செலவுகள்

சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவி .சண்முகம் அமைச்சர் ,கட்சி  பொறுப்புகளில்  இருந்து கழட்டி விடப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சி.வி.சண்முகம் வகித்து வந்த வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி. ரமணா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
சி.வி.சண்முகம் துணை சபாநாயகர் ஆக நியமிக்கத்தான் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டிருக்கலாம் .
சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
, ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊரக தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.மோகன் அக்டோபர் 6ம் நாள்  பதவியேற்றுக் கொள்வார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் நடக்கும் எட்டாவது அமைச்சரவை மாற்றம் இது
தமிழக சட்டப் பேரவை சபாநாயகராக இருந்த டி ஜெயகுமார் கடந்த வாரம் ராஜினாமா செய்தது தனி.
அதிமுக அமைச்சர்கள் சொந்த மூளையில் உதிக்கும் முடிவுகள் எதையும் செய்ய முடியாது.
அம்மா தான்  எல்லாம் .மற்றவரெல்லாம் சும்மாதான்.
பிறகு ஏன் இந்த அடிக்கடி மாற்றங்கள் என்றுதான் தெரியவில்லை.
_______________________________________________________________________________________________
 இது 11000 பவுண்ட் 
 -------------------------------
'விக்கி லீக்ஸ் 'ஜுலியன் அசாஞ் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக நிரூபித்து விட்டது.ஆனாலும் அவரை சுவீடனுக்கு நாடுகடத்தியி தீர வேண்டும்  என்பதில்  பிரித்தானிய அரசு உறுதியாக உள்ளது.
 தான் அமரிக்காவிற்கு நாடுகடத்தப்பட மாட்டேன் என உறுதி வழங்கினால் சுவீடனின் விசாரணகளை எதிர்கொள்ளத் தயார் என அசாஞ் தெரிவித்திருந்தார்.
அதனை
பிரித்தானிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை .
அதனால் ஈ க்குவாடார் அரசு வழங்கியஅகதி   பதவியால் அந்த நாட்டின் தூதகரகத்தில்  ஜூலியன் அசாஞ் வசதியாக மறைந்து வாழ்கிறார் .ஆனால் அவரை  கைது செய்வதற்காக லண்டன் காவல்துறை 24 மணி நேரமும் தூதரகத்தின் வாசலில்  காத்திருக்கிறது.

லண்டனில் அமைந்துள்ள ஈக்குவாடார்  தூதரகத்தைச் கண்காணித்தவாறு காவலர்கள் வலம்வருகின்றனர். 
இந்த ஏற்பாடுகளுக்காக பிரித்தானிய அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 11 ஆயிரம் பவுண்ஸ் களை செலவிடுகிறது.
_______________________________________________________________________________________________
 இது 1880 கோடி ருபாய் 
-------------------------------------
சோனியாவின் வெளிநாட்டு பயனச்செலவுதான் இப்போதைய பரபரப்பு அரசியல் .இது தொடர்பாக த.உ.சட்டத்தில் ஒருவர் கேட்க இதுவரை பதில் வராமல் இருந்தது.
ஆனால் மோடி 1880 கோடி செலவு என்றவுடன் ஒரு பக்கமும் சேராத பதிலை அரசு கொடுத்துள்ளது .
அவர் வெளிநாட்டு சென்றார்.மருத்துவ செலவுகளை அரசிடம் இருந்து இதுவரை கேட்கவில்லை என்று மட்டும் தகவலை மொட்டையாக கொடுத்துள்ளது அரசு.
அதில் விமானச்செலவு பற்றி ,தனி விமானம் பற்றி ,அதற்கான செலவு பற்றி ஒன்றுமே இல்லை.
 சோனியாவும் குஜராத் தேர்தல் பரப்புரையில் ஒன்றும் சொல்லவில்லை .
ஆனால் மோடி பற்றி காங்கிரசின் குட்டி தேவதைகள் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறார்களே ஒழிய செலவு பற்றி ஆதாரப்பூர்வமாக யாரும் விளக்கவில்லை.
ஆனால் மோடி மீண்டும் வாயை திறந்துள்ளார்.அவருக்கு இது தேர்தல் கால பேச்சுக்கு நல்ல தலைப்பு அல்லவா?
'சோனியா காந்தியின் வெளிநாட்டு செலவு குறித்து நான் கூறியிருக்கும் கருத்துகள் தவறானது என்று நிரூபிக்கப்படுமானால், ஒரு பொது இடத்தில் அது குறித்து பகிரங்கமாக நான் மன்னிப்பு கேட்கத் தயார்."
-என்று தோள் தட்டியிருக்கிறார்.திக் விஜய்சிங் என்ன சொல்லப்போகிறார் .?
_______________________________________________________________________________________________

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?