இதை செய்வாரா கமல்ஹாசன்?



 விஸ்வரூபம் படம் வெளிவரக்கூடாது என்பதில் இசுலாமிய  சில தலைவர் களை விட தமிழக் அரசுதான் தீவிரவாதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானிலும் ,பாகிஸ்தானிலும் கூட படம் வெளியாவதில் இத்தனை கடுமை இராது.
ஆனால் தமிழக  அரசு  தடை வெறி விஸ்வரூபமாக இருக்கிறது.
நேற்று இரவு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் புதன்கிழமை மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தீர்ப்பை நிறுத்திவைக்குமாறும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
ஆனால், நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான வழக்குரைஞர்கள், நீதிபதி எலிபி தர்மாராவின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குச் சென்று முறையிட்டனர்.
அவர்களிடம் பேசிய நீதிபதி இப்போது முதல் அமர்வுக்கான நீதிபதி இல்லாததால், புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முதல் அமர்வில் இது தொடர்பாக முறையிடுமாறும், இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிப்பதாகவும் அவர்களிடம் கூறினார்.
ஏன் தமிழ் நாட்டு அரசுக்கு இந்த தடை வெறி.
இந்த வெறிக்கு காரணம் இசுலாமியர் எதிர்ப்பு மனு மட்டுமே காரணம் அல்ல.அது மட்டும் என்றால் கர்நாடகா.கேரளா போன்று பாதுகாப்புடன் படத்தை வெளியிடச்செய்திருக்கலாமெ.
அதையும் தாண்டி புனிதமான காரணம் எதோ ஆட்சியாளர்கள் மனதில் ஒடிக்கொண்டிரூக்கிறது.அதை முந்தைய  பதிவுகளில் தந்துள்ளோம். மீண்டும் சின்னதாக :
டிடிஎச் வெளியீடு ஏர்டெல் முதல் சன்  வரை சென்றது.சூரியன் என்றாலே அரசுக்கு ஒவ்வாமை.
'வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக ப.சி ,க்கு தகுதியிருக்கிறது என்றது.ஏ ன் சேலை கட்டியவருக்கு தகுதி இல்லையா என்ற கிண்டல்."இவை போன்ற வைதான் அம்மாவிற்க்கு 
தடை என்ற கதாயுதத்தை கையில் எடுக்க வைத்து விட்டது.
இத்தனை அவசரமாக தடை கிடைக்கும் என்று மனு  இசுலாமிய தலைவர்கள் கூட  எதிர்பார்க்க வில்லையாம்.
இப்போது மீண்டும் உச்ச நீதிமன்றம் வரைப் போக அரசு வழக்குரைஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.
இத்தனை விஸ்வரூப அரசினை சாந்தப்படுத்த வழியும் இல்லாமல் இல்லை.
அரசு அனுமதியுடன்-பாதுகாப்புடன் விஸ்வரூபம் வெளியாகிவிடும் .அப்போது எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களுக்கு சிறை கூட கிடைக்க வாய்ப்புள்ளது.
அதற்கு  கமல்ஹாசன் அம்மாவை பார்த்து அமைச்சர்கள் போல்குனிந்து போக்கே கொடுத்து சரண்டர் ஆனால் போதும்.
இதை செய்வாரா கமல்ஹாசன்?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?