இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊத்தி மூடு,,,,,

படம்
                                                       ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதத்தால் எழுந்த பிரச்னைக்கு, காங்கிரஸ் மேலிடம் நேற்று தீர்வு கண்டது. "நிதி அமைச்சக கடிதத்தில் இடம் பெற்றுள்ள விஷயங்கள், தன்னுடைய கருத்தை பிரதிபலிக்கவில்லை' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்ததால், பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டை, அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், தடுத்து நிறுத்தியிருக்கலாம்' என்ற குறிப்பை, கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் அனுப்பியதாக தகவல் வெளியானது. இது, உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதோடு, மத்திய அமைச்சர்களுக்குள் மோதல் உள்ளது போன்றும் செய்திகள் வெளியாகின. அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பிரணாப்பும், பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்தக் குறிப்பு விவகாரம் தொடர்பாக, நியூயார்க்கில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், மத்தி

ஏகாதிபத்தியமும் அதன் முட்டாள்தனங்களும்,

படம்
பேராசிரியர்:பிரபாத் பட்நாயக், சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க் கப்பட்ட உடனே நடைபெற்ற அமெரிக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கண்டோலிசா ரைஸ் அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பி னார்: “இந்த பயங்கரமான துயரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகி றோம்?” அவருடைய கவலை என்பது இந்த பயங்கர தாக்குதலைப் பற்றியதாக வோ அல்லது குற்றம் செய்தவர்களை நீதிக் குட்படுத்துவது தொடர்பாகவோ இல்லை. மேலும் அந்தக்கூட்டத்திலேயே, இந்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராக் மீது ஒரு போரினைத் தொடுத்து அதன் மூலம் நல்ல பலனை அடையலாம் என்ற விவாத மும் எழுப்பப்பட்டது. அல்கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு உள்ள பகைமை குறித்து நன்றாக அறிந்திருந்த போதும் இந்தப்போருக் கான விவாதம் எழுப்பப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.                                              பளிச்செனத் தெரிந்த உள்நோக்கம் இராக் “பேரழிவு ஆயுதங்களை” தயாரித்து வைத்துள்ளது என்பது போன்ற பொய்களை அதிவேகமாகப் பரப்பியதே, இராக் மீதான படையெடுப்பிற்கான காரணத்தை உருவாக் கத்தான் என்று நாம் அறிய

19 ஆண்டு காத்திருப்பு,

படம்
வாச்சாத்தி:   215 பேர் குற்றவாளிகள்                               தருமபுரி நீதிமன்றத்தில் வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில்  தீர்ப்பு கூறப்பட்டது. இதுவரை நீதிபதி குமரகுரு 215 பேரின் பெயரை வாசித்து குற்றவாளி என அறிவித்தார். குற்றவாளிகள் என குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றவாளிகள் மறுப்பு தெரிவித்தும் தாங்கள் நிரபராதி என்றும் குறைந்தபட்ச தண்டனை வழங்கவேண்டுமென்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். சிலர் தங்கள் மீதான குற்றத்தை ஏற்க மறுத்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும்,126 வனம், வருவாய், 84 காவல்துறையைச் சேர்ந்தவர்கள். 2 ஆய்வாளர்கள் 6 சார் ஆய்வாளர்களும் குற்றவாளிகள் பட்டியலில் அடங்குவர். 4 ஐ.எஃப்.எஸ். (இந்திய வனப்பணி அதிகாரிகள்) அதிகாரிகளும் குற்றவாளிகள். குற்றவாளிகளுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் மீதும் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ்

கூடங்குளம் :ஆரம்பம்,

படம்
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட அறிக்கை: * கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. * அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது. * அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும். * காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது. * பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. * மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட

அழகிரி ,ஆரம்பமாகப்போகிறது அதிரடி.

படம்
மதுரையில், மாநகராட்சி மேயர் வேட்பு மனு தாக்கலுக்கு, வேட்பாளருடன் அழகிரி வந்தார். தேர்தல் அலுவலர் நடராஜனின் அறையில் நுழைந்ததும், அங்கிருந்த நிருபர்களை வெளியில் இருக்குமாறு அழகிரி கூறினார். தேர்தல் அலுவலர்நடராஜன், ""நிருபர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம்; அவர்கள் இருக்கட்டும்,'' என்றார். ""உங்களிடம் தனியாக பேச வேண்டும்,'' என, அழகிரி கூறியதற்கு, ""தனியாக பேச இது நேரமல்ல, பின்னர் கட்டாயம் பேசலாம்,'' என்றார் நடராஜன். ""தேர்தல் விதிமீறல் குறித்து நாங்கள் கூறிய புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?'' என, அழகிரி கேட்டார். ""படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறேன்,'' என, நடராஜன் பதிலளித்தார். ""சிம்மக்கல், சேதுபதி ஸ்கூல், ஜங்ஷன் பகுதியில் ஜெ., மற்றும் விஜயகாந்த் படங்களை வரைந்துள்ளனர். அதை அழித்து விடுங்கள்; இல்லையென்றால் நாங்கள் அழிப்போம்,'' என, எச்சரித்து விட்டு வெளியேறினார். ,""அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்க

வெறுத்துப்போன தா,தா,தா.பாண்டியன்.

படம்
                                           உ ள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க,ஆரம்பித்துவைத்த தனித்துப்போட்டி அ.தி.மு.கவையும் தொற்றிக்கொண்டது.கூட்டணி கட்சிகளைக் கழற்றிவிட தனித்துப்போட்டி என கூறாமல் கூட்டணிகளுக்கு மிச்சம் வைக்காமல் அனைத்துத் தொகுதிகளையும் தனது வேட்பாளர்களை நிறுத்தி ஆக்கிரமித்துக்கொண்டது. ஆனால் அது கதவை மூடிய பின்னும் மார்க்சிஸ்ட்,தா.பாண்டியன் கட்சியினர்{ இந்தியகம்யூனிஸ்ட் கட்சி என்று கூப்பிட இயலாதவாறு பாண்டியன்.அ.தி.மு.க,வின் துதிபாடி கட்சியாக்கிவிட்டார்.} தோட்டத்தின் கதவின் முன் தினம் முன்னிலையாகி அழைப்பை எதிநோக்கி நின்றனர்.ஆனால் எச்சிலைகள் வெளியே வந்து விழுந்தனவே தவிர அழைப்பு வரவே இல்லை.பேருக்கு சில அம்மா கட்சியினர் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டனர். மார்க்சிஸ்டுகளுக்கு கொஞ்சம் சுயமரியாதை இருந்ததால் தனியே சில இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து மோதி பார்க்கத்துணிந்து விட்டனர். ஆனால் தா.பாண்டியனோ அவர்கள் அவ்வாறு செய்வது அம்மாவை கோபப்படுத்திவிடும் இன்னும் கொஞ்சம் கெஞ்சிப்பார்க்கலாம் என்று தன் சார்பாக பழனிச்சாமியை தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். பழனிச்சாமியின் செருப்புதா

2-ஜி வேடிக்கையான விசாரணை.

படம்
                                                            2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச் சருமான ப.சிதம்பரத்துக்கும் தெரி யும் என்றும், அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ நீதிமன் றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் கூறினார். அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயலவில்லை என் றும், அவருக்கும் எல்லாம் தெரி யும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார். திங்களன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது வாதா டிய ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனையில் அப் போதைய நிதியமைச்சர் சிதம்பரத் துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை என்பது மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ராசா குற்றவாளி என்றால் ஒட்டுமொத்த அமைச்சர வையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு தான், அடுத்தடுத்து வந்த அரசுகள், அடுத்தடுத்து நடந்

சி.பி.ஐ.யா? தமிழகக் காவல்துறையா?

படம்
எது விசுவாசமானது? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்படுள்ளது. ராசா உள்பட மூவரும் அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு தொடர்ந்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை சிபிஐ இன்று தாக்கல் செய்தது. சிபிஐ வழக்கறிஞர் லலித் அந்த மனுவை, நீதிபதி ஓ.பி.சைனி முன்பு தாக்கல் செய்தார்.                                   பிரிவு 409-ன் கீழ் அரசு பதவியில் இருந்து கொண்டு நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவிடம் உதவியாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மீது அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன், இந்த வழக்கு முடியும் வரை குற்றம்சாட்டப்பட்ட

பிரதமர்+தயாநிதி=2ஜி

படம்
தொலை தொடர்பு துறையில் ( 2004 முதல் 2007  வரை ) மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி, ஸ்பெக்ட்ரம் விதி நிர்ணயம் மற்றும் எந்த அளவுக்கு விற்கலாம் என்ற விஷயத்தில் அமைச்சரவை குழு எடுத்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியிருக்கிறது. இந்த கடிதம் மூலம் தானே விலை நிர்ணயத்தில் ராஜாங்கம் நடத்தி ஆதாயம் தேட தயாநிதி முயற்சித்துள்ளார்,அதற்கு மன்மோகன் சிங்கும் அனுமதித்துள்ளார் என்று தெரிய வருகிறது. தகவல் அறியும் சட்டம் மூலம் விவேக்கார்க் என்பவர் இந்த கடித நகலை பெற்றுள்ளார். 2006 ஜனவரி மாதம் பாதுகாப்பு துறை பரிந்துரையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பது மற்றும் விலை நிர்ணயத்திற்கு அமைச்சரவை குழு பரிந்துரைக்க ஒப்புதல் வழங்கினார் பிரதமர். இதன்படி அமைச்சரவை குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால் பிரதமரும், தயாநிதியும் சந்தித்து ( பிப். 1ல் ) பேசிய பின்னர் தலைகீழாக மாறியது. “சீக்ரெட்” லெட்டர் ஊருக்கு தெரிந்தது: பரிந்துரைகள் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சரவை குழுவிற்கு பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து தயாநிதி பொறு