இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறைகள்

படம்
நமது குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டில் பதவி காலம் முடியும் போது ஒரு மன்க்குறையுடன் இருப்பதாக தெரிகிறது .இன்னமும் மூன்று நாடுகளுக்கு செல்ல வேண்டும் கால அவகாசம் இல்லை.பதவிகாலம் முடிகிறது.வெளிநாடுகளுக்கு அதிகமாக சுற்றுப் பயணம் செய்வதாக, என் மீது புகார் கூறப்படுவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. என்னுடைய சொந்த விருப்பத்துக்காகச் செல்லவில்லை. மற்ற நாடுகளுடன், இந்தியாவின் உறவை மேம்படுத்த வேண்டும் என்றே செல்கிறேன். அரசு தரப்பில் இன்னும் மூன்று நாடுகள் சுற்றுங்கள் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆனால்போதிய கால அவகாசம் இல்லாததால், இது சாத்தியமில்லை என்றுள்ளார். இன்னமும் மூன்று நாடுகளை அவர் சுற்றிப்பார்த்து விட்டு வரும் வரை குடியரசுத்தலைவர் தேர்தலை ஒத்திப்போட சட்டத்தில் வழியிருக்கிறதா என்று ஆய்வு செய்ய ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தால் என்ன? குடியரசுத்தலைவர் போட்டிக்கு தாங்கள் ஆளை கூறவில்லை என்று இலங்கைப்பயணம் புகழ் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.ஆனால் அமீது அன்சாரி,பிரணாப் என்று யாராவது கூறினால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். முலாயம் -ஜெயலலிதா கூறுவது போல் அப்துல் கலாம் என்றால் சரிதான் என

இத்தாலிய விசுவாசம்

படம்
கேரளத்தின் கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே, இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட  அரபிக் கடல் பகுதியில் கடந்த பெப்ரவரி 15 அன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது "என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக் கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களை கைது செய்து தண்டிக்கவும் கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு எதிர்மாறாக இத்தாலியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக் கெல்லாம் வளைந்து கொடுத்து தனது இத்தாலிய விசுவாசத்தை போபர்சுக்குப்பின்2ம் முறையாக நிரூபித்துவிட்டது. இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு வந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்

வரப்போகும் வாழ்க்கை சரித்திரம்.

படம்
பிரதிபா பாட்டீலின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதிஅன்றுடன் முற்றுப்பெருகிறது. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது 50 வருட பொது வாழ்க்கை குறித்து அவர் சுயசரிதை எழுதப் போவதாக இந்திய மக்களை மிரட்டியுள்ளார். அதற்கு முன்னர் சிறிய அவரின் வாழ்வுக்குறிப்பு இதோ':  1962-ல் சாலிஸ்கோனில் நடைபெற்ற 'சத்ரிய மகா சபையின்' மாநாட்டில் பிரதீபாவின் சொற்பொழிவை கேட்ட அன்றைய மராட்டிய முதல்வர் யஷ்வந்த்ரோ சவான், பிரதிபாவைமராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். முதன் முறையாகத்தேர்தலில் போட்டியிட்ட பிரதீபா பாட்டீல் ஜல்கோன் சிட்டி தொகுதியிலிருந்து ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பின்னர் 1985-ம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறை எட்லபாட் தொகுதியிலிருந்தே பிரதீபா ச.ம.உ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 முதல் 1990 வரை அவர் மாநிலங்களவையி பதவி வகித்தார். 1991-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதீபா அமராவதி தொகுதியில் போட்டியிட்டு, முதன்முறையாக மக்களவை எம்.பி ஆனார். அரசியலில் ஈடு பட்டதில் இருந்து தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் பிரதீபா பாட்டீல் போட்

எண்ணை முழுக்கு

படம்
என்ன. இத்தனை நாளாகி விட்டது இன்னமும் பெட்ரொல்-டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கிறார்கள் என்று நேற்றுதான் கனவு கண்டேன்.அன்றே"சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், டீசல், சிலிண்டர், மண்ணெண்ணெய் விலைகளை கடந்த ஓராண்டாக உயர்த்தவில்லை என்றும், இவற்றின் விலைகளை “மாற்றி அமைக்க” வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக"நமது இந்திய விலைவாசி உயர்வு அமைச்சர்[பிரதமர் என்று கூட சொல்லலாம்]மன்மோகன்சிங் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு மன்மோகன் சிங் பேசியுள்ளார். மேலும்அவர் மக்கள் மீதுள்ள பாசத்தில் “மக்கள் பாதிக்கப்படாத அளவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சிலிண்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றின் விலையை மத்திய அரசு நீண்ட நாட்களாக உயர்த்தாமல் இருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இப்படி விலை உயர்த்தப்படாததால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்படும். அது பின்னர் அரசின் தலையில் விழும். இந்தியாவின் இறக்குமதிகளில் 80 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே விலை உயர்த்தப்பட

புதிய கோட்டை

படம்
என்னதான் நாம் தமிழக இடைத்தேர்தல்களை பற்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே பல செய்திகளையும் படித்து மக்கள் மனதை பற்றி அலசி அறிந்து கொண்டது போல் எழுதினாலும் ஒட்டு மொத்தமாக நம் முகத்தில் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் கரியை பூசி விடுகிறார்கள்.அதற்காக நாம் சும்மா இருந்து விட முடிகிறதா? மீண்டும் இடைத்தேர்தல்கள் வந்து நம் ஆய்வு மனப்பான்மையை தட்டி எழுப்பிவிடுகிறதே? சங்கரன் கோவிலில் விலைவாசி உயர்வு,பேருந்து கட்டண -பால் விலைஉயர்வு இவை எல்லாவற்றையும் விட கண்ணைக்கட்டி இருட்டில் விட்ட மின்வெட்டு இவைகளை மக்கள் சகிக்காமல் வாக்குகள் ஆளுங்கட்சியை விட்டுமாறி விழும்  என்று பக்கம்,பக்கமாக எழுதினால் மக்கள் கண்ணை மின் வெட்டு மறைக்காமல் இலவச மிக்சி,கிரைண்டரும்-வீட்டில் கவரில் வைக்கப்பட்டு விழுந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் மறைத்து விட்டது.விளைவு முகத்தில் கரி. புதுக்கோட்டையாவது புதிய முடிவைத்தருமா? இடைத்தேர்தல்கள் என்றாலே திண்டுக்கல் தேர்தலுக்குப்பின் ஆளுங்கட்சி தான் வெல்லும் என்ற எழுதப்படா விதி உள்ளதே. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே தனது விதிகளை வைத்துக் கொள்கிறது.[திமுக வுக்கு மட்டு

ஒரு லட்ச வணக்கங்கள்.

படம்
இணையத்தில் செய்தி களை வாசித்து விட்டு கருத்துக்களை பதிவு செய்துவந்தேன்.சில இதழ்கள் நமது கருத்துக்கள் அவர்களை இடிப்பது போல் இருந்தால் மதிப்பாய்வுக்கு பின் அதை வெளியிடாமலேயே குப்பையில் போட்டது. அப்போதுதான் எல்லோரையும் போல் நாமும் ஒரு வலைப்பூவை உருவாக்கி உலவ விட்டால் என்ன என்ற நப்பாசை.யார் அதை படிக்கப்போகிறார்கள்.என்ற எண்ணமும் இருந்தது.அப்படி படிக்காததே நமது அரைவேக்காடு எழுத்துக்கும் நல்லது என்ற எண்ணமும் வர இந்த "சுரன்' உருவானது. இப்போது 'சுரன்'உருவாகி கிட்டதட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை 1,00,080 முறை சுரன் பார்வையிடப்பட்டுள்ளது.இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் நிகழ்வு. எனது கருத்துக்களைத்தான் இதுவரை தந்து வந்துள்ளேன்.பிற தளங்களில் இருந்து என்னை கவர்ந்த பிறர் படிக்க வேண்டும் என்று நான் எண்ணிய கட்டுரைகளை-செய்திகளை நன்றி: என்று குறிப்பிட்டு மறு பதிவிட்டுள்ளேன். அது மற்றவர்களை கவர்ந்ததா,படித்தார்களா என்பது வேறு விடயம்.அதை தொடர்ந்து செய்யவிருப்பம். சுரனில் கருத்திட்டவர்கள் கருத்தை அப்படியே வெளியிட்டு வந்துள்ளேன்.அதை எனக்கு ஆதரவாக திருத்தியமைக்கவில்லை.அதுவும

2-வது இடம்

படம்
மதுரை என்றாலே வில்லங்கங்கள் அதிகம்தான்.உலகம் முழுக்க இந்திய தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக சானல் மூலம் ஒளிபரப்பான  நடிகை ரஞ்சிதாவுடன் டூப் போடாமல் கட்டில் காட்சிகளில் நடித்த நாயகன் நித்தியானந்தாவை பாரம்பரியமிக்கமதுரை ஆதீனத்தின்293 வது ஆதினமாக முடிசூட்டி வைத்துள்ளார்.அருணகிரியார். மதுரை மக்களுக்கு ஆசி வழங்க புது ஆனந்தா சாமியார் தயார். இப்படி சிற்றின்ப குற்ற சாட்டில் சந்தி சிரித்த சாமியாரை மக்களுக்கு பேரின்பம் வழங்கும் இடத்தில் அமர்த்தியவரை என்னவென்று சொல்வது.ஒரு வேளைபழைய ஆதினம் அருணகிரியார் சிடி பார்த்தது முதல் நித்தியானந்தாவின் ரசிகராகியிருப்பாரோ? அதை விட அதி நவீன விளக்கம் அருணகிரியார் தந்துள்ளார். "மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் என்று, சிவபெருமான் கனவில் கூறினார்.[கைலாயத்தில் சன் டிவி தெரிகிறதா?] அப்போதுதான் நித்யானந்தா நட்பு கிடைத்தது. பிடதியில் நடக்கும் வழிபாடுகள் பிடித்தன. ஆசிரம பூஜையில் இளம் பெண்கள் உட்பட பலர் நடனமாடி ஆண்டவனை வழிபடுவது, என்னைக் கவர்ந்தது. நானும் ஆடினேன். மனிதன் எப்போதும் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்க வேண்டும்.[பெண

சில நினைவுகள்,,,,,,.

படம்
இப்போதுதான் நடந்தது போல் இருக்கிறது.ஓசாமாவை ஓபாமா போட்டுத்தள்ளியதுதான்.ஓசாமாவை படுகொலை செய்த ஓராண்டு நிறைவு வருகிறதாம்.எனவே தனது அமெரிக்க மக்களை கொஞ்சம் பத்திரமாக இருக்ககூறியுள்ளது அமெரிக்கா. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் சொகுசு ஓட்டல்களில் சென்று வருவதையும் மக்கள் அதிகமாக உள்ள கடைத்தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.மே முதல்வாரம் தான் ஒசாமாவின் மரண நாள் வருகிறது. அல்கொய்தாவினர் இதைக்குண்டு வெடித்துக் கொண்டாட ஏதாவது திட்டம் வைத்திருக்காமலா இருப்பார்கள்.அவர்கள் அப்படி கொண்டாடும் இடப்பட்டியலில் இந்தியா இல்லாமல் இருக்க அல்லாவை வேண்டிக்கொள்வோம். ஜிம்பாப்வேயில் மூன்று முட்டையின் விலை 100 பில்லியன் டாலர்தானாம். அதென்ன மூன்று .ஒன்று எவ்வளவு என்று கடையில் விசாரித்தால் சில்லறை தட்டுப்பாட்டில்தான் மூன்றாக ரவுண்ட் செய்து விற்கிறார்களாம்.டாலர் மதிப்பு இப்படி குறைந்து விட்டதா என்பவர்களுக்காக.ஜிம்பாப்வேயிலும் அமெரிக்க பாணியில் பணத்துக்கு டாலர் என்றுதான் பெயர். மிட்டாய் வாங்க செல்லும் சிறுவன்[ஜிம்பாப்வே] முன்பு அந்நாட்டின் டாலர் மதிப்பு அமெரிக்க டாலருக்

அணை வலுவானதுதான் .

படம்
முல்லைப்பெரியாறு அணை வலுவாகவே இருக்கிறது. அங்கு புதிய அணை ஒன்றையும் அமைக்க வேண்டாம் என்றும் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது. அந்த அணை வலுவாக உள்ளதா, அப்பகுதியில் புதிய அணை ஒன்று கட்டப்பட வேண்டுமா என்று இந்திய உச்சநீதிமன்றம் இரு கேள்விகளை எழுப்பி அது தொடர்பில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து கருத்துக் கேட்டது. அந்த வல்லுநர் குழுவில் தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணனும், கேரளா சார்பில் நீதிபதி கே டி தாமஸும் உறுப்பினர்களாக இருந்தனர். உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அந்தக் குழு பல ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை முத்திரையிட்டஉறையில் 25.4.12அன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை தற்போது கூற முடியாது என்று அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ ஆர் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார். ஆனாலும்தற்போதைய அணை வலுவாக இருக்கிறது, அங்கு புதிய அணை தேவையில்லை என்பதிலும் கருத்தொற்றுமை நிபுணர்களி