எனது கனவு ...., !

   காலம் யாருக்காகவும் காத்திருப்பதாக 

    தெரியவில்லை. 

    காலன் மட்டுமே 

    காத்திருத்தலில் இருக்கிறான்.

   கனவுகள்  அனைவருக்கும் இருக்கிறது.

கனவுகள் இல்லாதவன் -

உயிரும் இல்லாதவனாகத்தான்

 இருக்கிறான்.

கனவுகள்தான் மனிதனை இன்னமும்

 வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

கனவுகள் விரியும் 

மனதில்லாதவன் 

வாழ்வும் நின்று விடுகிறது.

கனவுகள் 

இல்லாதவனுடன் 

வாழ வாழ்வுக்கு 

 விருப்பம் கிடையாது.

சிறுவனின் கனவு -மீசையுடன் 

பெரியவனாக  மாறுவது.

இளைஞனின்  கனவு 

காதலில் இன்புறுவதாக 

அதிகம்.

வாழ்வில் முன்னேறுவது 

அங்கு கொஞ்சம் 

இருக்கும் .

வயதானவனின் கனவு 

இன்னமும் இளமை

தன்னுள் ஊஞ்சலாடுவதாக .

கனவுகள் மாறலாம்.

கனவு காண்பது மாறாதது.

பிச்சைக்காரனுக்கு கூட 

தங்க பிச்சைப்பாத்திரக் கனவுகள் 

இருக்கலாம்.

நரியின் கனவில் -அது 

கோழிப்பண்ணைக்கு 

அதிபராகும்  வாய்ப்புகள் 

உண்டு.

 சின்ன ,சின்ன கனவுகள்தான் 

பெரிய,பெரிய நனவுகளகியுள்ளது.

கணினி  மட்டுமா?

வாணூர்திகளும் கனவுகளில்தானே 

சாத்தியமாயிற்று.

நீங்களும் கனவுகளைக்  காணுங்கள்.

அவை 

பகல் கனவாக இல்லாமல் 

பலிக்கும் 

கனவுகளாகட்டும்.

அதுதான் இப்போது 

என்னுள்  இருக்கும்  கனவு! 

 
 

suran


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?