தேச துரோகிக்கு வக்காலத்து

"எனது அருமை நண்பர் சஞ்சய்த்துக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.
 அவருக்கு இப்போது இருக்கும் ஒரே வழி மன்னிப்புக்கான மேல்முறையீடு. அது அவருக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவருக்கு நல்ல பரிகாரம் கிடைக்க வேண்டும். அவரது எஞ்சிய வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்."
-இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த்  தனது அறிக்கையில் கூறி வாய்ஸ் கொடுத்துள்ளார்.
1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ப இந்தி நடிகர் சஞசய்தத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக ஈடுபடா விட்டாலும் அனுமதியின்றி உயர்ரக துப்பாக்கிகள்,ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை  வைத்திருந்ததும், வெடிவைத்த குற்றவாளிகளுக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து தப்பிக்க உதவியதும் அதனை சட்டவிரோதமாக அழித்ததும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
ஆயுத தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் மட்டும் தண்டனை விதிக்கப்பட்டது.
மேல் முறையீட்டில் அவரது 6 ஆண்டு தண்டனையை 5 ஆண்டாக குறைத்து உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. சஞ்சய்தத் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
தற்போது அவர் இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். இன்னும் ஒரு மாதத்துக்குள் சஞ்சய்தத் சரண் அடைந்து சிறைக்கு செல்ல வேண்டும்.
 அதற்குதான் தமிழ் நாட்டில் இருந்து நமது வாய்ஸ் ஸ்டார் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டாரு அறிக்கை விட்டுள்ளார்.
இதுவரை சஞ்சய்தத் நடிக்கும் மும்பை நடிகர்கள் யாரும் இப்படி வாய்ஸ் கொடுக்கவில்லை .

 அனால் நமது மனிதாபிமானி-மனிதப் புனிதர் ரஜினிதான் அறிவித்திருக்கிறார்.பரிகாரம் கிடைக்கும்,கிடைக்க வெண்டும் என்று கூறியிருக்கிறார்.இல்லாவிட்டால் தரையில் கால் படாமல் பறந்து பறந்து அடிப்பார் போல் தெரிகிறது.
இந்த மனிதாபிமானி தனக்கு கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டிக்கொடுக்கும் தமிழர்கள் ஈழத்தமிழர் படுகொலையில் தெருவில் இறங்கி போராடி,தீக்குளித்துக்கொண்டிருக்கையில் தனது ஊத்தை வாயை திறந்து வாய்ஸ் ஏதும் கொடுக்கவில்லை.
ஒருதுளி வியர்வைக்கும் தங்க காசை கொட்டி கொடுத்த தமிழர்கள் இளித்த வாயர்கள்.வெறும் விசிலடித்தான் குஞ்சுகள் என்பதை ரொம்பத்தெளிவாக அறிந்து வைத்துள்ளார்.தான் சிவாஜி ராவ் கெய்க்வாட் தான் என்பதையும் தான் மும்பை வழித்தோன்றல் என்பதையும் தமிழர்கள் மறந்தாலும் ரஜினி காந்த் என்ற அவர் மறக்கவில்லை.
கொஞ்சம் விட்டால் ராஜபக்சேவையும் ஒரு வாய்ப்பு கொடுத்து மறப்போம்-மன்னிப்போம் என்பார்.
காவிரி,முல்லை பெரியாறு,என்று தமிழர்கள் சந்திக்கும் அனைத்து பிரசநியையும் பற்றி வாயைத்திறக் காதவர் .
இன்றைய ஈழத்தமிழர் ஆதரவு தீர்மானத்தை ஐ.நா.வில் வீரியத்துடன் கொண்டுவர போராடும் தமிழக பிரச்னையை அறியாதவராக இருப்பவர்.நாளை நடிகர் சங்கம் நடத்தும் ஒப்புக்கான போராட்டத்தில் வேறு வழியே இல்லாமல் கலந்து கொள்வார்.
முன்பு காவிரி பிரச்னைக்காக  நடிகர் சங்கப்போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனியே படம் போட்டு ஒரு கோடி பணம் தருவதாக சீன்  காட்டியவர் இவர் என்பதை இன்றைய தமிழகம் மறந்து விட்டிருக்கலாம் .
இப்படி பட்ட ரஜினிகாந்த் ஒரு தியாகிக்கு அல்லது போராளிக்கு இப்படி அறிவித்திருந்தால் பரவாயில்லை.
ஒரு குண்டுவைத்த தீவிரவாதிகளுக்கு துணை போனவன் தேசத்துரோகிதானே?அந்த  தேச துரோகிக்கு வக்காலத்து வாங்குபவர்களும் தேச விரோத சக்திகள்தானே .அந்த வரிசையில் தான் இப்போது ரஜினியும் சேர்ந்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பில் ஒன்றுமே தெரியாத அப்பாவிமக்கள் தான் எதற்காக இப்படி வெடித்து சிதறி சாகின்றோம் என்பதை அறியாமல் உயிரை விட்டார்களே .அவர்களை இழந்து அவர்கள் குடும்பம்  வாழ்கையை இழந்து அல்லது சோகத்தால் திசை மாறி இருக்கிறதே இவர்களுக்கு ரஜினிகாந்த் என்ன  செய்யப்போகிறார்?
சஞ்சய்தத்துக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இவர்களின் இழப்பை ஈடு செய்யாது.ஆனாலும்
அரசு செய்யும் பரிகாரங்களில் ஒன்றுதானே இது போ ன்ற தண்டனைகள்.இது கூட இல்லாவிட்டால் தீவிரவாதிகள் ஆட்டம் அதிகமாகி விடுமே?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பழைய கதை.
----------------------------
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மறுப்பதால், காவிரி வறண்டு கிடக்கிறது. இதுபற்றிய மத்திய அரசின் உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் கர்நாடக அரசு ஏற்கவில்லை. கர்நாடக அரசு, நீண்ட காலமாகவே இந்தப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கர்நாடகத்துக்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி, தமிழக நடிகர்- நடிகைகள் 2002-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணி நெய்வேலியில் நடந்தது.

ஆனால்  இந்தப் பேரணியில் கர்நாடகத்தை சேர்ந்தரஜினிகாந்த் கலந்து கொள்ளமறுத்து விட்டார்.
தமிழகத்தின் பல முனைகளிலும் இதுபற்றி ரஜினிக்கு எதிராக கருத்து எழந்ததன் காரணமாக பேரணி தேவை இல்லை .மின்சாரத்தை தடுப்பது தவறு .அதற்குப்பதிலாக தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தி தான்  சென்னையில் உண்ணாவிரதம்இருப்பதாக அறிவித்து . இருந்தார். அவரின்  உண்ணாவிரதப் போராட்டம், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே 2002 அக்டோபர் 13-ந்தேதி நடைபெற்றது. அதிலும் மானங்கெட்ட தமிழ் நடிகர்கள் சிலர் கலந்து சிறப்பித்தனர்.அதில் ஒரு கோடி ரூபாய் தண்ணிர் பிரச்னைகாகத் தருவதாக அறிவித்தார்.இன்னமும் தந்து கொண்டிருக்கிறார்.அதற்கு பின்னர் அறிவித்த சாய்பாபா சொன்னபடி தனது பணத்தில் தண்ணிர் கொண்டுவரும் வழியை ஏற்படுத்தி தந்தார்.
 
-




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?