இத்தாலிய விசுவாசம்

கேரளத்தின் கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே, இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட  அரபிக் கடல் பகுதியில் கடந்த பெப்ரவரி 15 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது "என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சுரன்


இக் கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களை கைது செய்து தண்டிக்கவும் கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு எதிர்மாறாக இத்தாலியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக் கெல்லாம் வளைந்து கொடுத்து தனது இத்தாலிய விசுவாசத்தை போபர்சுக்குப்பின்2ம் முறையாக நிரூபித்துவிட்டது.
இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு வந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்ற போது எச்சரிக்கை செய்த போதிலும் விலகிச் செல்லாமல் தங்கள் கப்பலை நோக்கி படகு வந்ததால் கடற் கொள்ளையர்கள் என்று கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அக்கப்பலின் தலைமை மாலுமி நியாயவாதம் பேசி கைது நடவடிக்கைகளைத் தட்டிக் கழித்துள்ளார். 
ஆனால் கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே படகில் வருவது மீனவர்களா அல்லது கடற்கொள்ளையர்களா என்பது தெரிந்து விடும்.
இது எச்சரிக்கையாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்பதை மீனவர்களின் படகில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு பாய்ந்திருப்பதே நிரூபித்துக் காட்டுகிறது.


சர்வதேசக்கடல் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொய்யான தகவலைக்கூறிஇந்திய சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்படமுடியாது என்று அந்த இத்தாலிக் கப்பலின் தலைமை மாலுமி திமிராக கூறியுள்ளார்.
இவற்றை நிராகரித்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதற்குப் பதிலாக இந்திய அரசு பணிந்து போய் அக்கப்பலின் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது.
இத்தாலிய தூதரக அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி 4 நாட்களின் பின்னர் கொலைகாரர்களான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர்கிரோனே என்ற இரண்டு பாதுகாப்பு படை சிப்பாய்களை சரணடையுமாறு கேரள போலிஸ் கோரியது. ஆனாலும் கெடு முடிந்து 8 மணி நேரத்திற்குப் பின்தான் அவர்களை அக்கப்பலின் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் போது இத்தாலிய தூதரக தலைமை அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் இருப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது. கொச்சி அருகே மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் விருந்தினர் மாளிகையில் வைத்து ராஜமரியாதையுடன் விசாரணைஎன்ற பெயரில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த பெப்ரவரி 22 டில்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும் அந்நிய மண்ணில் எங்கள் நாட்டினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால் இத்தாலிய சட்டப்படி தான் விசாரிக்க முடியும் என்றும் எச்சரிப்ப்து போல் பேசி சென்றார்.. 
சுரன்


இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டு கள் முதலானவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தவும் இத்தாலி ஒத்துழைக்கவில்லை. அக்கப்பல் அதிகாரிகள் அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி இத்தாலிய அதிகாரிகளிடம் அல்லது சர்வதேச புலனாய்வு அமைப்பினரிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க முடியும் என்று திமிராகக் கூறி விட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின்னரே இந்திய மற்றும் இத்தாலிய அதிகாரிகள் சேர்ந்து விசாரணைக்காக அத்துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவில் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யும் இந்திய அரசு ஏகாதிபத்திய நாட்டை சேர்ந்தவர்கள் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டால் கூட கைது செய்து தண்டிக்க முன்வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சட்டப்படியே இச் சம்பவத்துக்கு தீர்வு காணப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ள போதிலும் அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அடிமையை விஞ்சும் விசுவாசத்துடன் இந்த விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கும் திசையில்தான் உள்ளன.
அரபிக்கடல் பகுதியில் இதுவரை சோமாலியக் கடற் கொள்ளையர்களின் தாக்குதலே நடந்திருந்திராத நிலையில் சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணித்து இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஒரு வித பதற்றத்தில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமே ஒழிய சிங்கள இராணுவத்தைப் போல் வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு ஏற்ப தினமணி எழுதியுள்ளது.
துனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும் போது அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து மீன்பிடிப் படகுகளைக் குறுக்கே கொண்டு போய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப்போகச் சொல்வார்கள் என்பதால் ஒரு மீன் பிடி படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிற நிலையில் இத்தாலியக் கப்பலில் இருந்து பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று இத்தாலியக் கப்பலின் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கி மீனவர்களின் மீது பழியைப் போடுகிறது.
தற்போதைய இத்தாலியக் கப்பல் விவகாரம் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடந்துள்ள ஏராளமான விவகாரங்களிலும் இந்திய அரசின் அடிமைத் தனமும் இத்தாலிய,பயமும் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே மேலை நாடுகள் என்றாலே தனது பயபக்தியை இந்தியா காட்டி வாலை சுருட்டிக்கொள்ளும்.
சுரன்


1995 டிசம்பரில் மே. வங்கத்தின் புரூலியாவில் இரகசியமாக ஆயுதங்களை விமானம் மூலம் இறக்கிய சர்வதேச கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரிட்டனின் பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்ட பின்னர், ரஷ்ய வல்லரசு மற்றும் பிரிட்டனின் நிர்ப்பந்தங்களால் இக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய தூதரக பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபல்யமான இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட போதும் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்பட்ட போதும் இந்த அவமதிப்புகளுக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. இந்திய அரசு தனது இத்தாலிய-அமெரிக்க விசுவாசத்தை வெளிக்காட்டியிருப்பதையே இத்தாலியக் கப்பல் விவகாரம் போபர்ஸ் ஊழலுக்குப்பின் மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?