இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகை நமக்கு பகை.

படம்
இன்று புகையிலை எதிர்பு நாள், புகைக்கப் புகைக்க சுகமாக இருந்து, புற்று நோய்க்குக் கூட்டிச் செல்வது தான் புகைப்பழக்கம். இந்தியாவில் புகை யிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டே போகிறது. புகைப்பிடிப் பவர்கள் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்வதோடு, அருகில் உள்ள வர்களின் உடல்நலத்தையும் சேர்த்துக் கெடுக் கின்றனர்; சுற்றுச்சூழலையும் சீரழிக்கின்றனர்.“அபாயகரமான பொருள்” என்று எச்ச ரிக்கை வாசகத்தோடு சிகரெட், பாக்கு உள் ளிட்ட போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது மத்திய அரசு. கடைகளில் “அபாயகரமான போதைப் பொருள்” என்ற எச்சரிக்கை அட்டையை வைத்துவிட்டுத் தயக்கமின்றி விற்பனை நடைபெறுகிறது. புகையிலைப் பழக்கத்தின் பிடியில் சிக்கிய வர்கள் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத் தாமல் சிகரட், பீடி, ஹான்ஸ், மாவா, பான் பராக் என வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்தியாவில் ஆண்டுதோறும் இறந்து போகிறவர்களில் 9 லட்சம் பேர் புகையிலை அடிமைகளானவர்கள். அதாவது நாள்தோ றும் 2,500 பேர்! வறுமை, பஞ்சம் பட்டினியிலும், கலவரங்களிலும், இயற்கைச் சீற்றத்திலும் கூட இவ்வளவு பேர் மடிவதில்லை.இந்திய அரசுக்

ஜூன் சில குறிப்புகள்.

படம்
முக்கிய மானவர்களின் பிறந்த தினங்கள். ______________________________________________ •ஜுன் 2 (1943) - இளையராஜா (இசையமைப்பாளர்) •ஜுன் 3 (1924) - மு.கருணாநிதி (தி.மு.க. தலைவர்) •ஜுன் 8 (1930) - எம்.என்.விஜயன் (எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் கல்வியாளர்) •ஜுன் 9 (1949) - கிரண் பேடி ஐ.பி.எஸ். (காவல்துறை, முன்னாள் அதிகாரி) •ஜுன் 11 (1947) - லாலு பிரசாத் யாதவ் (பீஹார் அரசியல்வாதி) •ஜுன் 13 (1909) - ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்) •ஜுன் 19 (1947) - சல்மான் ருஷ்டி (நாவலாசிரியர்] •ஜுன் 20 (1952) - விக்ரம் சேத் (பிரபல எழுத்தாளர்) •ஜுன் 27 (1838) - பங்கிம் சந்திர சாட்டோபாத்யாய (வங்கக் கவிஞர்) •ஜுன் 28 (1921) - பி.வி.நரசிம்ம ராவ் (முன்னாள் பாரதப் பிரதமர்) நினைவு தினங்கள்  _____________________   •ஜுன் 1 (1996) - நீலம் சஞ்சீவ ரெட்டி முன்னாள் குடியரசுத் தலைவர்)  •ஜுன் 2 (1988) - ராஜ்கபூர் (பிரபல இந்தி நடிகர்)    •ஜுன் 18 (1858) - ராணி லட்சுமிபாய் (ஜான்ஸி ராணி, மராத்தி-சுதந்திரப்

"சோலை" -நினைவு.

படம்
சோலை. ========= தனது சுவையான ஆணித்தரமான அதேநேரம் கண்ணிய மான எழுத்தாளர். அவரின் கட்டுரைகளைப்படிப்பதற்காகவே மக்கள் குரல்,மக்கள் செய்தி,அலை ஓசை போன்ற தினசரிகளைமுன்பு படிப்பதுண்டு.இப்போது நக்கீரனில் தொடர்ந்து எழுதி வந்தார். எம்.ஜி.ஆர் நடத்திய "அண்ணா" நாளிதழில் எழுதியவர் சோலை.ஆனால் பொதுவுடமைவாதி அவர். எம்ஜிஆரால் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக வலம்புரி ஜானுக்கு முன் நியமிக்கப்பட்டவர்.ஜெ எழுதிய கட்டுரைகளுக்கு இவரின் கருத்துக்களும்-கரங்களும்தான் உதவியது. ஆனாலும் இவருக்கு ஜெயுடன் ஒத்துப்போகாததால் விலகிவிட்டார். அதன் பின் பல்வேறு இதழ்களில் சுதந்திரமாக எழுதியவர் சோலை. தனது 80 வயது வரை சாகும் வரை பேனாவை நிறுத்தவில்லை. அவரின் இழப்பு மிக கொடுமையானது.சின்ன குத்தூசியை இழந்த நமக்கு சோலை இழப்பும் பேரிழப்புதான். சோலை போன்று எழுத முயன்று தோற்றுப்போனவர்கள் பலரைத்தெரியும்.அக்கூட்டத்தில் நானும் உண்டு. சுவையுடன் அரசியல் கட்டுரைகளை சம்பந்தப்பட்டவர்கள் கூட வெறுப்பை காட்டமுடியாதவாறு கண்ணியமாக எழுதிட இனி யார்? வாழ்க்கை ____________ தமிழகத்தின் மூத்த பத் திரிகையாளரான சோலை அவர்கள் இன்

இந்து மாக்கடல் யாருக்கு?

படம்
20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்தமாக்கடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது.   இதன் காரணமாக இந்தியாவும், சீனாவும் இந்து மாக்கடலில் ஆதிக்கம் செலுத்தி, தம் நலன் சார்ந்த போட்டியிலீடுபடுகின்றன. இந்து சமுத்திரத்தில் உள்ள பல நாடுகளில், சீனா தன் துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. அதன் மூலம் அதன் கடற்படை இந்தப்பகுதியில் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. இந்தியா, சீனாவை இந்து மாக்கடலில் தோற்கடித்து அதன் கடற்படைவராமல் செய்ய முயல்கின்றது. இதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பும் உள்ளது. இருப்பினும் சீனாவின் செல்வாக்கை இரு நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.  உலகில் மூன்றாவது பெரியகடல்பகுதியான இந்துமாக்கடல் 47 கடற்கரையோரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியுள்ளது. வங்களா விரிகுடா, அராபியக் கடல், மலாக்கா தொடுகடல் என்பன இந்து மாக்கடலின் முக்கிய கடற்பகுதிகளாகும்.  டிக்கோயா காசியோ, இலங்கை, அந்தமான் தீவுகள், மொரிசீயஸ் என்பன இந்துமாக்கடலின் தீவுப் பகுதிகளாக காணப

தான விற்பனை ?

படம்
உலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனிதனின் ஒவ்வொரு உறுப்பு விற்கப்படுகிறது.  அதிலும்" மனிதனின் சிறுநீரகம்தான் இப்போது கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது" என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.  கள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல் உறுப்புகளை விற்கும்சேவையில் ஈடுபட்டுள்ள உடலுறுப்பு வியாபாரிகள் கூறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. மாற்று சிறுநீரகம் தேவைப்படுவோரிடம் ரூ1,28,500 ரூபாய்க்கு விலை பேசிவாங்கிக்கொண்டு, வறுமையின் காரணமாகவோ அல்லது பொருளாதார தேவைக்காகவோ சிறுநீரக தானம் செய்வோரிடம் வெறும் 3,200 ரூபாய்மட்டுமே தரப்படுவதாகத் தெரிகிறது. சிறுநீரகத் தேவைதற்போது உலக அளவில் அதிகரித்துள்ளது.இதனால், கள்ளச் சந்தையில் அதன் லாபமும் அதிகரித்துள்ளது.இதிலும் கஞ்சிக்கு வழியில்லாமல் சிறு நீரகம் விற்போர் ஏமாற்றப்படுகின்றனர். போதை அடிமைகள் சிலர் போதைமருந்துக்கள் வாங்கவும்-சிலர் போதையில் அவர்களுக்கு தெரியாமலும் சிறு நீரகம் எடுக்கப்படுகிறது.ஆப்ரிக்க ,இந்திய மக்கள்தான் சிறுநீரக விற்பனையில் முன்னணியில் உள்ளனர்.

பாதுகாப்பது யார்?

படம்
முல்லைப்பெரியாறு அணை வலுவாக இல்லை என்று கொஞ்சகாலம் அரசியல் நடத்தி மதுரை,தேனி மாவட்ட மக்களை கொதிக்க வைத்த கேரள அரசு இடையில் கொஞ்சம் பேசாமல் இருந்தது .சரிதான் கொஞ்சம் பொறுப்பாக இருக்கிறது என்று நினைத்தால். இப்போது தனது குசும்பை மீண்டும் முல்லைப்பெரியாறில் காட்டிவருகிறது. நீதிபதி ஆனந்த் குழு அணை ஆய்வுக்காக "அணையின் உறுதியை சோதிக்க சில இடங்களில் துளையிட்டு மாதிரியை எடுத்து சென்று ஆய்வு செய்தது.அதன் அடிப்படையில் அணை வலுவாக இருக்கிறது என்று குழு முடிவும் செய்து அறிக்கை கொடுத்துவிட்டது. இப்போது சோதனைக்காக துளையிட்ட இடங்களை மீண்டும் பூசி அடைக்க சென்ற பொதுப்பணித்துறையினரை அணையின் பக்கமே நெருங்க கேரள காவல்துறை விடவில்லை. அடுத்த நாள் சென்ற போதும் அதே தடைதான், மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த பிரச்னையை சொல்லியபோது வழக்கமான செவிடன் காது சங்குதான். இப்படி துளைகளை அடைக்காமல் இருந்து விட்டாலாவது அணை பல்கீனமாகி விடாதா?அதன் மூலம் அணையை ஓரங்கட்டி தான் நினைத்ததுபோல் புதிய அணை கட்டலாம் என்ற பரந்த மனப்பான்மைதான் கேரளாவுக்கு. மத்திய அரசு இன்னும் வாயை மூடிக்கொண்டு இருப்பது மீண்டும் இரு மாநிலங்கள

இனி சண்டை போடா ஜாக்கி சான்

படம்
புரூஸ்லிக்குப்பின் அதிவேக குங்ஃபூ சண்டைகள் மூலம் உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள சீன நடிகர் ஜாக்கிசான், இனி சண்டை படங்களில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.அதற்கு அவரின் ஐம்பத்தெட்டு வயதும் ஒரு காரணம். விரைவில் வெளியாகவுள்ள  சைனீஸ் ஸோடியாக்  தான் தான் அதிரடி சண்டைகள் போடும் ஜாக்கிசானின் கடைசி சண்டை படமாக இருக்கும். "நான் என் கலையுலக வாழ்க்கை நெடுகவும் அதிரடிசண்டைபடங்களில் நடித்துவந்துள்ளேன். ஏதாவது ஒரு கட்டத்தில் அதற்கு ஒரு முடிவு வரத்தான் வேண்டும். நானே நடித்து, இயக்கி, தயாரித்து, சண்டைக் காட்சிகளை அமைத்துள்ள இந்தப் படத்துடன் இந்த அறிவிப்பை செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்." என்றார் ஜாக்கிசான். அதிரடி நாயகன் என்ற நிலையிலிருந்து தான் ஓய்வுபெற்றாலும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய பாத்திரங்களில் தான் தொடர்ந்து நடிக்கப்போவதாக ஜாக்கிசான் தெரிவித்துள்ளார். நாற்பது ஆண்டுகாலமாக சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்து வந்துள்ள ஜாக்கிசான் மயிர்க்கூச்செரிய வைக்கும் சாகசங்களை திரையில் நிகத்தி உலகெங்கும் ரசிகர்களைப