இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகம்-இணையம் மீதான அடக்குமுறைகள்

படம்
-இ.பி.சிந்தன் “நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று: ரசிக்கும்படியாக இருக்கிறதென்றால், நம் முடைய நண்பர்களுக்கு அனுப்புகிறோம்” “ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எரிச்சலூட்டினால், உடனே ஒரு பேஸ்புக் நிலைத்தகவல் போடுகிறோம்.” “ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட தலைப் பில் விவாதங்களை துவக்குகிறோம்” இவற்றையெல்லாம் எவ்விதக்கட்டுப் பாடுமின்றி செய்துகொண்டிருக்கிற நம்மை ‘இனி இவையெல்லாம் தணிக் கைக்கு உட்படும்’ என்றும், நம்முடைய நட வடிக்கைகள் அனைத்தையும் பலரும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்க ளென்றும், கண்காணிப்பாளர்களுக்கு பிடித்தவற்றை மட்டுமே நாம் பேசவேண்டுமென்றும் சொன்னால் என்னவாகும்? அதனைத்தான் இந்திய அரசு நிகழ்த் தத் துவங்கியிருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே கடுமையான சட்டங் களை இயற்றி தனிமனித சுதந்திரத்தை யும் கருத்துரிமையினையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறது. சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக் கிக்கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண் ணங்களை சகமனிதர்களுடன் நேரடி யாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணை

டெசோ -வும் சோபிதரும்

படம்
கருணாநிதியின் டெசோ மாநாடு ஒன்றும் செய்யப்போவதில்லை .இங்குள்ளவர்கள் கருத்து இதுதான். ஆனால் பக்‌ஷே அரசில் உள்ளவர்கள் கொஞ்சம் பயப்படத்தான் செய்கிறார்கள். ஓமல்பே சோபித தேரர் [எப்படித்தான் பெயர் வைக்க யோசிக்கிறார்களோ?]இவர் பக்‌ஷே அரசில் அமைச்சராக உள்ளார். இவர் நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் டெசோ மாநாடை இந்தியாவில் நடத்த அனுமதிக்க கூடாது.என்று வலியுறுத்தியுள்ளார். ஏன் கொழும்பில் நடத்த வேண்டும் என்கிறாரா? அது 1976 ஆம் ஆண்டின் ஒப்பந்ததுக்கு எதிரானதாம்.இது வரை 1976 ஒப்பந்தப்படிதான் இலங்கை அரசு செயல் பட்டு வருகிறதா? முள்ளி வாய்க்கால் உட்பட ஈழத்தமிழர்கள் கொன்று குவிப்பு எல்லாம் ஒப்பந்தத்தின் வரிகள் படிதான் செய்யப்பட்டுள்ளதா? இவர் கட்சியை சார்ந்த மற்றொரு அமைச்சர் சம்பிக்க ரணவர்க்க தான் நூறு முள்ளிவாய்க்கால்கள் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.என்று ஈழத்தமிழர் மரணத்திற்கு சலுகைகள் அறிவித்தவர்.இவர்கள் இருவருமே "ஜாதிக ஹெல உறுமய" என்ற வாயில் நுழையாத கட்சியை வைத்துக்கொண்டு சிங்கள அரசில் நுழைந்தவர்கள். 'எங்கள் இலங்கையில் இந்திய எதிர்ப்பு செயல்களுக்கு

மோசடிகள் தொடர்கின்றன.....

படம்
துக்கையாண்டி ஐ.பி.எஸ் தான் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதும் நில அபகரிப்பு மோசடிதான் குற்றமாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த மோசடிக்குப் பின்னாள் ஏதோ மோசடி இருக்கலாம் என்றே தெரிகிறது. முதல்வர் ஜெயலலிதா தனது எதிரிகளை வீழ்த்தும் ஆயுதமாகவே நில அபகரிப்பு மோசடியை வைத்திருக்கிறார். கைது செய்து விட்டு பின்னர் யாரிடமாவது புகாரை முன் தேதியிட்டு பதிவு செய்து கொள்ளலாம். அது சரி .திமுக வினர் மீது நில அபகரிப்பு மோசடி வழக்கு போடுவதில் அர்த்தம் இருக்கிறது. துக்கையாண்டி மீது ஏன்? 'டான்சி" நில மோசடி வழக்கு ஞாபமகமிருக்கிறதா? ஜெயலலிதாவுக்கு எதிரான அந்த மோசடி வழக்கில் விசாரணை அலுவலராக இருந்த குற்றத்தை துக்கையாண்டி செய்துள்ளார். அந்த விசாரணையில் அவர் நியாயமாக நடந்து குற்றத்தை வெளிக்கொண்டு வந்ததுதான் அவர் செய்த மன்னிக்க முடியாகுற்றம். இது போதாதா?அவர் மீதும் நில மோசடி வழக்கு வர . _______________________________________________________________________________  அதிசயமாகும் வெற்றி....? ஒன்று மட்டும் நிச்சயம் .சங்மா தனது தோல்வியை அறிந

வருங்கால இந்திய நிதியமைச்சர் யார்?

படம்
இதோ .பிரணாப் முகர்ஜி இன்னும் சில நாட்களில் குடியரசுத்தலைவராகி மாளிகையில் முடங்கி விடுவார்.இனி வெளிநாடுகளில்தான் நாம் அவரை அநேகமாக சந்திக்க இயலும். ஆனால் அடுத்ததாக இந்திய பொருளாதாரத்தை குழப்பிவைக்க காங்கிரசு யாரை நிதி அமைச்சராக்கும்? இதோ நண்பர் கான் தனது எண்ணங்களை எழுதியிருக்கிறார்.இதில் நீங்கள் எண்ணும் நிதியமைச்சர் இருக்கிறாரா?என்று பார்த்துக்கொள்ளுங்கள். இவர் நிதியமைச்சரானால்...... -ஏ.கே.கான் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார். இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது. நிதித்துறையில் பெரும்மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள்  முடுக்கி விடுவதோடு, அந்நிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீ

வடக்கு தேய்கிறது.

படம்
இலங்கையின் வடபகுதியில்தமது சொந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களை வெளியேற்றி அவர்களின் நிலங்களை இந்தியா, மற்றும் அமெரிக்க கம்பனிகளுக்கு விற்பனை செய்வதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில்இருந்து இந்தியாவே செய்கிறது. அதன் பலத்துடன் தான் இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. தமிழ் மக்களை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா இன்று அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்கள்,நிலங்களையும் பறித்து வருகிறது. வடபகுதியில் சிங்கள மக்களையும் குடியேற்றுவோம் என்ற “மாயையை’ தென்பகுதியில் அரசாங்கம் அரங்கேற்றுகின்றது. ஆனால் இதில் உண்மையில்லை. இந்திய, அமெரிக்க கம்பனிகளுக்கு காணிகளை விற்றுவிட்டு எஞ்சிய நிலங்களில்இலங்கை இராணுவத்தினரைக் குடியேற்றும் திட்டமேஈலங்கை அரசிடம் உள்ளது. உலகின் இரண்டாவது பாலஸ்தீனமாக இலங்கையில் தமிழர்களின் வடபகுதி உருவாகி வருகிறது.  இதற்கு இஸ்ரேலின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படுகிறது. அதற்காகவே இலங்கையில் இஸ்ரேலிய தூதரகமும் இரகசியமாக இயங்கி வருகிறது. எனவே தமிழ் மக்கள் தங்களின் மண் மீட்புப் போராட்டத்தை சர்வதேச அளவில் கொண்டு

கை பேசியால் உண்டான விபரீதமா?

படம்
     சென்னைஅண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று.கருணாநிதி கட்டியது.அதனால் ஜெயலலிதாவுக்கு பிடிக்காதது. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது. நேற்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது. பஸ் மேலிருந்து தலைகுப்புற விழுந்ததால் பஸ்சில் இரு்ந்தவர்கள் அலறித் துடித்தனர். பஸ் மேலிருந்து விழுவதைப் பார்த்த கீழே சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகியது. விபத்தை நேரில் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காய

இவர் அவரில்லை ...?

படம்
வெளிவருவது இவரல்ல. பாகிஸ்தானின் உள்ளடி வேலைகளால் பஞ்சாப் மக்களின் மகிழ்ச்சியில் மிக குழப்பம். பாக் சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் வாடும் சரப்ஜித் சிங் விடுதலை என்று செய்தியை பாகிஸ்தான் வெளியிட்டது. சரப்ஜித் சிங் 1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அந்தத் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 14 பேர் பலியானதாக பாகிஸ்தான் கூறியது. எனினும் தான் குற்றமற்றவர் என்றும், தவறுதலாக தான் கைது செய்யப்பட்டதாகவும் சரப்ஜித் சிங் தொடர்ந்து வாதாடி வந்தார். அவர் ஆயுள் தண்டனை காலத்தை நிறைவு செய்திருந்தால், அவரை விடுவிக்கும்படி அதிபர் ஸர்தாரி உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பாகிஸ்தானின் சட்ட அமைச்சர் ஃபரூக் நேயக் அவரை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்தை கேட்டுள்ளார் எனவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. சரப்ஜித் சிங் லாகூர் நகரிலுள்ள கொட் லக்பட் சிறைச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளார்.

தனியே தன்னந் தனியே ....,

படம்
"லோன்சம் ஜார்ஜ்" முதலில் 1972ல் கேலப்பகோஸ் தீவான பிண்டாவில் ஒரு ஹங்கேரிய நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. லோன்சம் ஜார்ஜ் ஒரு ஆமை.இது அதன் இனத்திலேயே கடைசியான ஒன்றே ஒன்று என்பதாலே லோன்சம் என்ற பெயர், அப்போதெல்லாம், இந்த வகை ஆமைகள் அழிந்து விட்டதாகவே பலரும் கருதியிருந்தனர். லோன்சம் ஜார்ஜ் இந்த தேசியப் பூங்காவின் ஆமை விருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது. சுமார் 15 வருடங்கள் ஒரு பெண் ஆமையோடு சேர்ந்து வாழ்ந்த பின்னர், ஒரு வழியாக லோன்சம் ஜார்ஜ் அந்தப் பெண்ணோடு சேர்ந்தது. ஆனால் அந்தப் பெண் ஆமை பொரித்த முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரவில்லை. லோன்சம் ஜார்ஜ் இறந்ததை அடுத்து, அந்த பிண்டோ உட்பிரிவு ஆமைகள் இல்லாதொழிந்து விட்டதாக கேலப்பகோஸ் தேசியப் பூங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது போன்ற பெரிய ஆமை ரகங்கள் கேலப்பகோஸ் தீவுகளில் 19ம் நூற்றாண்டின் பிற்காலம் வரை மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. ஆனால் சுவையான இதன் இறைச்சிக்காக மீனவர்கள் இந்த ரக ஆமைகளை வேட்டையாடிதன் விளைவாக அவை மிகவும் அரிதாகிவிட்டன. அவை வாழும் இடங்களில் , எக்வடோர் பெருநிலப்பரப்

அந்த மூன்று நாட்கள்....?

படம்
வணக்கங்கள். இதுவரை தினசரி ஏதாவது இடுகைகளை "சுரன்" -ல் எழுதி வந்துள்ளேன். இப்போது இருநாட்கள் விடுப்பு தேவைப் படுகிறது. காரணம் நீர்க்கோவை தான்.சிவந்த மூக்கும்-நனைந்த கைக்குட்டையுமாக இருக்கிறேன்.[பயம் வேண்டாம்.இணையம் மூலம் இன்னமும் சளிக்கான வைரசை பர்ப்ப இதுவரை முடியவில்லையாம்] பொதுவாகவே எந்த நோயையும் அதுவாகவே சரியாகட்டும் என்று விட்டு வேடிக்கைப்பார்ப்பது எனது பழக்கம்.மருந்து ,மாத்திரைகள் உட்கொள்வது கிடையாது.அதிலும் அலோபதிக்கு தடா. ஒமியோபதி,ஆயுர் வேதம்,சித்த மருந்துக்கள்தான் கொடுரமான தாக்குதல்களில் உட் கொள்வேன். மற்றபடி காய்ச்சல் என்றால்காலையில் வழமை போல் எழுந்து குளிந்த்து விட்டு நடுக்கத்துடன் தலையை துவட்டி விட்டு அலுவலகம் கிளம்பி விடுவேன்.அலுவலகம் போய்சேருவதற்குள் காய்ச்சலா?யாருக்கு? என்றாகி விடும். சில வேளைகளில் அலுவலகத்துக்கு மட்டம் போடும் ஆசை வந்து விடும்.அப்போதுதான் விடுப்பு.மற்றபடி காய்ச்சலுக்கு என்று இடுப்பு போட்டதில்லை. என்னை பார்த்து எனது மகன் உட்பட குடும்பத்தாரும் காய்ச்சலைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இப்போது நீர்க்கோவை அதுதான் ஜல்ப் .இது மூக்கில் இரு

வாதமும் -பிடிவாதமும்

படம்
குடியரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான சங்மா மற்றொரு வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை பொருளாதாரம் பற்றி விவாதம் நடத்த கூப்பிட்டுள்ளார்.இந்த விவாதத்தை பிரணாப் நிதியமைச்சர் ஆகும் முன்பு நடத்தியிருக்க வேண்டும். இது ரொம்பதாமதம்.இந்திய பொருளாதாரம் குழிக்குள் போன பின் தேவையா?அதன் பின் சங்மா கூறியது மிக முக்கியமான தகவல்.அவர் இதுவரை எந்ததேர்தலிலும் தோற்ற தாக சரித்திரம்-பூகோளம் எதுவும் கிடையாதாம்.அதற்காக கவலை வேண்டாம் .குடியரசுத்தேர்தலில் அதற்கு ஒரு முடிவு கிடைத்து விடும் என்று தெரிகிறது.மனசாட்சி படிதானே வாக்களிப்பார்கள் நான் வென்று விடுவேன் என்றும் சங்மா கூறியுள்ளார்.ஒரு அரசியல்வாதியாக இருந்து கொண்டு மனசாட்சியை எல்லாம் இன்னமும் நம்புகிறார்.இவர் இதற்கு சரிபட்டு வரமாட்டார்.பிரனாப்புடன் விவாதம் செய்வதை விட குடியரசுத்தலைவர் போட்டியில் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று பிடிவாதம் செய்யாமல் இருந்தால் நல்லது. ____________________________________________________________________________________________________ ஜெர்ரி சான்டஸ்கி ன்னாள் கால்பந்து பயிற்றுவிப்பாளர் .இவர் 45 க்கும் மேற்பட்
படம்
பொதுவாக சைக்கிள்களில் செல்பவர்கள் குறைந்தபட்ச வேகத்திலேயே செல்ல முடியும். ஆனால், 80 கி.மீ., வேகத்திலும் செல்லலாம் என்று சவால் விட்டுள்ளது, ஆடி கார் நிறுவனம். இந்த நிறுவனம், இ - பைக் என்ற பெயரில் ஒரு சைக்கிளை உருவாக்கியுள்ளது. ரேஸ் கார்களுக்கு இணையாக, இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.  இதை சாதாரண சைக்கிள் போல, கால்களால் பெடலை மிதித்தும் ஓட்டலாம். இரண்டாவதாக, எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கும் போது, அதிகபட்சமாக, மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் செல்லும். மூன்றாவதாக, பெடல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டு வசதியையும் பயன்படுத்தும் போது, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சிட்டாக பறந்து செல்லும். இந்த சைக்கிளில், ஸ்மார்ட்ஃபோன் வடிவில் ஒரு கம்ப்யூட்டரும் பொருத்தப்படடுள்ளது. சைக்கிள் ஓட்டியின் ஹெல்மட்டில், பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் படங்கள் எடுத்து, இந்த கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொள்ளலாம். இத்துடன், இணைய தள வசதியையும் பயன்படுத்த முடியும். ______________________________________________________________________ தலைப்பைச் சேருங்கள்

நானே வர வேண்டுமா...?

படம்
மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீரைக் குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோரும், ஆண்களும், பெண்களும் நடனம் ஆடியது தொடர்கஇந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் அதில், மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள். அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன. அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் நடனம் ஆடினர் கேட்டால் ஆனந்த நடனம் என்றனர். இந்த நடவடிக்கையால் மதுரை ஆதீனத்தின் புனிதம் கெட்டு விட்டது. ஆதீனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.  இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.  ஆனால்,

புண்ணியவதி..............,

படம்
ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சாதாரணமாக, குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள் அனைவருமே, கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை காட்டி வந்திருக்கிறார்கள். முந்தைய குடியரசுத் தலைவர்களில் கே.ஆர். நாராயணன் ஒரு குற்றவாளிக்குக்கூட மன்னிப்பு வழங்கவில்லை. அப்துல் கலாம் இரண்டு பேருக்கு மட்டும் மரண தண்டனையை ரத்து செய்யக் கையொப்பமிட்டார். குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் சாதனை, இது