இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்புள்ள கமல்,.

படம்
                                          உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் ’அன்புள்ள கமல்’ என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றும், இப்படம் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘4 பிரண்ட்ஸ்’ படத்தின், தமிழ் மொழிமாற்றம் என்றும் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படத்தில் கமலஹாசன் கௌரவ வேடத்தில் நடிக்க, அவருடன் ஜெயராம், ஜெயசூர்யா, போபன் குஞ்சாகோ, மீராஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் கமல்ஹாசன் நடிகராகவே வருகிறார்.ஜெயராம், ஜெயசூர்யா, போபன் குஞ்சாகோ, மீராஜாஸ்மின் ஆகிய நான்கு பேரும் புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படுகின்றன. அவர்களை தேற்றி மரணம் நிஜமான ஒன்று. அது வரும்போது வரட்டும். அதற்கு முன்பு வாழ்வதற்கு நிறைய இருக்கிறது என்று தைரியமூட்டுகிற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து இருக்கிறார். இதுதான் இப்படத்தின் கதை. சமூக விழிப்புணர்வுள்ள படம் என்பதால், இப்படத்திற்காக சம்பளம் வாங்காமல் கமலஹாசன் நடித்திருக்கிறார். நண்பன் படத்தை அடுத்து கமலை வைத்து இந்தியனின் இரண்டாம் பாகம் படம் தயாரிக்கும் திட்டம் சங்கரிடம் உள்ளதாம்.அதில் கமலுக்கு வேசம

மூவுயிர்க் காக்க உன்னுயிரா,,?

படம்

காப்பாற்ற மனமில்லையா?

படம்
                                  வரும் செப்டம்பர் 9ம்தேதி மரணத்தை எதிர் நோக்கியிருக்கம் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில்  தெரிவித்துள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் நிராகரித்த மனுவை மாற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என்றும், மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகி கருணை கோரி விண்ணப்பிக்க வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார். தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதாக தவறாக பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் சட்டப்பேரவையில்  விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.                                           இவரை தூக்குத்தண்டனையை ரத்து செய்ய யார் கேட்டார்கள்.குடியரசுத்தலைவருக்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியோ,தமிழக மக்களின் முதல்வர் என்ற முறையில் தூக்குத்தண்டனையை நீக்கக் கூறி கடிதமோ குடியரசுத்தலவருக்கு அனுப்பி தூக்கை நிறுத்திட உதவத்தானே கூறுகிறார்கள். கருணாநிதி போல் கடிதம் எழுதினாலே போதுமே

மேலும் உயிர்களை இழப்பதா?

படம்
மரண தண்டனைபெற்று தூக்குக்கயிறை எதிர்நோக்கியிருக்கின்ற முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை புரிந்துள்ளார். 27 வயதுடைய செங்கொடி என்ற இளம் பெண் தனது உடலில்  தீ வைத்துஎரிந்து தனது உயிரை இழந்திருக்கின்றார். இந்தச் சம்பவம் காஞ்சிபுரம்வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது. காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தா ர் . இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது. 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்த

”மகாத்மாக்கள் “ அபாயம்,,,.

படம்
மேலே உள்ளது விக்கிலீக்ஸ் வெளியிட்டதாகக் கூறி ஈரோட்டில் அ.தி.மு.க,வினர் கொடுத்துவரும் கைப்பிரதி. உண்மையில் இதில் காண்பவை இருப்பின் மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுத்து அத்தனை கடத்தல் -கறுப்புப்பணத்தையும் இந்தியாவுக்கு கொணர வேண்டும். பட்டியலில் முக்கிய பெயர் விபரங்கள்.                               1.rajeev காந்தி-198000 2.a ராஜா 7800 3.harshad மேத்தா-135800 4.ketan பரேக்-8200 5.hd kumarswamy 14500 6.laluprsd யாதவ்-29800 7.j.mscindia-9000 8.karunanidhi-35000 9.kalanidhi மாறன்-15000 10.sharad pawer-28000 11.chidambaram -32000 12.rajfoundation-189008. -_____________________________________________________________________________ மக்கள் ஆதரவு... மக்கள் ஆதரவு... என்கிறார்கள். இந்த 'மக்கள்' கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல.                         இந்த, 'மக்கள்' பா

புலிவேடதாரிகள்

படம்
  இது மீள் பதிவு. தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்கள் . அவலநிலை ஆட்சியாளர்களுக்கு புரியவில்லையா?                                           செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் சிக்கியுள்ளவர்கள். சிறைவாசம் அனுபவித்த 26 பேரில்இ பல ஆண்டுகளின் பின்னர் 19 பேரை குற்றமற்றவர்கள் என முடிவுசெய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகவும், நாலு பேருக்கு மரண தண்டனையாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இளம் தாய் நளினி கருணை மனுவின் அடிப்படையில் ஆயுட்தண்டனைக் கைதியாக மாற்றப்பட்டார். தூக்குத் தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியவர்கள், தமது மரண தண்டனையை விலக்கக்கோரி இந்திய ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னர் கருணை மனுக்களை விண்ணப்பித்திருந்தார்கள். தற்போதுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் குறித்த மனுக்களை நிராகரித்துள்ளார். இதனையடுத்து குறித்த மூவரையும் தூக்கிலிடத் தமிழக ஆளுநரின் உத்தரவு எதிர்பார்க்கப்படுவதாக தமிழக காவல்துறைத் தரப்பு தெரி

ஏட்டிக்குப் போட்டி - “தை” போச்சு,

படம்
260 ஜி.பி.சின்ன டிஸ்க்.                                 சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும். "மெம்டோ பிரிண்டிங்" என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன. ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதனால் இவ்வுபகரமானது பாரிய பங்களிப்புச் செய்யுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை சந்தைப்படுத்துவதற்காக லிதுவேனிய நாட்டு நிறுவனமொன்றுடன் இச்சாதனத்தினை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். ________________________________________________________________ தஸ

இன்னோரு மகாத்மா?

படம்
அன்னா போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம் :   சையது புகாரி உத்தரவு!   டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும். நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மதத்தை காரணமாக்கி மனிதர்களைத்துண்டு போடுகிறார்.முசுலிம்களும் இந்திய நாட்டின் குடிமக்கள்தானே.அவர்களையும் ஊழல் மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் முடிவுகள் பாதிக்கத்தானே செய்யும். அன்னா இந்துத்துவாவாதியாக இருக்கலாம்.ஆனால் அவர் ஊழலை எதிர்த்து செயல்படும் போது இந்திய மக்கள்,ஊழலை எதிர்ப்பவர்கள் ஒட்டு