கையாலாகாத்தன்மை

டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி மாணவி கற்பழிப்புக்காக நடந்த போராட்டம்,அதிர்வலைகள்,பிரதர்,கு டியரசுத்தலைவர் வரையிலானவர் அறிக்கைகள் சற்று அதிகமாகவே இந்தியாவை குலுக்கி விட்டது.இதற்கான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது அநியாயம் என்றாலும்,அவர் தானாகவே செத்துப்போனதாக திசை திருப்பியது அதிலும் அநியாயம்.
suran

இந்த போராட்டங்கள் இதுவரை இது பொன்ற கற்பழிப்புகள் இந்தியாவிலேயே நடைப்பெற்றது கிடையாது.
இதுதான் முதல் அக்கிரமம்  அதனால் மக்கள் கொதித்து எழுந்தது போல் ஒரு பிம்பத்தை உண்டாக்கி விட்டது.
இது போன்ற சம்பவங்களில் தன்னிச்சையாக முதலிலேயே பெண்ணுரிமை இயக்கங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவைகள் இது போன்று போராட்டங்களை வழி நடத்திருந்தால் இந்த சமபவங்களே நடந்திருக்காது.
 
வாச்சாத்தியில் அரசு ஏவலர்களே  கிராமத்தையே சூறையாடி-அதில் உள்ள சிறுமிகள் வரை பெண் என்று இருந்தாலே கற்பழித்து ஒரு பெண் ஆளும் போதே களங்க்கப்படுத்தினார்களே அப்போது இது போன்றது குட அல்ல சிறு அளவிலான முணுமுணுப்பு கூட எழாதது இன்னமும் வேதனையையும் ஆச்சரியத்தையும் தருகிறது.

கிட்ட தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர்தான் நீதியே காகித அளவில் கிடைத்துள்ளது.அதுவும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர் போராட்டத்தினால்.
கல்வியறிவற்ற கூலித் தொழிலாளியான விஜயா என்ற பெண், தனது 17 ஆவது வயதில்
(1993 ஆம் ஆண்டில்) பாண்டிச்சேரியைச் சேர்ந்த 6 போலிஸ் காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
suran
நீதி?கேட்கும் போராட்டம்.

 இது தொடர்பான வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் அந்த காவலர்கள் யா ரும் தண்டிக்கப்படவே இ ல்லை.
டெல்லி பெண் கற்பழிப்பு சரிதான் என்றும்,அல்லது அதற்கு போராட்டம்தேவை இல்லை என்பதும் இதன் நோக்கம் அல்ல.இது போன்ற இன்னும் நிறைய கற்பழிப்புகள் இருக்கும்போது அதற்கு நியாயங்கள் கிடைக்காத போது இந்த மக்கள் கூட்டம் அவைகளை கண்டு கொள்ளாமல் இதை மட்டும் இவ்வளவு கோபத்துடன் எதிர் கொள்வது ஏன் ?அதிலும் இந்த போராட்டங்கள் நடக்கும் வேளை இது போன்ற கற்பழிப்புகள் பல நடந்து செய்திகளாகவும் வந்தன அவை பற்றி இவர்கள் கண்டு கொள்ளவே இல்லை .அந்த டெல்லிப் பெண்ணுக்கு மட்டுமே பொராட்டமாக்கிக்கொண்டனர்.
அப்பெண் இப்போது இறந்து விட்டதற்கு கூட இரண்டு நாள் கடை அடைப்பு,புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டதாக நட்சத்திர ஓட்டல்கள் ,வணிகர்கள் அறிவித்துள்ளனர்.இந்தியாவில் எத்தனையோ கொடுர கற்பழிப்புகள் நடந்துள்ளன,நடக்கின்றன.இனியும் நடக்கலாம்.ஆனால் இப்போது இந்த பெண்ணுக்கு மட்டும்  ஏன் இத்தனை முக்கியத்துவம்,போராட்டம்?அதே வேளையில் இங்கு தூத்துக்குடியில் அதைவிட அனியாயமாக கற்பழித்து கொல்லப்பட்ட புனிதாவையும் சேர்த்து இந்திய அளவில் ஏன் போராடவில்லை?
suran

சரி போகட்டும் .இந்தியாவில் 2011 ஆண்டு கொள்ளாமல் விடப்பட்ட  கற்பழிப்பு களை பார்ப்போம்.
தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
 இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இதுவரை இந்தியாவில்  4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இது கணக்கில் வந்தது மட்டும்தான் .அசிங்கத்துக்கும்,அவமானத்துக்கும் பயந்து காவல்துறையில் முறையிடாப்படாதது இதே அளவை எட்டும் என்று தெரிகிறது.
மும்பையில்  அக்டோபர் மாதம் தமது மூன்று பெண் நண்பர்களை பாலியல் தொந்தரவில் இருந்து காக்க முற்பட்ட கீனன் சன்டோல் மற்றும் ரூபென் பெர்னாண்டஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
 அவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை கூட இன்னும் காவலர்கள் முடிக்க வில்லை.
அரசியல்வாதிகளாலும்,ஊடகங்களாளும்தான்  இது போன்ற சிலருக்கு அதிக விளம்பரமும்,முக்கியத்துவமும் .சில இதே தரமானவற்றை கண்டு கொள்ளாமலும் உருவாக்கும் நிலை எற்படுகிறது.முக்கியத்துமும் இன்றி போகிறது.
''இந்தியாவின் வீரப்பெண்மணி மறைந்து விட்டார்."-இது டெல்லி மாணவியின் மரணத்துக்கு இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கை.கற்பழிப்புக்கு ஆளாகி மரணமடைவது ஒரு வீரமா?இது போன்ற அவலங்களை  தடுக்க இயலா கையாஅலகதவர்களின் அறிக்கை.மக்களை திருப்திபடுத்தும் வகையில் மட்டுமே வெளியாகிறது.வேறு என்ன செய்து மக்களை ஏமாற்றுவது?தங்கள்  கையாலாகாத்தன்மையை மறைப்பது?
இது கற்பழிப்பு வீரர்களுக்கு பரிசாக எந்த ஆண்மை காரணமோ அதை விலங்குகளுக்கு நீக்கி விடுவதுபோல் அகற்றி விடுவது அல்லது காயடிப்பு செய்வதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.
அரசுக்கு இதுபுதிய அல்லது  முடியாத செயல் அல்ல.மிசா காலத்தில் சாலையில் இரவு வரும் ஆண்களையெல்லாம் கூட்டிக்கொண்டு சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த அனுபவம் இருக்கிறதே?
இது பொன்ற தண்டனைதான் மற்றவர்களுக்கும் இந்த கற்பழிப்பு சிந்தனையையே வர விடாமல் செய்தும் விடும்.

suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------

தண்ணீருக்கு நானடிமை.

--------------------------------------------
இங்கிலாந்தைச் சேர்ந்த இருபத்தாறு வயது சாஷா கென்னடி தண்ணீர் குடிக்கின்ற பழக்கத்துக்கு அடிமையாகி இருகின்றார்.
இவர் ஒவ்வொரு நாளும் இருபத்தைந்து லிட்டர் குடிக்கிகின்றார். இவரால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.  இரவிலும் இதே நிலைதான்.
எனவே எந்த நேரமும் எங்கும் தண்ணீர் பாட்டில்களை காவிக் கொண்டுதான் செல்கின்றார். அத்துடன் ஒரு நாளில் குறைந்தது நாற்பது தடவைகள் கழிவறைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.
suran
இரண்டு வயதாக இருந்தபோது அடங்காத தண்ணீர்த் தாகம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தண்ணீர் என்று பெற்றோரை விடாமல் கேட்டு வந்திருக்கின்றார். வைத்தியர்களிடம் கொண்டு போய் பெற்றோர் காட்டி இருக்கின்றனர். ஆனால் எந்தவொரு கோளாறும் கிடையாது என்று சொல்லி வைத்தியர்கள் அனுப்பி விட்டனர்.
இவருக்கு ஆறு வயது ஆனது. இவரது படுக்கைக்கு அருகில் அம்மா ஒவ்வொரு இரவிலும் சில லிட்டர் தண்ணீர் வைப்பார்.
பாடசாலைக்கு தண்ணீர் போத்தல்களுடன் சென்றார். இடைவேளைகளின்போது ஏனைய பிள்ளைகள் விளையாடி மகிழ்வார்கள். இவரோ தண்ணீர்க் குழாயடிக்கு சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு இருப்பார். அதிலேயே நேரம் போய் விடும்.
இவருக்கு பதின்மூன்று வயது ஆனது. ஒவ்வொரு நாளும் பதினைந்து லிட்டர்  தண்ணீர் குடிக்கலானார். இவருடைய படுக்கை அருகில் ஐந்து லிட்டர்  தண்ணீர் கான் ஒவ்வொரு இரவிலும் வைக்கப்பட்டது.
இவருக்கு பதினாறு வயது ஆனது. பாடசாலை படிப்பை விட்டு விட்டு வேலைக்கு செல்ல தொடங்கினார். அலுவலகத்தில் இவருக்கு அருகில் தண்ணீர் கூலர் வைக்கப்பட்டது. இருபது வயது ஆனபோது இருபது லிட்டர்  தண்ணீர் தினமும் குடிக்கலானார். ஆயினும் இவரது தண்ணீர் தாகம் உச்சம் அடைந்து கொண்டே செல்லல் ஆயிற்று.
 drinking_water_2
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டிலிருந்து வீட்டில் இருந்தவாறு ரெலிகொம் நிறுவனம் ஒன்றுக்கு வேலை பார்த்து வருகின்றார். தற்போது ஒவ்வொரு நாளும் பதினெட்டு லிட்டர் முதல் இருபத்தைந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்கின்றார். இவரால் இப்போது ஒரு நாளைக்கு ஆகக் கூடியது ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடமும் வரை தொடர்ச்சியாக தூங்க முடிகின்றது. தண்ணீர் குடிக்கின்றமைக்கு அல்லது மலசலகூடத்துக்கு செல்லத்தான் தூக்கத்தை விட்டு எழுவாராம். 
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?