தேர்வா[ணையம]குவோமோ?



குரூப்-1 தேர்வு முதல், கடைநிலை தேர்வான, குரூப்-4 வரையிலான, அனைத்து தேர்வுகளுக்கும், புதிய பாடத் திட்டங்களைதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  அறிமுகப்படுத்தி உள்ளது.
 இனிமுன்பை விட  தேர்வாணைய தேர்வுகள் கடினமாக இருக்கும் .
போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள், வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றி அமைக்கப்படும்.  தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்கள், மாற்றி, புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
 குறிப்பாக, குரூப்-1, குரூப்-2 போன்ற, உயர் அலுவலர் பணிகளில் சேர்பவர்களுக்கு, பொது அறிவு ,திறமை போன்ற  தகுதிகள் முக்கியமாக இருக்க வேண்டும். காரணம் முந்தைய பாடத்திட்டங்கலை விட இப்போது கொஞ்சம் கடினாமான வைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சில  மாநில தேர்வாணையங்களில்  குரூப்-1 தேர்வுக்கு, முதல்நிலைத் தேர்வில், இரு தேர்வுகளையும், முக்கிய தேர்வில், 9 தேர்வுகளையும் நடத்துகின் றன .ஆனால், தமிழகத்தில், முதல்நிலைத் தேர்வில், ஒரே ஒரு தேர்வு மட்டுமே இடம்பெற்றிருந்தது. முக்கியத் தேர்வில்  இரண்டு  பொது அறிவு தாள்கள் இடம் பெற்றிருந்தன. தற்போது, கூடுதலாக, மேலும் ஒரு பொது அறிவுத்தாள் சேர்க்கப்பட்டு உள்ளது.
நேர்முகத் தேர்வுக்கான மதிப்பெண், 80ல் இருந்து, 120ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
உயர் அலுவலர் நிலையிலான தேர்வு முதல், குரூப்-4 நிலையிலான தேர்வுகள் வரை, அனைத்து பாடத் திட்டங்களிலும், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் ஆகிய பாடங்கள், பிரதானமாக இடம்பெற்றுள்ளன. பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள், குறைக்கப்பட்டுள்ளன.
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்கும் வி.ஏ.ஓ., தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு, 200 கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்குப் பின், வேறு தேர்வுகள் கிடையாது. இன சுழற்சி வாரியாக, மதிப்பெண் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில், 150 கேள்விகள், பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் கேட்கப்படும்.மீதம் உள்ள 50 கேள்விகள், கிராம நிர்வாகத்திறன் குறித்து இடம்பெற்றிருக்கும். 150 கேள்விகளுக்கு, 225 மதிப்பெண்களும், 50 கேள்விகளுக்கு, 75 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
 வி.ஏ.ஓ., அல்லாத இதர குரூப்-4 தேர்வுகளில், வழக்கமாக, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில், 100 கேள்விகளும், பொது அறிவில் இருந்து, 100 கேள்விகளும் கேட்கப்படும்.தற்போது, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 50 என, குறைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 150 கேள்விகளும், சிந்தித்து விடை அளித்தல் மற்றும் தேர்வரின் தனிப்பட்ட திறன்கள், புத்தி கூர்மையைஆராயும் வகையில், பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பத்து வகை .குரூப்-1, 2, 3, குரூப்-4, குரூப்-6, குரூப்-7, குரூப்-8, வி.ஏ.ஓ., - எஸ்.எஸ்.எல்.சி., - டிப்ளமோ தகுதி நிலையில், அனைத்து தொழில்நுட்ப தேர்வுகள், இளங்கலை மற்றும் முதுகலை தகுதி நிலையில், அனைத்து தொழில்நுட்ப தேர்வுகள் என, 10 வகை தேர்வுகளுக்கும், தனித்தனியே, விரிவான, முழுமையான பாடத்திட்டங்கள், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும், உடனடியாக செயலுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
   அனைத்து தேர்வுகளும்இனி  புதிய பாடத்திட்டத்தின்படியே நடக்கும்.
 இதன்மூலம், இனிமேல், தேர்வாணைய தேர்வு முன்பைவிட கடினமாகவும்,தேர்வாளர் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கும்.மனப்பாடம் செய்து தேர்வது கடினம்.பொது அறிவும், படிப்பறிவும் அதிகம் தேவை.

போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் அனைத்தும், இப்போதே செய லுக்கு வந்துவிட்டதாக, தேர்வாணைய ம் அறி வித்துள்ளது இப்போதைய  தேர்வர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
 புதிய பாடத்திட்டத்தின்படி, முதலில் நடக்கும் தேர்வுகளுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியை, தேர்வாணையம் வழங்கியிருக்க வேண்டும்.அப்படியில்லாமல், உடனே, செய லுக்கு வருகிறது என்றால், எப்படி தயாராக முடியும் என, தேர்வர்கள் கோபக்  கேள்வி கேட்கின்றனர்.
 பாடத்திட்டங்களை, பதிவிறக்கம் செய்து, அதற்கேற்ற புத்தகங்களை வாங்கி, படிக்க வேண்டும். இதற்கு, போதிய கால அவகாசத்தை, தேர்வாணையம் வழங்கவில்லை எனஇப்போதைய  தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
குரூப்-1 முதல், குரூப்-4 வரையில், 10 வகையான போட்டித் தேர்வுகள் மற்றும் அதற்கான புதிய பாடத்திட்டங்கள், மொத்த தேர்வுத்தாள்கள், அதற்கான மதிப்பெண்கள் உள்ளிட்ட முழு விவரமும், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in), இரவு, 11:00 மணிக்கு வெளியானது.இந்த விவரங்களை அறிய, நேற்று ஒரே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தை சொடுக்கி வரவழைத்ததால்  பிற்பகலில், இணையதளம் முடங்கியது.
நீண்ட நேரம் வரை, இணையதளம் மு டங்கிவிட்டது.இயங்கவில்லை. முன்பக்கம் மட்டுமே இயங்கிய து.
 பாடத்திட்ட பக்கங்கள், இயங்கவில்லை.
த. நா.அ .தேர்வானையத்துக்கு இத்தனை அவசரம் ஏன்?
தான் ஒய்வு பெறும் முன்னர் புதிய முறையை துவக்கி வைக்க வேண்டும் என்ற நட்ராஜின்
ஆ [பேரா]சைதான் இதற்கு காரணம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

" இத்தாலி கொலை காரர்கள் இருவரை  வரவைக்க தூதரக உறவை துண்டிக்க வேண்டுமா?
வழக்கமாக் கொலைகாரர்களுக்கு பிணை கொடுப்பவர்கள் தப்பிக்க விட்டாலோ அல்லது ஒப்படைக்க   மறுத்தாலோ பிணையாளர்களை கைது செய்வதுதான் சட்டம்.அதன்படி உச்ச நீதி மன்றத்தில் பிணை கொடுத்து இந்த   வேலையை செய்த இத்தாலி தூதரை கைது செய்து உள்ளே  தள்ள வேண்டியதுதானே?
தன் னாலே  கொலைகாரர்கள் வருவாரர்கள். "
-------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?