குறைந்து வரும் தங்க விலை.

உலக அளவி ல் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே  வருகிறது. 
கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1900 டாலர்கள் என்ற அளவில் இருந்தது . 
தற்போது அது 1600 டாலர்களுக்கும் கீழே இறங்கியுள்ளது..
கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தங்கத்தின் விலை  மேல் நோக்கியே  சென்று கொண்டிருந்தது.2013 இல் தான் கொஞ்சம் விலை  குறைய ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு  துவக்கத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை சுமார் 6 சதம் உலக சந்தையில் குறைந்து விட்டது.

உலகின் அதிக அளவு தங்கத்தை உபயோகிக்கும்  நாடான  இந்தியாவில் இந்த அவிலை குறைவு அவ்வளவாக பயன் தர வில்லை.
காரணம் இந்தியாவில்  உள்ளூர் வரிகள்,சேவை வரிகள் என்று வரிச்சுமை  அதிகமாக உள்ளதுதான். மேலும்  ரூபாயின் மதிப்பும்  தொடர்ந்து குறைந்து  வருவதாலும்  தங்கத்தின் விலை வீழ்ச்சி மூலம் தங்கம் வாங்கி வைக்கும் அளவு மக்களிடையே பணப்புழக்கம் இ ல்லை. இந்தியாவில்  ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே உள்ளது.
தங்கத்தின் விலை இன்னமும்  குறைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
ஆனால் உலக அரசியலில் போர் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் தங்கத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.
க டந்த பத்து மாதங்களில் 323 டன் தங்கத்தை சீனா உற்பத்தி செய்துள்ளது. சீனாதொடர்ந்து, ஆறு ஆண்டுகளாக தங்கம் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகித்து வருகிறது.2012ல்   முதல் பத்து மாதங்களில் மட்டும்  323 டன் தங்கம் உற்பத்தி செய்துள்ளது.
இது சீனா  கடந்த ஆண்டில் உற்பத்தி செய்ததை விட  11 சதவீதம் அதிகம்.ஆனால் உலகில் அதிகஅளவில்  தங்கத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தான்தொடர்ந்து  முதலிடம் வகிக்கிறது. சீனா,இரண்டாவது இடத்தில் தான் உள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணைக்கு அடுத்தபடியாக தங்க இறக்குமதிக்கே அதிக அளவு அன்னியச் செலாவணி செலவிடப்படுகிறது. இந்தியாவில் திருமணத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.மத வேண்டுதல்களிலும் தங்க பொருட்கள் பங்கு வகிக்கிறது.ஆனால் பெருமளவில் தங்கம் ஒரு சேமிப்பு பொருளாகவும் உள்ளது.ஆனால்  பூட்டி வைக்கப்படும் தங்கத்தால் எவ்வித பொருளாதாரப் பயன்களும் ஏற்படப் போவதில்லை.  
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தேநீர் .
======
ஒரு கோப்பை  தேநீர் தயாரிக்க போகிறீர்களா?
 
 அரை கோப்பை  நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கோப்பை  பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்துங்கள்.
இது சுவையான தேநீர் தயாரிக்கும் முறை.
தேநீரில்  சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை  காண் போம்.

மசாலா தேநீர் : ஏலக்காய் - 6, கிராம்பு - 6, சோம்பு - 1 தேக்கரண்டி, தனியா - அரை தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும், தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து, வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும்; அருமையான தேநீர்.

ரோஸ் தேநீர் : தேநீர் கொதிக்கும் போது, புத்தம் புதிய ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ தேநீர் : குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ டீயை மிக விரும்புவர். இந்த டீயை தயாரிக்கும் போது, தேவையான கோகோ பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தவும்.
இஞ்சி தேநீர் : அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி தே நீர் . இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, டீ கொதிக்கும் போது போட்டால், இஞ்சி டீ ரெடி!

ஏலக்காய்தேநீர் :ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது, ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம்.

எலுமிச்சை தேநீர் : நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும்.
பு தினா தேநீர் : சில புதினா இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும். பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.
இது போல் செம்பருத்தி பூ  போன்ற உடல் நலம் தரும் மூலிகைகளை இணைத்து பல வகைகளில் நீங்கள் தேநீர் தயாரித்து பருகலாம்.ஆனால் குடிக்கும் தைரியம் அல்லது திறமை உங்களுக்கு வேண்டும்.ஆனால் அவை உடலுக்கு நன்மைதான் தரும்.
இப்போது கிரீன் டீ என்று பல கடைகளில் கிடைக்கிறது.அதை வாங்கி பருகலாம்.அது பல வகைகளில் உடலுக்கு நன்மை தரும் சக்தியுள்ளது.ஆனால் அதில் இப்போது போலிகள் வழக்கம் போல் வர ஆரம்பித்துள்ளது.அதை கவனித்து வாங்குங்கள்.
 
 
நன்றி:தினமலர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?