என்றும் இளமை ..

-----------------------------------------
சில பதிவுகளில் அவ்வப்போது உடல் நலம் தொடர்பாக தகவல்கள் தரப்படுகிறது.
காலையில் கொஞ்சம் உடற்பயிற்சி உடலை வருத்தாவண்ணம் செய்வது நல்லது.உடலை வருத்தி செய்யும் உடற்பயிற்சிகள் ஆண் அழகன் போட்டிக்கு செல்லத்தான் உபயோகமாக இருக்கும்.உடல் நலத்துக்கு உடல் நோகா உடற்பயிற்சியே போதும்.
கைகளை, கால்களை மேலும் கீழும் அசைத்தும் -சுழற்றியும் செய்வது ,உடலை நேராக வைத்துக்கொண்டு மேற்பகுதி இடுப்புவரை பின் பக்கமாக
வல ம்,இடமாக வளைத்துகொள்வது ,கழுத்தை மெதுவாக பல திசைகளிலும்-மேலும் கீழுமாக திருப்பி அசைப்பது போன்றவையே போதுமானது.கழுத்தை திருப்புவது மெதுவாக இருக்க வெண்டும்.நீங்கள் அதிகமாகவோ,வேகமாகவோ திருப்பிக்கொண்டாள் சுளுக்கு நிச்சயம்.பின் ஒரே பக்கம்தான் தலை இருக்கும்.

இது கொஞ்சம் அதிகமாக உடற்பயிற்சி செய்யும் மக்களுக்கு. 
உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே, கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிடக் 
கூடாது .சாப்பிடக்கூடிய உணவுகள் என்றால் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், தண்ணீர் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளாக இருப்பது நல்லது.

ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலில் உள்ள குளுக் கோஸானது எரிபொருளாக மாறுகிறது.  இந்த நேரம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது எதிர் விளைவுகளை தரலாம்.
அதிக  தூரம் ஓடிய பின்பு, சீஸ் உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.  அதில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது.
அதேபோல் அதிகமாக  உடற்பயிற்சி செய்த பின்னர், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகள் சாப்பிடக்கூடாது.பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் கொழுப்புகள் , உப்பு அதிகமாகசேர்ந்திருக்கும் . அவை செரிமான மண்டலத்தின் இயக்கத்தை குறைத்துவிடும்.

 நவதானிய உணவுகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பாக்கெட்டுகளில் விற்கப்படும் நவதானிய உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
பிரட் எனப்படும் மைதாவால் ஆன ரொட்டியை  அறவே தவிர்க்க வேண்டும். 
 உடற்பயிற்சிக்குப் பின், இந்த பிரட் சாப்பிட்டால், அவை உடலில்  மிக எளிதாக  சர்க்கரையாக மாறிவிடும்.
பழங்கள் ,பழச்சாறு போன்றவற்றையும்  உடனே சாப்பிடவே ண்டாம்.  அதில் உள்ள சர்க்கரை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். 

ஏதாவது குடிக்க வேண்டுமென்று தோன்றினால், தண்ணீர் அல்லது  மூலிகை டீ அல்லது இளநீர்  குடியுங்கள்.கிரீன் டீ குடிக்கலாம்.
 முட்டைஉடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிட எற்ற உணவு.அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கோலைன் இதயத்திற்கு மிகவும் நல்லது. முட்டையை அப்படியே குடிப்பது அல்லது  வேக வைத்து சாப்பிடுவது  நல்லது.
என்ன இதுவரை நாம் உடற்பயிற்சிக்குப்பின் உடலை தேற்ற சாப்பிட்டதை எல்லாம் தவிர்க்க சொல்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?
உங்கள் உடலுக்கு சக்தி எற்றும்  வகைதான் இது.
கொண்டக்கடலையை ஊற வைத்து அதை நன்கு மென்று தின்று விட்டு உடற்பயிற்சியை செய்யுங்கள்.அனைத்து சக்தியும் உடலில் ஏறும்.
இதை முன்பும் செய்தார்கள்.இப்போதும் செய்துவருகிறார்கள்.நீங்களும் செய்யுங்கள்.
ஆறு கட்டு .அதுதான் வயிற்றில் ஆறு மடிப்பு சிக்ஸ் பேக்ஸ் .கண்டிப்பாக செய்யாதீர்கள்.அதை பார்த்து பெண்கள் மயங்குவார்கள்.மற்றவர்கள் அசருவார்கள் என்று நினைக்கவும் வே ண்டாம்.தெருவிலோ /பொது இடத்திலோ சட்டை அணியாமல் நீங்கள் செல்லப் போவது இல்லை.பின்  உங்கள் ஆறு மதிப்பை பார்த்து யார் அசரப் போகிறார்கள்?அதற்காக இதை சொல்லவில்லை.
சிக்ஸ் பேக்ஸ் வைத்துக்கொண்டவர்கள் கதை எல்லாம் கந்தலாகி பொய் உள்ளது.
சரியாக சாப்பிடாமல்.உடலில் உள்ள கொழுப்பு முழுக்க கரைந்து உடல் தனது பணியை செய்யக்கூட கொழுப்பு சக்தி இல்லாமல் தளர்ந்து போய் விடும் ஆபத்து அதில் உள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லாமல் போய் சங்கடப்பட்டு மருத்துவம் பார்க்க வே ண்டிய கட்டாயம் அதை வைத்து அழகு காட்டியவர்களுக்கு வந்துள்ளது.
எனவே உடற்பயிற்சி என்பது உடலை சுறு,சுறுப்பாக் வைத்திருக்க மட்டுமே என்பதை கவனத்தில் கொண்டு அதை செய்யுங்கள்.உருண்டு-திரண்ட தசை அழகு சிலருக்கு இயற்கையிலேயே அமையலாம்.
அது அவ்ர்கள் உடலமிப்பு.அதைப்போல் வர ஆசைப் பட்டு கடினமான பயற்சிகள செய்ய வேண்டாம்.அது ஆண் அழகன் போட்டிக்கு செல்பவர்கள் மட்டும் செய்யட்டும்.
_________________________________________________________________________
 சென்ற [2012]ஆண்டில் ஜனவரி மாத நிகழ்வுகள்:-
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் 
ஜன., 2: தமிழகத்தில்குடும்ப அட்டை களின் செல்லுபடியாகும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப் பட்டது.
ஜன., 4: தூத்துக்குடி இ.எஸ்.ஐ., மருத்துவமனை பெண் டாக்டர் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம். 
ஜன., 5: தமிழகத்தில் திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஜன., 8: ஜெயலலிதா பற்றி மாட்டுக்கறி மாமி என்னும் செய்தி வெளியிட்ட "நக்கீரன்' அலுவலகம் மீது அ.தி.மு.க.வினர் கொலை வெறி  தாக்குதல். நீதிமன்ற ஆணைபடி  "நக்கீரன்' மன்னிப்பு கேட்டது.
ஜன., 9: முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுக்கிற்கு "மணி மண்டபம்' அமைக்க முடிவு.
ஜன., 10:தானே புயலுக்கு மத்திய அரசு 500 கோடிகள் உதவி.
ஜன., 20: டி.என்.பி.எஸ்.சி., யின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற அதிகாரி நட்ராஜ், ஜன., 20ம் தேதி பதவியேற்றார். இதற்குப்பின் ஆன்லைன் மூலம் பதிவு செய்தல், நிரந்தர பதிவு முறை, விரைவில் தேர்வு முடிவு, கீ-ஆன்சர் வெளியீடு, தேர்வானவர்களுக்கு கவுன்சிலிங் முறையில் பணியிடம் என, டி.என். பி.எஸ்.சி.யின், தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
ஜன., 21: சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள், கணினிகள் எரிந்து நாசமாகின.
ஜன., 26: சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்வு.
 தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டு, என்.ஆர்.சிவபதி, முக்கூர் என். சுப்பிரமணியன் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியா

ஜன., 3: 99வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு புவனேஷ்வரில் நடைபெற்றது.
* ஆந்திர அரசு, அரசு வேலைகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயதின் அளவை (34 - 36) அதிகரித்தது.
ஜன., 6: டிரினிடாட் அண்டு டொபாகோ பிரதமர் கம்லா பெர்சாத், இந்தியா வந்தார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜன., 11: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 2 நாள் பயணமாக திரிபுரா தலைநகர் அகர்தலாவுக்கு வருகை தந்தார். 
 ன., 26: நாட்டின் 63வது குடியரசு தினம்.
ஜன., 27: பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களை பயன்படுத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு , மத்திய அரசு தடை.
ஜன., 29: வங்கதேசத்தின் குல்னா நகரில், இந்தியா - வங்கதேசம் இணைந்து அனல் மின் நிலையம் நிறுவ ஒப்பந்தம் கையெழுத்து.
ஜன., 29: பிறந்த தேதி சர்ச்சை இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த வி.கே.சிங்கின் பிறந்த ஆண்டு 1951 மே 10 என கல்விச்சான்றிதழ்களில் உள்ளது. ஆனால் யு.பி.எஸ்.சி., தேர்வு, பணியில் சேர்ந்தது என அனைத்து ஆவணங்களிலும் 1950 மே 10 என இருந்தது. இதனால் இவர் ஓய்வு பெறுவதில் குழப்பம் ஏற்பட்டது. சட்ட அமைச்சகம், அட்டர்னி ஜெனரல் அறிக்கையை ஏற்று ராணுவ அமைச்சகம் ஜன., 29ல், அவரது பிறந்த ஆண்டை 1950 என பதிவு செய்ய உத்தரவிட்டது.
உலகம்

ஜன., 1: நைஜீரியாவில் நடந்த கலவரத்தில் 50 பேர் பலியாகினர்.
* பாகிஸ்தான் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் ஐ.நா., சபையில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்ந்தது.
ஜன., 6: அமெரிக்காவின் அரசு இணையதளத்தில் இந்தியாவின் தவறான வரை படம் வெளியிடப்பட்டதால் சர்ச்சை. இந்திய அரசின் எதிர்ப்புக்கு பின், அதனை அமெரிக்க சரி செய்தது.
 
* உலகின் உயரமான பாலம் (1,322 அடி) மெக்சிகோ நாட்டில் திறந்து வைக்கப்பட்டது.
ஜன., 17: அமெரிக்காவின்  சார்லொட்டஸ்வில்லே என்ற நகரின் மேயராக, இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர சிங் ஹூஜா தேர்வு.
ஜன., 18: அமெரிக்க காங்கிரசில் தாக்கலாக இருந்த 2 மசோதாக்களை எதிர்த்து, இணையக் கலைக் களஞ்சியமான "விக்கிபீடியா' ஒருநாள் வேலை நிறுத்தம்.
 
 
 
 
 
 
 

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?