காந்தியின் ரகசிய கடிதங்கள்.?

இந்தியாவுக்கு வரும் முன்னர் காந்தி, தென் ஆப்ரிக்காவில் வசித்தபோது, அவருக்கும் ஜெர்மன் யூதரான, ஹெர்மன் கேலன்பேக் என்ற கட்டிடக்கலைஞருக்கும் இடையே இருந்த நட்பில், பாலியல் ரீதியான கவர்ச்சியும் இருந்ததாக , அமெரிக்க எழுத்தாளர், ஜோசப் லெலிவெல்ட் , கடந்த ஆண்டு எழுதிய, “ Great Soul- Mahatma Gandhi and His Struggle with India” என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இப் புத்தகம் இந்தியாவின் குஜராத் மாநில அரசால் தடையும் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.
சுரன்
இப்போது அது தொடர்பான ஒரு செய்தி.

காந்திக்கும், கேலன்பேக்குக்கும் இடையே இருந்த கடிதப்போக்குவரத்துக்கள்,அவை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை லண்டனில் இருந்து செயல்படும் , சோத்பி ஏல நிறுவனத்தால் ஏலத்துக்கு விட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அதை அறிந்த இந்திய அரசு அந்த சுமார் 50 ஆண்டுகால கடிதப்போக்குவரத்துக்களையும் ஆவணங்களையும், சோத்பி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அதிக விலை கொடுத்து ஒருவருக்கும் தெரியாமல்  , விலைக்கு வாங்கிவிட்டது. இந்திய அரசு இந்த ஆவணங்களை சுமார் 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்துள்ளதாகதெரிகிறது. 
இக்கடிதங்களை டில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த ஆவணங்களை இந்திய அரசு அதிக விலைக்கு,அதுவும் பிறர் அறியாமல் வாங்கியது, இந்த சர்ச்சைக்குரிய ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் தடுக்க செய்யும் முயற்சியாகவே வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் எழுதியுள்ளன.
இந்த கடித விவகாரம் உண்மையானால், அதுஇந்தியஅரசின் தவறான நடவடிக்கையாகும் என்று கூறியுள்ளார். காந்திய ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் எஸ். ஜெயபிரகாசம்.
காந்தி தனது வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகம் என்று கூறியிருக்கிறார், அவரது சுயசரிதையான “சத்திய சோதனை”யில், அவர் பிரம்மச்சார்யம், தனது பாலியல் வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் என்று கூறிய ஜெயப்பிரகாசம், எனவே இந்தக் கடிதப்போக்குவரத்து, காந்தி குறித்து ஏற்கனவே தெரிந்த விஷயங்களை விட புதிதாக எதையும் சொல்லும் என்று தன்னால் கருத முடியவில்லை என்றார்.
மேலும், இது போன்ற ஓரின சேர்க்கையில் காந்திக்கு ஈர்ப்பு இருந்தது என்று கூறுவதாலோ அல்லது அது குறித்த விவாதங்களாலோ, அவரது புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுவிடும் என்று தான் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.
சுரன்

அரசு, இந்த ஆவணங்களை விலைக்கு வாங்கிய நிலையில், அவைகளை பொதுமக்கள் பார்வைக்கும், ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டுக்கும் விடவேண்டும். 
இந்த மாதிரி விஷயங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக இந்திய அரசு இந்த ஏலத்தை தடுத்திருந்தால் அதுமிகவும் தவறு,
பொய்யான மேலோட்டமான தகவல்கள் மூலமே மகாத்மாக்கள் உருவாக்கப்பட கூடாது.அக்கடிதம் கூறும் தகவல்கள் காந்தியின் மீது படிந்துள்ள கறையை நீக்ககூட உதவலாம்.உண்மையை தெளிவு படுத்தும் விதமான செய்திகள் கொண்டதாக இருக்கலாம்.அதை ரகசியப்படுத்துவதன் மூலம் காந்தியை அவதூற்றில் இருந்து அரசு காப்பாற்ற முயல்வதாகவே மக்கள் நினைக்கும் நிலையை அது உருவாக்கி விடும்.
_________________________________________________________________________________

சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?