2-வது இடம்

மதுரை என்றாலே வில்லங்கங்கள் அதிகம்தான்.உலகம் முழுக்க இந்திய தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக சானல் மூலம் ஒளிபரப்பான  நடிகை ரஞ்சிதாவுடன் டூப் போடாமல் கட்டில் காட்சிகளில் நடித்த நாயகன்
நித்தியானந்தாவை பாரம்பரியமிக்கமதுரை ஆதீனத்தின்293 வது ஆதினமாக முடிசூட்டி வைத்துள்ளார்.அருணகிரியார்.
மதுரை மக்களுக்கு ஆசி வழங்க புது ஆனந்தா சாமியார் தயார்.



இப்படி சிற்றின்ப குற்ற சாட்டில் சந்தி சிரித்த சாமியாரை மக்களுக்கு பேரின்பம் வழங்கும் இடத்தில் அமர்த்தியவரை என்னவென்று சொல்வது.ஒரு வேளைபழைய ஆதினம்அருணகிரியார் சிடி பார்த்தது முதல் நித்தியானந்தாவின் ரசிகராகியிருப்பாரோ?
அதை விட அதி நவீன விளக்கம் அருணகிரியார் தந்துள்ளார்.

"மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார்.[கைலாயத்தில் சன் டிவி தெரிகிறதா?]
அப்போதுதான் நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.[பெண்களுடன் குத்து டான்ஸ் ஆடியதுக்கா இவ்வளவு பெரிய பொறுப்பு?]
மதுரை ஆதீனத்துக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதை பாதுகாத்து, ஆதீனத்தை வளர்க்க, நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் புனிதமானவர். பணத்தால் எதையும் பெற்று விடலாம்; பக்குவப் பட்ட மனிதனை வாங்க முடியாது. மதுரை ஆதீனத்தை சர்வதேச மையமாக அவர் மாற்றுவார். விரைவில் அவருக்கு பட்டமளிப்பு விழா நடக்கும். கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றார்.
நித்தியானந்தா பதவியேற்பின் போது நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
சுரன்

292வது மதுரை ஆதீனமாக, சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975ல் நியமிக்கப்பட்டார்.அதற்கு முன்னர் அவர் முரசொலியில் வேலை பார்த்துவந்ததாக கூறப்படுகிறது.தற்போது 293வது மதுரை ஆதீனமாக, நித்யானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
பதவியில் அமர்ந்தவுடன் நித்தியானந்தா அறிவித்த அறிவிப்புகள் வருமாறு"முதல் கட்டமாக, 1 கோடி ரூபாய் வழங்குகிறேன். ஆதீனத்துக்கு சொந்தமான கோவில்களை புனரமைத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் செய்யப்படும். ஜூன் 5ம் தேதி, மதுரையில் நடக்கவுள்ள குரு பூஜையில் சன்னிதானத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க கிரீடம், தங்க செங்கோல் வழங்கப்படும், மதுரை ஆதீனத்தில், 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். விரைவில் மருத்துவக் கல்லூரி துவக்கப்படும். மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு தடை வந்தால் தகர்ப்பேன் "என்றார்.
சுரன்

இவர் மதுரை ஆதீனத்தை வளர்ப்பதற்கு யாரும் தடை செய்யாதீர்கள்.அப்புறம் அவர் தகர்த்து எறிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.
இந்த பதவியை வைத்தாவது சன் டிவி யை ஏதாச்சும் செய்யமுடியுமானு பாருங்கள் மகாசன்னிதானம் நித்தியானந்தா ஞான தேசிக பரஹம்சர் அவர்களே. 

___________________________________________
2 -ம் இடம்,
+++++++
லகில் இப்போது முதலிடம் பின்லாந்திடமிருந்து தென்கொரியாவுக்கு போய்விட்டது.செல்பேசி யில்தான்.
நோக்கியா வை இரண்டாம் இடத்துக்கு தள்ளி விட்டு சாம்சங் முதலிடம் வந்துவிட்டது.
பதினான்கு ஆண்டுகள் உலக செல்பேசி சந்தையில் நாற்பது சதவீத்தை கையில் வைத்துக்கொண்டு முதலிடம் வகித்த நோக்கியா இரண்டாம் இடம் போனது மிக வருத்தம்தான் .அவர்களுக்கு.
சுரன்

ஆப்பிள் ஐ போன்,சாம்சங்கின் காலக்சி போன் கள் விற்பனை அதிகரித்ததுதான் இப்படி இரண்டாம் இடம் போக காரணம்.இலாபமும் குறைந்து விட்டது.
ஆனால் மைக்ரோசாப்ட்நிறுவனத்துடன் இணைந்து விண்டோஸ் வசதியுடன் செல்பேசிகள் தயார்த்தடன் மூலம் சந்தை இறக்கத்தை மேலும் கீழே போய்விடாமல் வைத்திருக்கிறது நோக்கியா.
உலகில் பல இடங்களில் விற்பனை சரிந்திருந்தாலும் ஆசிய கண்ட நாடுகளில் இன்னமும் நோக்கியாதான் முதலிடம்.ஆனால் இரண்டாம் இடத்துக்கான வித்தியாசம் மிகக்குறைவாகத்தான் உள்ளது.
சுரன்

சீனத்தயாரிப்புகள் விலையைப்பொறுத்தவரை மிக மலிவாகவும்.வசதிகளைப்பொறுத்தவரை மிக அதிகமாவும் விற்பனை அதிகரிப்பும் நோக்கியாவின் முதலிட அடித்தளத்தை ஆட்டிவைத்த காரணிகளில் ஒன்றாக அமைந்து விட்டது.
இரண்டாம் இடத்தை சாக்காக வைத்து அதைக்கூறியேதனது நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு சம்பள உயர்வை குறைத்து.சிலரை பணி நீக்கமும் செய்துள்ளது நோக்கியா.
_________________________________________________________________________________
சுரன்
மே-2 ம் தேதி பாகிஸ்தானில் பின்லேடன் சுட்டுக்கொள்ளப்பட்ட வீடு.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?