கொடூரன் வரவு

 என்னதான் தமிழர்கள்  தங்களை இந்தியர்களாக எண்ணிக்கொண்டிருந்தாலும்,செயல் பட்டா லும் வடக்குத் தலைவர்களும்-,இந்திய ஆட்சியாளர்களும் தமிழர்களை இந்தியாவின் இரண்டாம்தர குடி மக்களாக மட்டுமே எண்ணுகிறார்கள்.
தமிழத்தில் இருந்து ஆட்சி அமைக்கத் தேவையான மக்களவை உறுப்பினர்கள் மட்டும்தான் அவர்களுக்கு தேவை.
மற்றபடி ராணுவம்,தொழிற்துறை,ரெயில் வழி போக்குவரத்து ,நிதி உதவி வரை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் வழங்கப்படூகிறது.
இதெல்லாம் கூற காரணமே வெறு.
இலங்கையில் தமிழர்களையும்,தமிழர்களின் அடையாளங்களையும் அழித்து வரும் கொடூரன் ராஜபக்ஷேவை இந்திய அரசு சிகப்பு கம்பளம் விரித்து வரவெற்பதைத்தான் சொல்லுகிறே ன் .
கொஞ்சம் கூட அவமானம்-கூச்சம் இல்லாமல் அவர் இந்தியாவுக்கும்  தென் மாநிலங்களுக்கும் வந்தாலும் அவரை ஓடிச்சென்று வரவேற்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் குற்ற உணர்வே இல்லாமல் போய் விட்டது.ராஜபக்சே இன்று வரை தமிழர் கொலைகளுக்கு ஐ.நா.வால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர் குற்றவாளிதான்.
ஈழத்தமிழர் அழித்தொழிப்பில் சிங்க்களவெறியர்களுடன் கூட்டணி அமைத்து செயல்பட்ட மன்மோகன் சிங்-சோனியா ஆட்சியில்  ராஜபக்சேக்கு தடைபோடுவார்கள்  என்பதெல்லாம் எதிர்பார்ப்பது சரியல்ல.
ஆனால் மனிதாபி மானம் பேசும் நிதிஷ்குமார்  ஒரு குற்றவாளியை விருந்து வைத்து வரவேற்பது சரியல்ல.
இங்கு உள்ள தமிழர்கள் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் பக்சே வரவு எதிர்ப்பை இணைந்து செய்யாமல் பத்து-பத்து பேர் கூ ட்டமாக  சென்று செய்தால் எப்படி நம்மவர்கள் உணர்வு மற்ற வர்களுக்கு தெரியும்.தமிழக நண்டு கதை  உண்மைதான்.
இப்போது திருப்பதி .அடுத்ததாக பக்சேயின் வரவு திருச்செந்துராகத்தான் இருக்கும்.அப்போதும் நம் தலைவர்கள் தனித் தனியே நின்று புலம்பிக்கொண்டுதான் இருப்பார்கள்.
இலங்கையில் தமிழர்கள்-ஒழிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் பக்சே இப்போது கிட்ட தட்ட 70 தமிழ் கிராமங்களின் பெயர்களை சிங்களமாக மாற்றி ஆணை பிறப்பித்துள்ளார்.பழைய தமிழ்ப்  பெயர்கள் அழிக்கப்பட்டு சிங்களப்பெயர்கள் பலகைகள் வைக்கப்பட்டு வருகின் றன.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய ஆபத்து.
பூமிக்கு அதில் வாழும் மக்களிடமிருந்து மட்டும் ஆபத்தில்லை.பிரபஞ்ச்சத்திலும் அதற்கு பல ஆபத்துகள் அவவப்போது வருகிறது.இப்போதைய அபாய அறிவிப்பு:
"விரைவில் சூரிய புயல் பூமியை தாக்கும்."
 இதனால் தொலைதொடர்பு சாதனங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 
சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. 
இதனால் பூமிக்கு ஆபத்து என்று பல முறை கூறப்பட்டது. எனினும், இதுவரை எந்த ஆபத்தும் இல்லாமல் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனில் இருந்து நெருப்பு போன்ற சிறுசிறு துண்டுகள் சிதறி பூமியை அடைவதற்குள் அவை கரைந்து விடுகின்றன. 
ஆனால், இப்போது மீண்டும் சூரிய புயல் பூமியை விரைவில் தாக்கும் அபாயம் உள்ளது. அது எப்போது நடக்கும் என்று அரை மணி நேரத்துக்கு முன்புதான் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய புயல் பூமியை தாக்கினால், கம்ப்யூட்டர் நெட்வொர்க், போன் உள்பட எல்லா தொலைதொடர்பு சாதனங்களும் ஸ்தம்பிக்கும்.

பூமி முழுவதும் மின்தடை ஏற்படும். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சூரியனில் இருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வெப்ப புயல் ஒரு மணி நேரத்துக்கு 16 லட்சத்து 9 ஆயிரத்து 344 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பாயலாம். எனினும் புயல் ஏற்படுவதை 30 நிமிடங்களுக்கு முன்புதான் துல்லியமாக கணிக்க முடியும்’ என்றனர். 

இதுபோல் 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சூரிய புயல் ஏற்படும் என்று லண்டனில் உள்ள இன்ஜினியரிங் ராயல் அகடமி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1989ம் ஆண்டு இதுபோல் சூரிய புயல் சிறிய அளவில் கனடாவை தாக்கியது. அப்போது மின் தடை ஏற்பட்டது. எலக்ட்ரானிக் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சூரிய புயல் தாக்குதல் குறித்த பயம் வேண்டாம். 
இப்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சூரிய புயல் தாக்குதலின் தீவிரத்தை குறைக்க எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இருபதாண்டு விவசாயத்தில் வளர்க்கப்பட்ட விவிலிய வாசகம்.

இது போன்று வளர்க்கப்பட்ட மரங்கள் தான் மேலிருந்து பார்க்கையில் அவ்வாறு தெரிகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?