிர அரசியல்வாதிகள், அவர்களது நிறுவனங்கள் ஆதாயம் அடைந் தன என்பதையும் மக்கள் மறந்து விடவில்லை.

ஆனால்- வரும் செப்டம்பர் 15ம் தேதி சிபிஐ 2 ஜி வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருக்கும் நேரத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம் (டிராய்) ஓசைப்படாமல் ஒரு குண்டை வீசி இவை அனைத்தையும் அர்த்தமில்லாத தாகச் செய்திருக்கிறது.

அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று துல்லிய மாகச் சொல்வதற்கில்லை’ என்கிறது டிராய். அது மட்டுமல்ல, ராசா அரசின் கொள்கை களைத்தான் கடைப்பிடித்தார் என்றும் சொல்கிறது.

ஒருவர் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதைச் சட்டம் இரண்டு அம்சங்களின் அடிப்படை யில் தீர்மானிக்கிறது. குற்ற நோக்கம் ,குற்றச் செயல் என்பவை அந்த அம் சங்கள். இந்த இரண்டையும் சந்தேகத்திற்கு இடமில்லாத சாட்சியங்கள் மூலம் நிரூபித் தால் தான் சம்பந்தப்பட்டவர் குற்றம் புரிந்தார் எனக் கருதப்பட்டு தண்டனை அளிக்கப்படும். ராசா, அரசின் கொள்கைகளைத்தான் பின்பற் றினார் என்றால் அவருக்கு குற்ற நோக்கம் இல்லை என்று கருதப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் அவரது நோக்கம் அரசின் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவது. குற்றம் செய்வதல்ல. அப்படி நடைமுறைப்படுத்திய தன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏதும் இல்லை என்றால் அங்கே குற்றச் செயலும் நடைபெறவில்லை என்று தான் கருதப்படும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைத்தான் ராசா, தான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ராசா மற்றும் கனிமொழியின் வழக்கறிஞர் சுஷீல் குமார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன் வைத்த வாதங்கள் இவை: 2 ஜி அலைக் கற்றையை ஏலம் விட வேண்டாம் என்பது அரசின் கொள்கை முடிவு; அதனால் தான் ஏலம் விடவில்லை; எனவே ஏலம் விட்டிருந் தால் இவ்வளவு பணம் வந்திருக்கும், விடாத தால் அது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை; இழப்பு இல்லை என்னும் போது மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது இன்னொரு வாதம்: அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் டெலி காம் பிரைவேட் லிமிட்டெட், யூனிடெக் வயர் லெஸ் (தமிழ்நாடு) பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை விற்கவில்லை, தங்கள் நிறுவனங்களின் பங் குகளை அரசின் அனுமதி பெற்று அயல் நாட்டு நிறுவனங்களான எடிஸாலட், டெலி னார் நிறுவனங்களுக்கு விற்று தங்கள் மூல தனத்தை விரிவுபடுத்திக் கொண்டன. இதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை.
                                                     
ஏறத்தாழ இதே குரலில் பேசுகிறது டிராய். தவறேதும் நடக்கவில்லை, இழப்பேதும் ஏற்படவில்லை என்றால் அன்று ஏன் அரசு, ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத் தது? ஏன் அவரைப் பதவி விலகச் சொன் னது? அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டது? அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது? அவரது ஜாமீன் மனுவை எதிர்த்து வழக்காடியது? இதையெல்லாம் செய்த அரசு இப்போது ஏன் குரல் மாற்றிப் பேசுகிறது?

அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இன்னொரு செய்தியைக் கவனிக்க வேண்டும்.

ராசாவும் கனிமொழியும் ஏலம் விட வேண் டாம் என்ற முடிவை எடுத்தது நாங்களல்ல என்ற வாதத்தை மட்டும் வைக்கவில்லை. அதை எடுத்தது பிரதமரும் மற்ற அமைச்சர் களும் தான் என்று பிரதமரையும் வழக்கிற்குள் இழுத்தனர். “நான் உங்களுக்குக் காண்பிப்பது பிரதமர், அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்ட கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பு (அiரேவநள) இந்தக் கூட்டத்தில் 2 ஜி அலைக்கற்றையை ஏலம் விடவோ, விற்க வோ கூடாது என்று முடிவெடுக்கப்பட்டிருப் பதைப் பாருங்கள்” என்று நடவடிக்கைக் குறிப்பை நீதிபதி முன் வைக்கிறார் சுஷீல் குமார். “உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அயல்நாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் விஷயம் பிரதமருக்கும் நிதி அமைச் சருக்கும் தெரியும். அன்றைய நிதி அமைச்சர், இன்றைய உள்துறை அமைச்சர், பங்குகளை விற்பது 2ஜி உரிமங்களை விற்பதாகாது என்று பிரதமரின் முன்னிலையில் கூறினார். முடிந் தால் இதை பிரதமர் மறுக்கட்டும்” என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏதே னும் முறைகேடுகள் இருந்தால் அதை பிரத மர் ஒரு அமைச்சர் குழுவை அமைத்து விசா ரித்திருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை என்பது இன்னொரு வாதம்.

ராசாவும் கனிமொழியும் சிதம்பரத்தை இந்த வழக்கில் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண் டும் எனவும் கோரியுள்ளனர்.

இதெல்லாம் நடந்தது ஆகஸ்ட் 23ம்தேதி. பிரதமர், சிதம்பரம் ஆகியோரது பெயர்கள் இழுக்கப்பட்டதற்கு ஒரு வாரத்திற்குப் பின் டிராய், அணுகுண்டைப் போடுகிறது.

டிராய் அறிக்கை வெளியான அதே செப் டம்பர் 1ம் தேதி சிபிஐயிடமிருந்து வேறு மூன்று தகவல்கள் வெளி வருகின்றன.

ஒன்று, உச்சநீதிமன்றத்தில் 2 ஜி அலைக் கற்றை வழக்கின் தற்போதைய நிலவரம் பற்றி அது தாக்கல் செய்த அறிக்கை. அதில் ஏர் செல் நிறுவனத்தை மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு தயாநிதிமாறன் வற்புறுத்தியதாக வோ, நெருக்கடி கொடுத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனச் சொல்லியிருக்கிறது.

மற்ற இரண்டு தகவல்களும் அலைக்கற் றை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டவை அவை: அம்பானி யோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும், உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் - ஏடிஏஜிக்கு எந்தச் சதியிலும் பங்கில்லை என்பது ஒன்று. மற்றொன்று, அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந் ததாகக் கூறப்படும் யூனிடெக் நிறுவனம் லஞ் சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பது.

லஞ்சம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மையானால் லஞ்சம் பெறப்படவில்லை என்பதும் உண்மையாகி விடுமல்லவா?

இவை எல்லாம் எதைக் காட்டுகிறது?

2 ஜி வழக்கில் இன்று குற்றம் சாட்டப்பட் டுள்ளவர்களில் பலர் எந்தவிதத் தண்டனை யும் இன்றி விரைவிலேயே வெளியில் வந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என் பதைத்தான். வேறு வார்த்தைகளில் சொல்வ தானால் 2 ஜி வழக்கு தீபாவளிக்கு முன்னரே கூட புஸ்வாணமாகலாம்.

ஆனால், இன்னொரு புறம் உச்சநீதிமன் றத்தின் கண்காணிப்பு இருப்பதால், அரசு இந்த வழக்கில் தீவிரமாக இருப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. 2 ஜி ஊழல் புகாரில் தொடர்புள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலா வணி விதிகளை மீறியிருப்பதாக அமலாக்கப் பிரிவு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கி றது. இதில் 200 வங்கிக் கணக்குகள் சம்பந் தப்பட்டிருப்பதாகவும், ஆறு கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், கள்ளப் பணத்தை ‘சலவை’ செய்வதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் சொத்துக்களை முடக்கப் போவதாகவும் அது தெரிவிக்கிறது. சைப்ரஸ், சிங்கப்பூர், சானல் தீவுகள், மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணம் பதுக்க/முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவதாகவும் அது கூறியிருக்கிறது.

அதாவது, அரசின் ஒரு துறையான டிராய் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று சொல்கிறது. அதே நேரம் இன்னொரு அரசுத் துறையான அமலாக்கப் பிரிவு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்தி ருப்பதாகச் சொல்கிறது!

அன்னா ஹசாரேயின் அறப்போராட்டம் அரசுக்குப் பல விதங்களில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டி ருந்த விவாதம், மக்கள் மன்றத்திற்கு வருவ தற்கு அந்தப்போராட்டம் காரணமாயிற்று. அந் தப் போராட்டம் அத்தனை பெரிய அளவில் எழுச்சி பெற, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் குறித்த செய்திகள் மக்கள் மனதில் இருந்தது ஒரு மறைமுகக் காரணம் என்று அரசியல் ஆய்வா ளர்கள் சொல்லி வருகிறார்கள்.
                 
ஸ்பெக்ட்ரம் வழக்கை ஒரு புறம் நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கும் வேளை யில், அன்னா ஹசாரேவையும் கட்டுக்குள் வைக்க அரசு முனைந்திருக்கிறது. அவருக்கு வலதுகரமாக இருந்து போராட்டத்தை கட்டமைக்க உதவிய கிரண்பேடி, பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மீது நாடாளுமன்றத்தின் உரிமைகளை மீறியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நாடாளு மன்ற உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறை வாகப் பேசியதாகப் புகார். உரிமை மீறல் நிகழ்த் தப்பட்டதா இல்லையா என்று முடிவு செய் வது நீதிமன்றம் அல்ல. நாடாளுமன்றம் தான். எனவே அந்த முடிவு என்னவாக இருந்தா லும் அவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங் கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு புறம் தன் மகன் பிரசாந்த் பூஷன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வரை விலைக்கு வாங்கலாம் என சாந்தி பூஷன், அமர்சிங்கிடம் நடத்திய உரையாடல் கொண்ட சிடி போலியானதல்ல என தில்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது. ‘இந்த உரை யாடல் போலியானது. வெட்டி ஒட்டப்பட்டது’ என பிரசாந்த் பூஷன் முன்பு மறுத்திருந்தார்.

முன்பு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக வரு மான வரித்துறையில் பணியாற்றியபோது சில விதிமுறைகளை மீறிவிட்டார் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வருமானவரித்துறை நோட் டீஸ் அனுப்பியிருக்கிறது.

சமூக ஆர்வலர்களுக்கு சங்கடங்கள் ஏற் படுத்தும் அதே நேரம், கவனத்தை எதிர்க் கட்சிகள் மீது திருப்பவும் முயற்சிகள் நடக் கின்றன. செப்டம்பர் 1ம் தேதி சிபிஐயின் வழக் கறிஞர் கே.கே.வேணுகோபால், “மத்தியில் ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதி மீறல்கள் நடந்துள்ளன. அது தொடர்பாக அந்த அரசில் நிதி அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த அருண்ஷோரி ஆகியோர் விரைவில் சிபிஐ யால் விசாரிக்கப்படுவார்கள்” என்று தெரி வித்திருக்கிறார்.

இன்னொரு புறம் இன்றைய அமைச்சர்க ளின் கைகள் சுத்தமானவை எனக்கூறாமல் கூறுவதற்காக மத்திய அமைச்சர்களின் சொத்துக் கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. (பார்க்க : பெட்டிச் செய்தி)

ஒருபுறம் 2 ஜி வழக்கின் அடிப்படையை யே ஆட்டம் காணச் செய்யும் தகவல், இன் னொரு புறம் குற்றச்சாட்டுக்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம் சமூக ஆர்வலர்களைக் களைத்துப் போகச் செய்யும் முயற்சி, வேறொரு புறம் கவனத்தை எதிர்க்கட்சிகள் மீது திருப்புதல் என மிகச் சாமர்த்தியமாக 2 ஜி விவகாரத்தில் காய்களை நகர்த்தி வருகிறது அரசு. இவற்றைப் பார்க்கும் போது நம் மனதில் எழும் கேள்வி ஒன்றுதான்.

இதெல்லாம் யாரைக் காப்பாற்ற?



சொத்து விஷயமும் சொந்த விஷயமும்

கடந்த வாரம் பிரதமர் அலுவலக இணையதளத்தில் மத்திய அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்களில் பணக்கார அமைச்சர் கமல்நாத். அவருக்கு 263 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. ஏழை அமைச்சர் அந்தோணி. இவர் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வங்கி டெபாசிட்டாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆறுபேரில் சொத்து மதிப்பில் முதலிடத்தில் இருப்பவர் அழகிரி. இவருக்கும் மனைவி காந்தி அழகிரிக்கும் சேர்த்து சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய். இரண்டாவதாக இருப்பவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். சொத்து மதிப்பு 25 கோடி. நெப்போலியன் 13 கோடி. ஜி.கே.வாசன் 2.30 கோடி. பழனிமாணிக்கம் 1.53 கோடி. மிகக்குறைந்த சொத்து வைத்திருப்பவர் காந்தி செல்வன் 72.02 லட்சம்.

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதால் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சொத்துப்பட்டியலை வெளியிடவேண்டும் எனச் சொல்லியிருந்தார். மூன்று முறை பிரதமர் வலியுறுத்திக் கேட்டபின் அமைச்சர்கள் விவரங்களைத் தெரிவித்துள்ளனர். அப்படியும் விவரம் தெரிவிக்காத சிலர் இருக்கிறார்கள். விலாஸ்ராவ் தேஷ்முக், ஜெயந்தி நடராஜன், ஜித்தேந்தர் சிங், ஜெகத்ரட்சகன் ஆகியோர் தவிர மற்றவர்களின் சொத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பலர் வீடு, நிலம் இவற்றின் சந்தை மதிப்பைக் குறிப்பிடாமல் அவர்கள் வாங்கின விலையைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக பிரபுல் படேல் மத்திய மும்பையில் உள்ள தனது இரண்டு ஃபிளாட்களின் மதிப்பு 6 லட்ச ரூபாய் என்று கொடுத்துள்ளார். ஆனால் இந்த விலைக்கு மும்பையில் குடிசைப் பகுதியில் கூட வீடு வாங்க முடியாது.

சிலர் சந்தை மதிப்பைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அதை மிகக்குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக, பிரதமர் மன்மோகன் சிங் தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள தனது அபார்ட்மென்ட்டின் மதிப்பு 88.77 லட்சம் என்று கூறுகிறார். இந்த விலைக்கு அதை விற்க அவர் தயாராய் இருந்தால் வாங்குவதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும்.

இன்னும் பல அமைச்சர்கள் மதிப்புமிக்க சொத்துக்களை தங்கள் பெயரில் காட்டாமல் தங்களின் மனைவியின் பெயரில் காட்டியுள்ளனர். உதாரணமாக, அவர்களிடம் இரண்டு கார்கள் இருந்தால் அவற்றில் விலை உயர்ந்த கார் மனைவியினுடையதாக இருக்கும்.

இவற்றைவிட சுவாரஸ்யமான விஷயம்; நாட்டில் தனியார்மயத்தையும், தாராளமயக் கொள் கையையும் அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங். அந்நிய முதலீடுகளைப் பற்றி அடிக்கடி பேசுபவர். அவர் தனது சொந்தப்பணமான 3.5 கோடி ரூபாயை எந்த வங்கியில் டெபாசிட்டாகப் போட்டிருக்கிறார் தெரியுமா? பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில்
நன்றி;புதிய தலைமுறை
                                           

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?