நானே வர வேண்டுமா...?


மதுரை ஆதீன மட வளாகத்தில் புனித நீரைக் குடித்து விட்டு மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்டோரும், ஆண்களும், பெண்களும் நடனம் ஆடியது தொடர்கஇந்து மக்கள் கட்சி சார்பில் சோலைக்கண்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
சுரன்
அவர் அதில், மதுரை ஆதீனம் என்னை மடத்திற்கு அழைத்திருந்தார். பிறகு அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் என்னை கலந்து கொள்ளக் கூறினார்கள்.
அப்போது புனித நீர் என்ற பெயரில் போதை கலந்த பானத்தை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தார்கள், எனக்கும் கொடுத்தார்கள். அடுத்து நித்தியானந்தாவும், ஆதீனமும் மூன்றுக்கும் மேற்பட்ட புலித்தோலை கீழே போட்டு அதில் அமர்ந்திருந்தனர். அங்கு யானைத் தந்தங்களும் இருந்தன. அதன் பிறகு நித்தியானந்தா, மதுரை ஆதீனம், ஆதீனத்தின் பெண் உதவியாளர் வைஷ்ணவி மற்றும் ஆண்களும், பெண்களும் போதையில் நடனம் ஆடினர் கேட்டால் ஆனந்த நடனம் என்றனர்.
இந்த நடவடிக்கையால் மதுரை ஆதீனத்தின் புனிதம் கெட்டு விட்டது. ஆதீனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. 
இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். 
சுரன்
ஆனால், இன்றுவரைஎனது புகாரின் மீது அவர்கள் நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளனர். புகாரைப் பதிவு செய்யவும் இல்லை.
காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திட அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.மேலும் புலித்தோல்,மான்தோல்,யானைத்தந்தம் வைத்து அலங்கரித்திருந்தனர்.அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைதும் செய்ய வேண்டும்"என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி செல்வம், மதுரை ஆதீனம், நித்தியானந்தா, வைஷ்ணவி உள்ளிட்ட 6 பேர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஜூன் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். 
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி செல்வம், புகாரில் முகாந்திரம் இருக்கிறது. எனவே உடனடியாக போலிசார் உடனே  வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் அதைச் செய்யஇனியும்  மறுத்தால் நானே வந்து வழக்குப் பதிவு செய் வேன்.அது தேவையா?"என்று கோபத்துடன் கூறினார்.
உயர்நீதிமன்றக்கிளை அனுப்பிய அழைப்பாணையை வாங்க மதுரை ஆதீனம் அருணகிரி மறுத்து விட்டார். நித்தியானந்தாவும், வைஷ்ணவியும் வாங்கியுள்ளனர்.
சுரன்

கர்நாடக காவல் துறையினர் நித்தியானந்தா மீதான குற்ற சாட்டுகளின் மீது நடவடிக்கைகள் எடுக்கும் போது தமிழ் நாடு காவல் துறையினர் நித்தியானந்தா மீது கூறப்படும் குற்ற சாட்டுகளை கண்டு கொள்ளாமல் இருக்க காரணம் என்ன வென்று தெரியவில்லை.மேலிடம் அவருக்கு ஆதரவாக இருக்கிறதோ?
இப்போது கூட ஒரு வார இதழில் மதுரை ஆதினத்தில் கார்களில் கன்னியர் இறங்குவதும் ,போவதுமான காணொளியைப்பற்றி செய்திகள் வந்துள்ளது.ஆனால் ந்மது காவல்துறை மற்றோரு பிடதியாகி விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது.புனித நீர் நித்தியானந்தா அனைவருக்கும் விநியோகிக்க ஆரம்பித்தால் அரசுக்கு வருமானம் தரும் டாஸ்மாக் கடும் நட்டத்தை சந்திக்க வேண்டியது வரும்.அதற்காவது நடவடிக்கை எடுக்க கூடாதா?
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?