மக்களை எரிக்கும் பெட்ரோல் ?

பெட்ரோல் விலை நிர்ணயம்  மறைக்கப்படும் மர்மங்கள்
                                                                                             -எம்.கண்ணன்
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட் களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க் கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப் போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந் திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?
                               

 விலை நிர்ணயம் செய்வது யார்-எப்படி?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசுஎப் படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப் படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்து கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங் கியுள்ள வரியினங்கள் வருமாறு (24.8.2011)

ஆதார விலை - ரூ. 24.23

சுங்கத்தீர்வை - ரூ. 14.35

கல்விவரி - ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் - ரூ. 1.05

சுத்திகரிப்பு செலவு - ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு - ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி - ரூ. 5. 50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி - ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் - ரூ. 60.72 


இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக் கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படு கின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை லாப கணக்கே... தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடா ளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 - 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட் களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி. ஆனால் இதே காலத் தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயி ரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசு களுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானி யமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
                                     

உண்மையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டமா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த் தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவா லியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ. 2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட் களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் ( 2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

[2010-2011]ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்

(கோடியில்) 

ஐஒசி5294.00,832.27,6126.27                                                                                    எச்பிசிஎல் 2142.22 ,90.90, 2233.12 

பிபிசிஎல் 2142.22 ,198.00 ,2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமை யிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறு வனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு எதற்காக வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட் கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடு களுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறு வனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட் களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் கார ணம் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்று மதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அத னையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட் ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக் கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வரு மானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடை யும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை யைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழை கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன் மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது மக்கள் நலனுக்கான அரசா? 
                                      
எப்போது பார்த்தாலும் விவசாயத் திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானி யத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு அளிக் கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் சொனியா,மன்மோகன் சிங் அரசு குறியாக இருந்து வருகிறது. 
          
ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முத லாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக் கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடி யை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரி களில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகை கள் அளித்திருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழை களை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர் களை மேலும் பணக்காரர் களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்குவதேலட்சியாமாகக் கொண்டு சோனியா-ராகுல் காங்கிரசு செயல்பட்டு வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து முறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்.
                                                                                            நன்றி: தீக்கதிர்,
_________________________________________________________________________________
மத்திய அரசின் உதவியுடன்   வெள்ளையாகிறது கருப்பு


வெளிநாடுகளில் இந்தியர் களின் சட்டவிரோதக் கருப்புப் பணம் பாதுகாப் பாக இருப்பதும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக ஆக்குவதும் மத்திய அர சின் ஒத்தாசையுடன் தான். கருப் புப் பணத்தைத் தடுக்கவும், ஸ்விஸ் நாட்டு வங்கிக் கணக்கை விசாரிக் கவும் நட வடிக்கை எடுக்கப் படும் என்று கூறுகிற மத்திய அரசு, மறு பக்கம் இந்தக் கருப்புப் பணக் காரர்களைப் பாதுகாப்பது 30 ஆண்டுக்கால ஸ்விஸ் அக் கவுண்ட் வரலாறாகும்.
                        ஒரு இந்திய தொழிலதிபரின் குடிசை

அரசியல் தலைவர் களும் பெரும் தொழிலதிபர் களும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் உள்ளிட்ட ஒரு பெரும் கூட்டம் தான் அரசுக்கு வரி செலுத்தா மலும், தங்களுக்குப் பெரு மளவு பணம் வரும் வழியை அரசுக்குத் தெரிவிக்காமலும் அந்நிய நாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள். வெளி நாடு களில் திரட்டிய கள்ளப் பணத்தை வெள்ளைப் பண மாக ஆக்குவதற் கான தந்திரம் ஏற்றுமதிக் கணக் கிலான மோசடி மூலம் செய்யப் படுகிறது. இதுவும் மத் திய அரசுக் குத் தெரிந்தே நடக்கிறது. மிகப் பெரும் வசதி படைத்த இந்தியர் களின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் பல்வேறு வெளிநாடுகளின் வங்கிகளில் சேமித்து வைக்கப் பட்டுள்ளது என்பது வெளிப்பட் டுள்ள கணக்கின் படி தெரிகிறது. இவற்றில் மிக அதிக தொகை போடப்பட்டுள்ளது ஸ்விஸ் வங்கிகளிலாகும்.

ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயி ரம் பேர் ஸ்விஸ் நாட் டுக்குப் பயணமாகிறார்கள். இவர்களில் 25 சதவிகிதம் பேர் இந்நாட்டுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்கிற வர்கள். இந்த இரு பிரிவுகளிலும் அதிகம் பேர் இந்தியர்கள் தான். உச்சநீதி மன்றம் கேள்வியெழுப் பிய பிறகுதான், வெளிநாடுகளின் வங்கிகளில் கருப்புப் பணம் போட்டு வைத்துள்ளவர்களின் பெயர் முதலான விவரங்களைத் தரவேண்டுமென ஸ்விஸ் உள் ளிட்ட நாடுகளிடம் இந்திய அரசு கோரியுள்ளது. இதுவும் கூட கருப் புப் பண முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்துத்தான் கோரியுள் ளது. சுவிஸ்வங்கியில் மூன்று கேரள எம்.பி.க்களுக்கும் கணக்கு உள்ளதென்ற செய்தி வந்ததைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருப்புப் பணக்காரர்களின் பெயர்களை வெளியிடப்போவதில்லை என்று சொன்னது இந்த உறுதி மொழியின்படிதான்.
                                 
                            இந்நாட்டு மன்னர்களின் அரன்மனைவளாகம்
கருப்புப் பணம் குறித் துத் தொடர்ந்து செய்திகள் வருவ தாலும், கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க சர்வதேச அளவில் முயற்சி நடப்பதாலும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பண மாக்குவதற்கான வேலை மிக வேகமாக நடைபெறுகிறது.

சுரங்கத் தொழில், பங்கு மார்க்கெட், மருந்துக் கம் பெனி வட்டாரங்கள் தான் ஏற்றுமதியில் பொய்க் கணக்குகளை உருவாக்கி, கருப்புப் பணத்தை வெள் ளைப் பணமாக்க உதவுகின் றன. இதற்கு அரசு நிர்வா கங்களும் உதவியாக இருக் கின்றன. 2010-11 ல் ஏற்றுமதி யில் 79 சதவிகிதம் அதி கரிப்பு என்பது இதன் மூலம் தான் என்று சுட்டிக்காட் டப்படுகிறது. செம்பு உப கரணங்களின் ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்தது என் கிற கணக்கு தொழில் துறையை அதிரச் செய்துள்ளது. இந்த அளவுக்கு செம்பு உபகரணங் களை ஏற்றுமதி செய்வதற்கான செம்பு உற்பத்தித் திறன் இந் தியா விடம் இல்லை. செய்யாத ஏற்று மதியைச் செய்ததாகக் காட்டி கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு இது ஓர் உதாரணம்.

ஸ்விஸ் வங்கியில் மிக அதிகமாய்க் கணக்கு வைத் திருப்பவர்கள் இந்தியர்கள் தான் என்பது ஸ்விஸ் பாங் கிங் அசோ சியேசன் வெளி யிட்ட கணக்கில் ஏற்கெனவே தெளிவாகியிருக்கிறது. தேசத்தின் ஜிடிபியின் 40 சதவிகித தொகை அந்நிய நாடுகளில் சட்ட விரோத மாகச் சேமிக்கப்பட் டுள்ளது.
__________________________________________________________


பணக்கார வங்கிகளில் கணக்கு முடிப்பு
                

தொழிலதிபர்களின் ஆதிக்கத்தை ஒழித்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் வால் ஸ்டீரிட் முற்றுகை நடத்தும் போராட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த போராட்டம் இங்கிலாந்து உள்பட பல நாடுகளுக்கும் பரவியது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தனியார் வங்கிகளில் வைத்திருந்த வங்கி கணக்குகளை முடித்துக் கொண்டு, லாப நோக்கின்றி செயல் படும் உள்ளூர் கூட்டுறவு வங்கிகளில் புது கணக்கு தொடங்கி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'தேசிய வங்கிக்கணக்கு மாற்ற தினம்' என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் சியாட்டல், வாஷிங்டன் உள்பட பல நகரங்களில் வங்கி கணக்கை 'குளோஸ்' செய்து விட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், 'பெரிய பெரிய தனியார் வங்கிகளில் குவிந்து கிடக்கும் பணத்தை உள்ளூர் கூட்டுறவு வங்கிகளுக்கு மாற்றுவதே நோக்கம்.
லாப நோக்கின்றி செயல்படும் கூட்டுறவு வங்கிகளால் உள்ளூர் மக்கள் பெரும் பயனடைவார்கள்' என்று தெரிவித்தனர். பேங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ உள்பட பல பெரிய தனியார் வங்கிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை 6.5 லட்சம் வாடிக்கையாளர்கள் தனியார் வங்கி கணக்கை முடித்து கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர் என்று தேசிய கூட்டுறவு வங்கி சங்கம்தெரிவித்துள்ளது.
      

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?