பிடிபட்ட அந்நிய முதலீட்டாளர்.


 கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் பிரமாண்ட அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.13,615 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. 


இப்போது அப்பகுதி மக்களை உதயகுமார்,புஷ்பராயன் ,கிருத்துவ பாதிரியார்கள் தூண்டி அணுவுலைக்கு எதிராக போராடவைப்பதாகவும் அதற்கு அந்நிய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா,ஜெர்மனி,பிரான்ஸ் நாடுகளில் இருந்து பணம் வழ்ங்குவதாகவும் குற்ற சாட்டுகள் எழுந்தது.அந்தபணம் தூத்துக்குடி,மற்றும் கேரளாவில் இருந்து நாகர்கோவில் மூலமாக தன்னார்வக்குழுக்கள் மூலம் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வெளி நாட்டவர்கள் சிலர் நாகர்கோவிலில் ஊடுருவி, போராட்டக்காரர்களுக்கு உதவுவதை மத்திய உளவு துறை கண்டுபிடித்தது. இப்போது ஜெர்மனி நாட்டை சேர்ந்த சோன்டக் ரெய்னர் ஹெர்மான் என்பவர் பண உதவி செய்வதில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஜெர்மன் நாட்டைச்சார்ந்த ஹெர்மானைதமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெ‌ர்ம‌னி  ரெ‌ய்னரு‌க்கு‌ம், தம‌க்கு‌ம் எ‌‌வ்‌வித‌த் தொட‌ர்பு‌ம் இ‌ல்லை என்று  போர‌ா‌ட்ட‌க்குழு அமை‌ப்பாள‌ர் உதயகுமா‌ர் கூ‌றி‌யுள்ளார்.


ரெ‌ய்ன‌ரு‌ட‌ன் தொட‌ர்‌பு உ‌ள்ளதாக வெ‌ளியான தகவலை மறு‌த்து‌ள்ள உதயகுமா‌ர், கட‌ந்த ஓரா‌ண்டாக ரெ‌ய்னரை ச‌ந்‌தி‌க்கவோ, போ‌னி‌ல் பேசவோ இ‌ல்லை ஜெ‌ர்ம‌‌ணிநாட்டவர் ரெ‌ய்ன‌ர் தம‌க்கு ஏ‌ற்கனவே அ‌றிமுகமானவ‌ர்தா‌ன்.ஆனால் ரெ‌ய்னருட‌ன் எ‌ந்த பண‌ப்ப‌ரிவ‌ர்‌த்தனையு‌ம் செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று‌ உதயகுமார் கூ‌றினார். 
 குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் தங்கி இருந்த ஜெர்மான் நாட்டை சேர்ந்த சான்டெங்ரெய்னர் ஹெர்மான் என்பவர் தங்கி இருப்பதாக மத்திய உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கியூ பிரிவு போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இவரிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டது. 

ஜெர்மனி ரெய்னர் பிடிப்பட்டது தொடர்பாக சில தகவல்கள் தரப்பட்டுள்ளது.
 நாகர்கோவில் விடுதி ஒன்றில் தான் சுற்றுலாபயணி என்றுஜெர்மனியைச்சேர்ந்தவர் தங்கிஇருப்பதாகவும்,அவரை போராட்டக்காரர்கள் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் மத்திய உளவு பிரிவு படையினர் விசாரணையில் தெரியவந்தது.சென்னையில் உள்ள கியூ., பிரிவு போலீஸ் உயர் அதிகாரிக்கு இத்தகவலை அவர்கள் தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து அவரது நடவடிக்கை ரகசியமாக கண்காணிக்கப்பட்டது. இவர் கூடங்குளம் போராட்டக்காரர்களை சந்திப்பதும், இவர்களுடன் தொலை பேசியில் பல மணி நேரம் பேசுவதுமாக இருந்துள்ளார். இந்த விடுதியில் கடந்த 12 ம் தேதி முதல் தங்கியிருந்துள்ளார்.

 உளவுப்பிரிவினர் பல நாட்கள் கண்காணித்துபோராட்டக்காரர்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்தனர். இதனையடுத்து விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லுமாறு நாடு கடத்தினர். இனிமேல் இந்தியாவில் தங்க கூடாது என எச்சரித்து அனுப்பினர். போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதற்கான சில ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக உதயக்குமார் மற்றும் லால்மோகன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
======================================================================

======================================================================

------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நாவிற்கு எதிராக இலங்கை ஆர்ப்பாட்டம் நடத்திப் பயனில்லை,

_________________________________________________________________________
அரசாங்கம் தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துகொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அந்த வால் நுனியை பிடித்து தொங்குகிறார்கள். அமெரிக்காவையும், ஏனைய நாடுகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதால் வெளிநாட்டில் ஒன்றும் ஆக போவதில்லை. வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு உள்நாட்டில் மக்கள் விலைவாசியை மறந்து இருப்பர்கள்.

உலக நாடுகள் இன்று, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல் செய்ய சொல்கிறார்கள். அதற்கான காலவரையறையுடன்கூடிய வேலைத்திட்டம் அவசியம் என சொல்கிறார்கள். இந்த அறிக்கையில் பொறுப்பு கூறல் தொடர்பில் எதுவும் கிடையாது. மிகவும் மெத்தனமாக சில சிபாரிசுகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இந்த சிபாரிசுகளைகூட அமுலாக்க அரசாங்கம் தயங்குகிறது. அதற்கான காலவரையறையுடன் கூடிய உத்தரவாதத்தை சர்வதேசத்திற்கு தருவதற்கு அரசாங்கம் தயார் இல்லை

இன்று எம்முன்னே இருக்கும் சிக்கல் இதுதான். இதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நீர்கொழும்பு கார்டினால் குரே நிலையத்தில் சுதந்திரத்திற்கான அரங்கம் நேற்று நடத்திய கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
இடதுசாரிமுன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மற்றும் ஐதேக எம்பீக்கள் ஜோசப் மைக்கல், ஜெயலத் ஜெயவர்தன ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கை ஒன்றும் பான் கி மூன் அறிக்கை இல்லை. இதை எதிர்கட்சிகள் தயாரிக்கவில்லை. ஊடகங்கள் தயாரிக்கவில்லை. அரசாங்கம் நியமித்த சி.ஆர்.டி. சில்வா அவர்கள் தலைமையிலான ஆணையாளர்கள் தயாரித்துள்ளார்கள். தமது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கை சொல்லும் சிபாரிசுகளை அமுல் செய்வதாக காலவரையரையுடன்கூடிய உத்தரவாதம் தர முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கிறது. இந்த நிலையில் இருந்துகொண்டுதான் இன்று சர்வதேசத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் ஆறு வாரங்களுக்குள் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளை அமுல் செய்யப்போவதாக குறிப்பிட்டார். அதன்பிறகு அதுபற்றி இன்று எந்த ஒரு பேச்சையும் காணோம். ஆனால் இன்று அமெரிக்காவும் ஏறக்குறைய இதைதான் சொல்கிறது. அப்படியானால் இன்றைய ஆர்ப்பாட்டத்தை அரசாங்கத்திற்குள் இருக்கும் தீவிரவாத குழுவினர், தமது ஜனாதிபதிக்கு எதிராகவே செய்கிறார்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இந்நாட்டில் இன்று இனப்பிரச்சினையே இல்லை. இருந்தது பயங்கரவாத பிரச்சினைதான். அதை நாம் ராணுவத்தின் மூலம் தீர்த்து வைத்து விட்டோம். எனவே அதிகாரப்பரவலாக்கள் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கு, தமது சொந்த ஆணைக்குழுவின் அறிக்கையே இனப்பிரச்சினை பற்றியும், அரசியல் தீர்வு பற்றியும் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறது.
செனல் நான்கு தொலைக்காட்சி காண்பித்த ஒளிநாடாவை பார்க்காமலேயே அது முற்றிலும் பொய் என்று சொன்னவர்களுக்கு, அதுபற்றி சுதந்திர விசாரணை தேவை என ஆணைக்குழு சொல்லி இருப்பது கஷ்டமாக இருக்கிறது.

அனைத்து ஆயுத துணைக்குழுக்களும் கலைக்கப்படவேண்டும் என சொல்லப்பட்டு இருப்பது கஷ்டமாக இருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களினதும் பெயர்விபர பட்டியல் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது ஏற்றுகொள்ள முடியாமல் இருக்கிறது.
சரணடைந்தோருக்கு நடந்தது என்ன என்பது தொடர்பிலும், பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பிலான ராணுவத்தின் மீதான சில குற்றச்சாட்டுகள் தொடர்பிலும், திருகோணமலை மாணவர் படுகொலைகள் மற்றும் மூதூர் தொண்டர் நிறுவன ஊழியர் கொலைகள் ஆகியவை பற்றியும் விசாரணைகள் செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டு சொல்லப்பட்டு இருப்பது இவர்களுக்கு கஷ்டமாக இருக்கின்றது.
உள்ளூர் தமிழ் கட்சிகளுடன், ஒப்பந்தம் செய்து கிழித்து வீசிவிடுவதை போல் ஐநாவுடன் செய்ய முடியாது. இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அந்த அடிப்படையில், தமது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை ஜனாதிபதியே குறிப்பிட்ட ஆறு வார காலத்திற்குள் நிறைவேற்றுவோம் என ஐநா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உத்தரவாதம் வழங்குங்கள் என அரசாங்கத்திற்கு நான் கூறுகின்றேன். இதையே அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும், இடதுசாரி தலைவர்களும் தமது அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும்.
நன்றி:இனியொரு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
___________________________________________________________________________________________________________________________________ரூ. 6300 கோடி கடனில் கிங்பிஷர்
-----------------------------------------------------------

சாராய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் விமான நிறுவனம் ரூ.6300 கோடி கடனில் தவிக் கிறது. இந்த நிறுவனம் கடனி லிருந்து மீண்டுவர 2 அயல்நாட்டு விமான நிறுவனங்களுடன், விஜய் மல்லையா பேச்சு வார்த்தை நடத்துகிறார். பிரிட் டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உரிமையாளரான இண்டர்நேஷ னல் ஏர்லைன்ஸ் குரூப் (ஐஏசி) உள்பட இரண்டு நிறுவனங்க ளுடன் பேச்சுவார்த்தை நடக் கிறது.


கிங்பிஷர் விமான நிறுவனத் தில் மல்லையாவிற்கு 58 சதவீதம் பங்குகள் உள்ளன. அயல்நாட்டு நிறுவனத்திற்கு பங்குகளை மாற்றித்தருவது குறித்து, ‘தி டைம்ஸ்’ இதழுக்கு விஜய் மல் லையா கூறுகையில், அயல் நாட்டு நிறுவன உரிமையாளர் பங்குகளை வாங்குவது தொடர் பான கட்டுப்பாடுகளை நீக்கு வதற்கு, மத்திய அரசிடம் தற் காலிக அனுமதியைப் பெற்றுள் ளேன் என தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள் மாற்றம் வெளி யானதும், சில நாட்களில் அயல் நாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனத்தில் முதலீடு செய்யும் என அவர் தெரிவித்தார்.

விதிமுறை தளர்வின் மூலம் இந்திய விமான நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகளை, அயல் நாட்டு நிறுவனம் பெறும். ஐக் கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த எடிஹாட் விமான நிறு வனமும், கிங்பிஷருடன் கூட்டுச் சேர விரும்புகிறது. கடனில் உள்ள கிங்பிஷர் மீண்டுவர உட னடித் தேவையாக 1600 லட்சம் டாலர் முதலீடு தேவைப்படு கிறது.

கிங் பிஷர் நிறுவனம் 64 விமானங்களை இயக்கிவந்தது. தற்போது 28 விமானங்களை மட்டுமே இயக்குகிறது. இந்நிறு வனத்தில் இருந்த விமானிகள் பெருமளவு விலகிவிட்டனர். கிங்பிஷர் தற்போது வெறிச்சோடி இருக் கிறது.
________________________________________________________________________








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?