சில நினைவுகள்,,,,,,.

இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.ஓசாமாவை ஓபாமா போட்டுத்தள்ளியதுதான்.ஓசாமாவை படுகொலை செய்த ஓராண்டு நிறைவு வருகிறதாம்.எனவே தனது அமெரிக்க மக்களை கொஞ்சம் பத்திரமாக இருக்ககூறியுள்ளது அமெரிக்கா.


பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் சொகுசு ஓட்டல்களில் சென்று வருவதையும் மக்கள் அதிகமாக உள்ள கடைத்தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.மே முதல்வாரம் தான் ஒசாமாவின் மரண நாள் வருகிறது.
அல்கொய்தாவினர் இதைக்குண்டு வெடித்துக் கொண்டாட ஏதாவது திட்டம் வைத்திருக்காமலா இருப்பார்கள்.அவர்கள் அப்படி கொண்டாடும் இடப்பட்டியலில் இந்தியா இல்லாமல் இருக்க அல்லாவை வேண்டிக்கொள்வோம்.
ஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டாலர்தானாம்.
அதென்ன மூன்று .ஒன்று எவ்வளவு என்று கடையில் விசாரித்தால் சில்லறை தட்டுப்பாட்டில்தான் மூன்றாக ரவுண்ட் செய்து விற்கிறார்களாம்.டாலர் மதிப்பு இப்படி குறைந்து விட்டதா என்பவர்களுக்காக.ஜிம்பாப்வேயிலும் அமெரிக்க பாணியில் பணத்துக்கு டாலர் என்றுதான் பெயர்.
சுரன்
மிட்டாய் வாங்க செல்லும் சிறுவன்[ஜிம்பாப்வே]
முன்பு அந்நாட்டின் டாலர் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராகத்தான் இருந்தது.ஆனால் பொருட்களின் விலை உயர்வு, பஞ்சம் காரணங்களால் இப்போது பணவீக்கம் 231 மில்லியன் சதமாக உயர்ந்துவிட்டது.
ஜிம்பாப்வேயின் ஒரு 500 மில்லியன் டாலர் இப்போது இரண்டு அமெரிக்க டாலருக்குத்தான் சமம்.
பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க 100 மில்லியன், 250 மில்லியன் மற்றும் 500 மில்லியன் என்று உச்சக்கட்டத்தில் டாலர்களை அச்சிட்டு வாரியிறைத்துள்ளது.
ஜிம்பாப்வேயில் ஒரு பனியன் விலை, மூன்று பில்லியன் டாலர்கள். விமான நிலையத்தில் காரை நிறுத்துவதற்கு 400 பில்லியன்டாலர் கள்தான்கட்டணம் இங்கு சைக்கிள் நிறுத்த 5ரூபாயை கொடுக்கவே நாம் கவலைப்படுகிறோம்.
சுரன்

மூன்று முட்டைகள் வாங்க 100 பில்லியன் டாலர் கொடுத்தால் போதும். அந்நாட்டில் பணத்தின் மதிப்பு சரிந்து கொண்டே போனதால், பெரும்பாலான இடங்களில் ஜிம்பாப்வே நாணயங்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு அமெரிக்க டாலர்களைத்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இப்போது அமெரிக்க டாலருக்கு சில்லறை கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தற்போது உலகில் எட்டு நாடுகள் அமெரிக்க டாலர்களை பயன்படுத்துகிறது.
ஆனால் இந்த நாடுகள் உள்ளூர் நாணயங்களை சில்லறைக்கு பயன்படுத்துகின்றன. ஈக்வடார் நாட்டிலும் ஜிம்பாப்வேபிரச்னை தான். அங்கும் அமெரிக்க டாலரைத் தான் பயன்படுத்துகின்றனர்.ஆனால்அவர்கள் தங்கள் நாட்டு நாணயத்தை தாராளமாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளதால் சில்லறைக்கு பிரச்னையில்லை. ஆனால் ஜிம்பாப்வேயில் உள்ளூர் நாணயம் கிடையாது. தென் ஆப்ரிக்க நாணயங்களைத் தான் பயன்படுத்துகின்றனர்.
அதுவும் மிகவும் குறைந்த அளவில் தான் கிடைக்கிறது.எந்த கடைக்குச் சென்றாலும் சில்லறை இல்லை என்ற கதைதான்.
சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்க, கடைகளில் சாக்லெட், பேனா, சிகரெட்,  தக்காளி, வெங்காயம்,புளியை கொடுத்து சமாளித்துவருகின்றனர்..
சுரன்

இதற்கெல்லாம் காரணம் விலைவாசியைக்கட்டுப்படுத்த அரசு வியாபாரிகள் ,தொழிலதிபர்களுக்கு சில கட்டுப்பாடுகளைக்கொண்டு வராமல் சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போவதாலும் அதை சமாளிக்க அதிக பணத்தை அச்சிட்டு வெளியிட்டதாலும் உண்டான வீககம்தான்.
இந்தியாவும் வணிகர்கள்,தொழிலதிபர்களுக்கு சலுகைகளைக் கொடுத்தும் அதன் பலன் அவர்கள் தயாரிப்பு விலையை குறைக்காமல் உயர்த்திக்கொண்டே போவதை கட்டுப்படுத்தாமல் உள்ளது.இதன் பலன் நாமும் இனி கறிவேப்பிலை வாங்க 100ரூபாய் தாளை கொடுக்க வேண்டிய நிலையில் கொண்டுபோய் விடும்.அந்த இனிய நாளை மன்மோகன் சிங் -மான்டேக் சிங் கூட்டம் கொண்டுவந்த தாராளமயமாக்கல் வெகு விரைவிலேயே கொண்டு வந்து விடும்.
----------------------------------------------------------------------------------------------------------

நேசனல் ஜியாகிரபி தேர்ந்தெடுத்த 2011 ஆண்டில் சிறந்த படங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல்-2011 ஜப்பான் சுனாமி அலங்கோலம்.
அழிந்து வரும் காண்டாமிருகங்கள்
தின வாழ்வு

லிபியா கடாபி மோதல்
6 வயது மணமகள்,25 வயது கணவர்.
வட கொரிய தலைவர் கிம் மறைவை அடுத்து
போலார் கரடி இரை தேடுகிறது.
ஏமன் போராட்டத்தில் தாக்கப்பட்ட கணவருடன்
பழைய பாதை?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?