இடுகைகள்

மே, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அணு சக்தி-லோக்பால்

படம்
அணுசக்திக்கு மாற்று,,,,,,,,,,,,.                                                                                                         -பேராசிரியர் கே. ராஜு ஜப்பான் புகுஷிமா அணு உலையில் அண் மையில் ஏற்பட்ட விபத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அணு உலைகள் விரிவாக்கத்திற்கு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நாடுகள் அணுசக்தித் துறையில் முன்னேற நினைத்தாலும் மக்களின் நியாயமான கேள்வி களுக்கும் அச்சங்களுக்கும் விடையளித்த பிறகே முன்னோக்கிச் செல்ல முடியும் என்ற நிலையும், மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு அணுசக்தித் துறையில் இலக்குகளை நோக்கிச் சென்றுவிட முடியாது என்ற நிலையும் ஏற்பட்டி ருக்கிறது.மக்களின் அச்சங்களுக்கு சரியான விளக்கங் கள் கிடைக்கும் வரையில், இடைக்கால ஏற்பாடாக வேறுவகை ஆற்றல் களை நோக்கிய தேடல் தொடங்கியிருக்கிறது. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தொல்எரிபொருட்களில் மிகக் குறைந்த கெடுதலையே விளைவிக்கும் இயற்கை எரிவாயு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நிலக்கரியில் உள்ள கார்பனில் பாதிக்கும் குறை வாகவே எரிவாயுவில் இருக்கிறது. பிற தொல்எரி பொருட்களால் வெளியி

எரியும் செய்தி

படம்
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட மர்ம சம்பவத்தில் மற்றொரு திருப்பமாக அவர் தங்கியிருந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது தலிபான் நிறுவனர்களில் ஒருவரான முல்லா அப்துல் பராதர் என்று செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக அபு அஹ்மத் அல் குவைதி என்பவரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதன் மூலம் அமெரிக்கா அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்ததாக தெரிவித்திருந்தது.ஒஸாமா பின் லேடன் மே 2 ஆம் திகதி அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு கராச்சியில் வைத்து அப்துல் பராதர் கைது செய்யப்பட்டார். பின்பு விசாரணைக்குப் பின் அவர் அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒசாமா பின் லேடன் கொல்லபட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முல்லா பராதர் ஒஸாமா பதுங்கியிருந்த இடத்தை அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளார். முல்லா பராதர் ஆப்கான் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில்

காங்கிரசாரின் கனவுகள்’’’’’’’’’’’

படம்
"திமுகவினரின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பேசியுள்ளார்.                                                                                                        சட்டசபை தேர்தலில், எங்கள் கருத்துக்கள் டில்லியில் எடுபடவில்லை. இல்லாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று, வெற்றி பெற்று இருப்போம் . கட்சியில் தற்போது ஒன்பது லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வரும் காலங்களில் 30 லட்சம் உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட வேண்டும்.                                   தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு ஆளும் திமுகவினரின் ஊழல் தான் காரணம். முதல்வர், துணை முதல்வர் மீது எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அமைச்சர் முதல் வார்டுகளில் உள்ளவர்களின் ஊழலால் தான், காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக்கப்பட்டது. இனி வரும் தேர்தலில்களில் வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப கல்வி முதல் தமிழகத்தில் இந்தியை பாடமாக்க வேண்டும் என்றார். காங்கிரஸில் அவ்வப்போது இளங்கோவந்தான் நகைச்சுவ

மத்திய அரசின் இரண்டாண்டு-ஒரு பார்வை

படம்
ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு                                           -சீத்தாராம் யெச்சூரிஎம்.பி., ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2 அர சாங்கம் ஈராண்டு நிறைவுபெற்றதை அடுத்து, அதை அனுசரிக்கும் விதத்தில் பிரதமரால் ஒரு தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள் ளும் நிகழ்ச்சியும், அப்போது பிரதமர் உரை நிகழ்த்தி ‘மக்களுக்கு அறிக்கை’ ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் சம்பிரதாயரீதி யாகப் புகைப்படங்கள் எடுக்கப்படும். இப் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன், சென்ற ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட் டுப் பார்த்தோமானால், சில வித்தியாசங்கள் பளிச்செனத் தெரியும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் இப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தில் இல்லை. அதேபோன்று ஐ.மு.கூட்டணி யில் அங்கம் வகிக்கக்கூடிய லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, ராம் விலாஸ் பஸ்வானின் எல்ஜேபி கட்சியினரும் காணப்ப

30லட்சமும்-3000 கோடியும்

படம்
அன்னா கசாரேவைக் கொல்ல 30லட்சம்   ""என்னை கொல்வதற்கு 30 லட்சம் ரூபாய் பேசி, வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர், என்னை கொல்ல மறுத்துவிட்டார்,' ' என, ஊழலை எதிர்த்து[?] போராடி வரும் அன்னா ஹசாரே   கூறியுள்ளார். பெங்களூரு பசவனகுடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அன்னா ஹசாரே பேசியதாவது:” ஏப்ரல் 5ம் தேதி, டில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பெங்களூரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். என் உண்ணாவிரதத்திற்கு பெரும் ஆதரவாகச் செயல்பட்டனர். அவர்களின் எழுச்சி பாராட்டத்தக்கதாக உள்ளது. இளைஞர்கள் நினைத்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம். என்னை கொல்வதற்கு, 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்த நபர் என்னை கொல்ல மறுத்துவிட்டார்” . இவ்வாறு அன்னா ஹசாரேபேசியுள்ளார்.        நம்ம ஊரு அரசியல்வாதிகள் இவரின் பேச்சு முன் தோற்றுப் போவார்கள். இவரை 30 லட்சம் கொடுத்து  கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபமோ?  இப்பேச்சினால் அன்னா ஹசாரேக்கு மட்டும் லாபம்.அவருக்கு ஒரு  பெயர் அதாவது
படம்
இன்னும் இருக்கிறது,,,, எத்தியோப்பியா [உல்லாச]பயணத்தை முடித்து திரும்பிய பிரதமர் மண்மோகன் சிங் கிடம் செய்தியாளர்கள் 2ஜி,-தி.மு.க, கூட்டணி பற்றி கேட்டபோது ”தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்கிறது.2ஜி அலைவரிசை நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கூற இயலாது. இல்லை என்றாலும் எனக்கு ஒன்றும் அது பற்றி தெரியாது.தி.மு.க.வில் இன்னும் சிலரை சிறையில் தள்ள வேண்டியதுள்ளது. அதுவரை கூட்டணி கண்டிப்பாகத் தொடரும்.முடிப்பது பற்றி ராகுலும்,சோனியாவும் கலந்து முடிவெடுத்தபின் நானே அறிவிப்பேன் ‘  என்று  கூறினார்.                [ என்னங்க குழம்பிட்டீங்களா? அடர்த்தி சிகப்பு எழுத்து எல்லாம் அவர் மனசுல நினைச்சதுங்க. ’சுரன்’க்கு மட்டும் தனியே கேட்டதுங்க. ] ============================================================================ பத்பனாபன் வாக்குமூலம் என்ற பெயரில் உருவாக்கும் குழப்பங்களுக்கு   விடுதலைப்புலிகள் பெயரில் வெளியான அறிக்கை சிங்கள அரசு கே.பி மூலம் செய்யும் சதிமுயற்சி முறியடிக்கபடும் - விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகம் சனி, 28 மே, 2011 2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் ம

வருகிறது புதிய ஆபத்து

படம்
     சமச்சீர் கல்வி ஏன் வேண்டாம்,,,,                                                                                    திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாநில கல்வித்திட்டம், மெட்ரிக் கல்விமுறை, ஆங்கிலோ இந்தியன் கல்விமுறை, கீழ்த்திசை கல்விமுறை என நான்கு வகையாக பள்ளிக்கல்வி இருந்தது. நான்கிலும் உள்ள சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி, சமச்சீர் கல்விமுறையை   நடைமுறைப்படுத்த அரசு முடிவு எடுத்தது. இதற்காக பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அது சில ஆலோசனைகள் வழங்கியது. அதிகாரிகளை கொண்ட கல்வியாளர் குழு ஒன்று, பிற மாநிலங்களின் பாடத்திட்டங்கள், தேர்வு முறைகளை ஆய்வு செய்து தன் பரிந்தரையை வழங்கியது. அவற்றின் அடிப்படையில் சமச்சீர் கல்வித் திட்டம் தயாரானது. அதை நடைமுறைப் படுத்த அவசர சட்டம் போடப்பட்டது. பின்னர் சட்டப்  பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. சமச்சீர் கல்வி சட்டத்தை தள்ளுபடி செய்யக் கோரி சில தனியார் பள்ளிகள் மற்றும் சங்கத்தினரால் சென்னை உயர்நீதிமன்றத்த