இடுகைகள்

ஏப்ரல், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயற்பியலே கடவுள்,,,,,,

படம்
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே                                          -ஸ்டீபன் ஹாக்கிங் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங். Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய ‘த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகள

இந்திய-இலங்கை ஒப்பந்தம்,{ரகசிய .?}

படம்
சிங்களஅரசு இந்திய அரசுக்கு வழங்கிய சில உறுதிமொழிகளை அடுத்து சிங்கள அரசுக்கு இந்தியாஆதரவு அளிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.பக்‌ஷே அரசு இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.  தொலைபேசி மூலம் நடந்த இப்பேச்சு வார்த்தையில் விடுதைலைப்புலிகளுக்கு எதிரானபோர் முடிவுற்ற பின்னர் இந்தியாசெய்த உதவிகளுக்கு பலனாக வழங்கிய உறுதிமொழிகளே அவைகள். இதற்கு முன்உருவான ஒப்பந்தங்களையே ராஜபக்‌ஷே அலட்சியம் செய்யும் போது வெறும் வாய் வார்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு ரகசியமாக புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கென  இந்திய_-சிங்கள அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்த ஆதரவு என்பது காங்கிரசின் துரோகத்தை மீண்டும் ஒருமுறை இப்போது பார்க்கப்போகின்றோம்.சிங்களம் வழங்கிய உறுதிமொழிகளில் அதிகரப்பரவலாக்கமும் அடங்குமாம். சில நாட்கள் முன்னர் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டு காவல்த்துறை செயற்படத் தொடங்கினால் தன்னால் கூட பாதுகாப்பாக தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர முடியாது என மகிந்த குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக

குற்றவாளிகள்,,,,,,

படம்
எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போர்க் குற்றத்தில் பங்கு,,,,,,,,,,,,,,, இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது. இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுண

இதுவாக இருக்கலாம்........

படம்
ஜெயிக்கப்போவது யாரு,? தேர்தல் முடிந்து மாதக்கணக்கில் இத்தேர்தலில் முடிவு காண காத்திருக்க வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் தமிழக மக்களை வைத்து விட்டது.அதற்கு காரணம்  என்ன என்றுத் தெரியவில்லை.மற்ற மாநிலத்தில் தேர்தல் என்பது சரியான காரணமாகத் தெரியவில்லை.அப்படி என்றால் தேர்தலை சற்றுத்தள்ளி வைத்திருக்கலாமே? அவசர அவசரமாக நடத்த வேண்டிய தேவை என்ன? சரி விடுங்க.நடந்து முடிந்த கதை. இப்போது லட்சக்கணக்கில் பந்தயம் கட்டும் விடயமாக இத்தேர்தல் காத்திருப்பு  ஆகிவிட்டது.பல கோடிகள் “யார் ஜெயிப்பார்?” என பந்தயத்தில் புரளுவதாகத் தெரிகிறது.    களம் இறங்கி கருத்து கேட்டும்,பத்திரிகை அலுவலக நாற்காலியில் உட்கார்ந்தே கருத்துக் கணித்தும்[?] பல் வேறு முடிவுகள் நம் தமிழக,இந்திய பத்திரிகைகளில் வந்து விட்டன.அதைப் படிப்பவர்கள்.ஒரளவு தெளிவுடனும்.சற்றுக் குழப்பத்துடனும் தங்கள் கருத்தைச் சேர்த்தும் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்.இப்போது எனது முறை.என்னால் முடிந்த அளவு கருத்துக்களைக்கூறி உங்களைக் குழப்பவே இது.                                                                   இது நிச்சயமாக அலுவலக நாற்காலிக்

புலம் பெயர் தமிழர் செய்த குற்றம்,,,,,,,

படம்
சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.                                                                                                                                                                              ஐ நா அறிக்கை - புலம்பெயர் தமிழர் மீது குற்றச்சாட்டு  ----------------------------------------------------------------------- இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ஆதரவையும் பல ஆண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் என்றும் இவர்கள் இலங்கை அரசு

கதைவிடும் நேரம்,,,?

படம்
                           ஜெ,,,யின் கதை........                                                                                                                           எழுத்தாளர் வாஸந்தியின் ஜெயலலிதா-ஒரு சொல்லோவியம் (ஏ போர்ட்ரேட்) என்ற புத்தகத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஜெயலலிதா தாக்கல் செய்த  வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது:  ஒருவரைப்பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் தகவலை சரிபார்த்துவிட்டு, அவரது கருத்தையும் சேர்த்து வெளியிடுவதுதான் பத்திரிகைகளின் நடைமுறையில் இருந்து வரும் விஷயமாகும். ஒருவரது வாழ்க்கை சரிதையை வெளியிடுவதற்கு முன்பதாக இந்த நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த நிலையில் வாஸந்தி, " ஜெயலலிதா ஒரு சொல்லோவியம்' ' (ஜெயலலிதா ஏ போர்ட்ரேட்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை புதுடெல்லியில் உள்ள பென்குயின் புக்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் வரும் மே மாதம் வெளியிட உள்ளது.   வெளியாக இருக்கும் அந்த புத்தகத்தில் உள்ள ஒரு பகுதி ஆங்கில வாரப்பத்

தமிழ் வாழ்க,,,,,,

படம்
2ஜீ அலைக்கற்றை இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தயாளூ அம்மாள் விடுபட காரணம் தயாளு அம்மாள் முன்பு எழுதிய கடிதம் தானாம். கலைஞர் தொலைக்காட்சி நி ர்வாகி சரத்குமாருக்கு தொலைக்காட்சி ஆரம்பித்தபோது ”தனக்கு தமிழைத்தவிர ஆங்கிலம் போன்றவைத்தெரியாது எனவே நிவாகத்தை அவரே நல்லமுறையில் கவனித்துக்க்ள்ள வேண்டும்”என எழுதிய கடிதம் கூட்டப்பதிவுகள் சி.பி.அய் வசம் கிடைத்ததுதான் காரணம்.இதன் மூலம் அவருக்கு கடனாகப்பெற்ற விபரம் எதுவும் தெரியாது.விசாரிப்பது தேவையற்ற வேலை என சி.பி.அய் ,முடிவெடுத்ததாம். தமிழ் கலைஞரை மட்டுமல்ல அவரது மனைவியையும் காப்பாற்றியுள்ளது.   ================================================================================================ கறுப்புப் பணப்பட்டியல் விக்கி லீக்ஸ் வெளியிடப்போகிறதாம் ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளனர். கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 10 பேர் கொண்ட குழுவை  மத்திய அர

2-ஜியும் அல்கொய்தா அணுகுண்டும்,,,,,,,

படம்
ஜப்பான் நிலநடுக்கம் .  அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் ஜப்பான் நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர சுனாமிக்கு பின் தொடர்ந்து 400 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால்ஜப்பான் மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஜப்பானை கடந்த மார்ச் 11ம் தேதி 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர சுனாமி ஏற்ட்டது அல்லவா?. இதன் பின் கடந்த 40 நாட்களில் 5.0 ரிக்டர் அளவில் 400 முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், ஜப்பான் மக்களை மனரீதியாக பாதித்துள்ளது. புகுஷிமா டாய்ச்சி அணு உலை கதிர்வீச்சை கட்டுப்படுத்த ஊழியர்கள் திணறி வரும் நிலையில் தொடர் நிலநடுக்கம், பணியை பெரிய அளவில் பாதித்துள்ளது. ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போது இன்னும் அணு உலை கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்துமா? கதிர்வீச்சு தாங்கிய புதிய மேகம் நகர்ந்து வருமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. சில நேரங்களில் நிலநடுக்கம் இல்லாத போதும், சாதாரண நிலஅதிர்வின் போதும், மரக்கிளைகள் அசையும் போது, நிலநடுக்கம் வருவதை போன்ற பயத்தில் உறைந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போது டோக்கியோ எலக்ட்ரிக் பவர் செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சியில் தோ

காமன்வெல்த் [கல்]மாடி கட்டிட ஊழல் கைது,,,,

படம்
பெட்டியில் என்ன,?   காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கோடிக்கணக்கில் ஊழல் புகழ் கல்மாடியை சி.பி.ஐ.,ஒருவழியாக இன்று[25.04.2011] கைது செய்தது .காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை செய்து வந்தவரும் அந்த கமிட்டிக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்து வந்தவர் சுரேஷ்கல்மாடி. இவர் காங்.,தலைவர் சோனியாவிற்கு நெருக்கமானவராக இருந்தவர். போட்டிக்கான மைதானம் அமைத்தல், போட்டி ஒளிபரப்பு உரிமம். தளவாட பொருட்கள் வாங்கியது , லண்டன் ஜோதி ஓட்டம் பணிகள் ஏற்பாடு உள்ளிட்ட கான்ட்ராக்ட் பணியில் பல கோடி முறைகேடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. இதனையடுத்து சி.பி.ஐ., பல மாதங்களாக விசாரணை நடத்தியது. இதில் ஏ.எம்., பில், டி.எஸ்.ஆர்., கம்பெனிகளுக்கான கான்ட்ராக்ட் பணியில் முறைகேடு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்தது. எனவே இன்று கல்மாடியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர் முன்னதாக இன்று 4 வது நாளாக விசாரணை நடத்த சி.பி.,ஐ., தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். கல்மாடியை கைது செய்தது குறித்து சிபி.ஐ., செய்திதொடர்பாளர் தாரனிமிஸ்ரா ‌இன்று மாலை அதிகாரப்பூர்வ

எண்டோசல்பான் -தடை செய்ய வேண்டும்.

படம்
 ‎ மண்ணையும், நீரையும் விஷமாக்கும் எண்டோசல்பான்  எண்டோசல்பான் உள்பட கொடிய விஷம் கொண்ட பூச்சி மருந்து களை கட்டாயமாக விவசாயிகளை பயன்படுத்த செய்து, இந்திய விவ சாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்து வருகிறது மத்திய காங்கிரஸ்  அரசு என்று கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் சாடியுள்ளார். கேரளமும், கர்நாடகமும் தடை செய்துள்ள எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி யுள்ளன. ”ஒரு முழுமையான விஷமான எண்டோசல்பான் பூச்சி மருந்து, மனிதர்களுக்கு பெரும் தீங்கு விளை வித்து வருவது மட்டுமின்றி, சுற் றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடி யாத சேதாரத்தை ஏற்படுத்தி வரு கிறது. அப்படிபட்ட இந்த ரசாயன மருந்து இன்னும் நமது நாட்டில் பகிரங்கமாக விற்கப்பட்டு வரு கிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட துயரங் கள் தொடர்கின்றன. 1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தொடர்ந்து தெளித்ததன் மூலம் 500 உயிர்கள் பறிக்கப்பட் டுள்ளன என்று அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவிக்கிறது.

கறுப்புப் பணம்-அரசு தயக்கம் ஏன்?

படம்
சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். கறுப்புப்பணம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதை பொதுமக் களுக்குத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வங்கிகளில் சில ஆயிரம் கடன் வைத்திருந்தால்கூட அவர்களது பெயர்களை வங்கிகள் நாளேடுகளில் வெளியிடுகின்றன. அவர் களது சொத்துகளை முடக்குகின்றன. ஆனால் இந்திய மக்களின் உழைப்பைச்சுரண்டி சேர்க்கப்பட்ட கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள கனதன வான்களின் பெயர்களை வெளியிடுவது கூட பெரிய பாவம் என்று மன்மோகன் சிங் அரசு கருதுகிறது. இத்தனைக்கும் கறுப்புப்பண விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகிறது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது கொஞ்சம் கூட உறைக்கவில்லை . கறுப்புப்பணப் பிரச்சனையில் ஹசன் அலி என்ற ஒரே ஒரு நபரை மட்டும் குறிவைத்து விசாரணை நடைபெறுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்

காத்திருக்கும்[ ஸ்டெர்லைட்] எமன்,,,,

படம்
Apr 23    ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு அனுபவம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரிய வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி ஆய்வுகள் மேற்கொண்டதை விளக்கி, மதிமுக பொதுச் செயலர் வைகோ செய்தி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: "மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து, ரத்தினபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர். தங்கள் வாழ்விடத்தையும், ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கையுடன் போராடும் இதே மக்கள்தான், 90-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, சுற்றுச்சூழலுக்கும், தங்களின் வாழ்வுக்கும் பெரும் நாசம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு, அன்றைய மராட்டிய மாநில சரத் பவா