இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழைய மனை புகு விழா,...?

படம்
மார்ச் 28ம் தேதி சசிகலா அனுப்பிய விளக்க அறிக்கையில், எப்போதுமே போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடனேயே இருந்துவிட்டதால், அதிமுகவிற்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் எதிராக தனது உறவினர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும், தான் குற்றமற்றவர் என்றும் சசிகலா கூறியிருந்தார்.  சசிகலா அனுப்பிய விளக்க அறிக்கை ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் ஜெயலலிதா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாடகம் கிட்டதட்ட கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.அடுத்து போயஸ் தோட்டத்தில் சின்னம்மா நுழைந்து விட்டால் திரையை கீழிறக்கி 'சுபம்"அல்லது வணக்கம் போட்டு விடலாம்.அதுவும் விரைவில் ' போயஸ் தோட்டத்தில் அக்காவுடனேயே தங்கிவிட்டதால் சின்னம்மாவுக்கு வெளி உலகில் நடப்பது எதுவுமே தெரியாமல் போய் விட்டது.அதையும் அம்மா புரச்சி தலைவி ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளை[?]திரும்ப பெற்று விட்டார். அக்காவுடனே யே இருந்ததால் கணவர் நடராஜன் கட்சியினரிடமும்,அதிகாரிகளிடமும்,மக்களிடமும் பதவி-வேலைக்கு பணத்தை வாங்கிக்கொண்டு முதல்வரிடம் காரியம் சாதித்தது எதுவுமே சசிக்கு தெரியாது .பாவம். தினகரன்,சு

மின் அதிர்ச்சி

படம்
 பாகிஸ்தானில் நிலவும் கடுமையான மின் பற்றாக்குறையையும், இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பையும் மன் மோகன்சிங்கிடம் கூறிய கிலானி, இதை சமாளிக்க இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டினார். கிலானியின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தானுக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உடனடியாக வழங்க, மன்மோகன்சிங் ஒப்புக் கொண்டார். அவசர கால தேவை அடிப்படையில் இந்த மின்சாரம் வழங்குவதாகவும் அந்த மின்சாரம் பஞ்சாப் மின்பாதை வழியாக, பாகிஸ்தானுக்கு விரைவில்அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக , கிலானி நன்றி தெரிவித்துக் கொண்டார்.  இங்கு தமிழ்நாடு இருளில் கிடக்கிறது.அதற்கு ஒரு மத்திய அமைச்சர் மின்சாரம் தர வாய்ப்பில்லை என்கிறார். அண்டை நாடு அதுவும் நம் மீது வன்மம் மனதில் கொண்ட நாடுக்கெல்லாம் மின்சாரம்.சொந்த நாட்டில் ஒரு மாநிலத்துக்கு மின்சாரம் கிடையாதா/ இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. மின் தட்டுப்பாட்டை விலக்கி கிலானி கெஞ்சும் குரலில் கேட்டு பெற்றுக்கொண்டார்.நமது முதல்வரோ வாயை திறந்து கேட்டதாகவே தெரியவில்லை.விட்டால் மத்திய அரசு ஒதுக்குகிறது என்கிறார். ஆனால் கருணாநிதி ஆட்சி காலத்

தல [வலி] பதி

படம்
பிரதமருக்கு ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய ரகசிய கடிதம் அம்பலம் ஆகியுள்ளது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கடிதம் இவ்வாறு வெளியானது எப்படி? ராணுவ தலமை தளபதி சிங்கின் செயல்பாடுகள் அனைத்துமே தகுதிக்கும் ,பொறுப்புக்கும் மீறிய செயலகளாகவே அதுவும் தவறானதாகவே இருக்கிறது.முதலில் தனது பிறந்த ஆண்டு தொடர்பாக அரசை எதிர்த்து ஒரு தளபதி நீதிமன்றம் சென்றதே தவறான நடைமுறையாகும். அடுத்து இவ்வளவு காலம் வாயை மூடிக்கொண்டிருந்து விட்டு ராணுவத்துக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆயுதங்கள் வாங்க ஒப்புதல் அளித்தால் தனக்கு ஸி14 கோடி லஞ்சம் தர ஒருவர் பேரம் பேசியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.அந்த குற்ற சாட்டிலும் லஞ்சப்பிரச்னையை முன்பே நடவடிக்கை எடுக்கும்படி எழுத்து மூலம் கொடுக்காமல் வாய்மொழியாகக் கூறி பின் விசாரணை வேண்டாம் என்றுள்ளதைப் பார்த்தால் தளபதியார் தன்னை சுத்தவானாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியா என்று சந்தேகம் வருகிறது.  அடுத்தபரபரப்பாக முன்பு பிரதமருக்கு வி.கே.சிங் எழுதியதாகக் கூறப்படும் ரகசிய  கடிதம் இன்னொரு

வெட்டி விட அழுத பணம்,,,,,,,,.

படம்
பின்வரும் புகைப்படங்களில் உள்ள முன்னாள் தம்பதிகள் உலக அளவில் அறிமுகமானவர்கள்தான். இப்போது விவாகரத்தில் உள்ள இவர்கள் விவாகரத்து அதாங்க வெட்டிவிட அழுத பணம் எவ்வளவு என்ற விபரம்தான் கீழே வரிசையாக வருகிறது.பார்த்து ஏக்கம் கொள்ளுங்கள். ரூபர்ட் முர்டாக்[ஸ்டார் டி.வி.உட்பட ஊடக ஏகபோகதாரி] -அன்னா கைமாறியது 1.7 மில்லியன் டாலர் அட்னான் காசோகி- சொர்யா ,கைமாறியது.874 மில்லியன். கிராய்க் மெக்காவ்ஸ்-வெண்டி-460 மில்லியன் மெல்கிப்சன் -ரொபின் 425 மில்லியன் ரொமன் அப்ரமொவிச்-ஐரீன் 300 மில்லியன் மைக்கேல் ஜொர்டான் -ஜுயானிடா 260மில்லியன் சார்லஸ் எட்கர்-மார்லேன் 200 மில்லியன்[மார்லேன் படம் சிக்கவில்லை] நெய்ல் டைமண்ட்ஸ் -மர்சியா மர்பி 150 மில்லியன் ஹாரிசன் போர்ட் -மெலிசா மதிசன் 118 மில்லியன் கிரேக் நார்மன்ஸ் லாரா அன்ட்ரசி 103 மில்லியன் டைகர் வுட்ஸ் -எலின் நார்டெக்ரென் 100 மில்லியன் இவர்களின் விவாகரத்து க்குப் பின்தான் பணம் பெற்றவர்கள் வாழ்வு மகிழ்வாக வசதியாக அமைந்திருக்கும் என தெரிகிறது. _____________________________________________________________________