இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மர்மம் என்ன?

படம்
மேற்கு வங்கத்தில் சாரதா குழுமத்தின் சீட்டு நிதி நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மீண்டும் ஒருமுறை சலுகைசார் முதலாளிகளுக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் உள்ள கள்ளப்பிணைப்பினை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.  சாரதா குழுமத்தின் மோசடியான நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி அவர்களின் சேமிப்புகளை விழுங்கியிருப்பதானது, இதுநாள்வரை ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியின் சித்திரத்தைத் தூள்தூளாய் உடைத்தெறிந்துவிட்டது. சாரதா குழுமம் ஆயிரக்கணக்கான (இலட்சக்கணக்கான என்று கூட சொல்லலாம்) வர்களிடமிருந்து பல்வேறு பெயர்களில் டெபாசிட்டுகளைப் பெற்று, அப்பணத்தை முழுமையாக மோசம் செய்துவிட்டது. சாரதா குழும நிறுவனர் சுதீப்தா சென் உடன் மம்தா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் குணால்கோஷ். அவர்களுடைய மோசடி நடவடிக்கைகள் அனைத்தும் நிலைகுலைந்து, அதில் டெபாசிட் செலுத்தியிருந்தவர்கள் தங்கள் பணத்தை முழுமையாக இழந்த நிலையில் நிர்க்கதியாய் நின்று கொண்டிருக்கிறார்கள். சாரதா குழுமம் நடத்தி வந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் ஒளிப

"மே தின வாழ்த்துக்கள்.!"

படம்
எதை ,எதையோ கொண்டாடுகிறோம்.ஆனால் உழைத்து வாழும்நாம்  நமக்கென்று உள்ள தொழிலாளர் தினமாகிய "மே தினத்தை "விருப்புடன் கொண்டாடுவதில்லை.நடிகர் ,நடிககையர்,அரசியல் வாதிகள் பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கடன் வாங்கியாவது கொண்டாடி மகிழ்கிறோம் . 18 ம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் பட்ட பாட்டை பற்றியும் அதலிருந்து மீண்டு இன்றைய நிலையை நாம் அடைய பட்ட பாட்டையும் ,விட்ட உயிர்களையும் பற்றி நாம் உணராததே இதற்கு ,இந்நிலைக்கு காரணம். 18 ம் நூற்றாண்டுவரையில் கடுமையான தொழில் புரட்சி உலக அளவில் ந டந்தது. அதுவரை ஆங்காங்கே குடிசைத்தொழில்களாக நடந்து வந்தவை ஓரிடத்தில் இணைந்து பணக்காரார்கள் முதலீட்டை கொட்ட தொழிற்சாலைகள் உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் முளைத்தன. அதற்கு இயந்திரங்களுடன் ஓயாது உழைக்க மனிதர்கள் தேவை. அதற்காக எழைகள் தேவை.முதலில் அவர்களை  பார்த்த தொழிலில் இருந்தும் விவசாயத்திலிருந்தும். பிரித்து அரசு துணையுடன் தொழிற்சாலைகளில் உழைக்க அமர்த்தப்பட்டனர். அங்கேயே இருக்க ஓரமும்,உணவுக்கு காய்ந்த ரொட்டிகளும் கொடுக்கப்பட்டன.கிட்டத்தட்ட 24 மணி நேரமும் அவர்கள் உழைக்க வே ண்டியி

பலிகடா ஆக்கப்பட்டு விடுவோமோ?

படம்
மிகப்பெரிய அளவிலான ஸ்பெக்ட்ரம் 2ஜி  ஊழல் அதைத் தொடர்ந்து வெளியான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஆகியவைகளால் மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும்   நெருக்கடி அதிகரித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி சி.பி.ஐ.யும், காங்கிரஸ் எம்.பி. பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனித்தனியாக விசாரித்து வருகிறது. கூட்டுக்குழு முன் இப்போது குற்றவாளியாக கூறப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுக்கு சாட்சியம் அளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காதது மிகப்பெரிய முறைகேடு.யாரையோ காப்பாற்ற செய்யும் முயற்சிதான்.  இதனால் தி.மு.க.- காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டுக்குழு சாக்கோவுக்கு எதிராக பேசி வருகிறது.அவரை தலவைர் பதவியில் இருந்து நீக்கவும் கோருகின்றன. இதற்கிடையே பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையின் ஒரு பகுதி பத்திரிகைகளில் வெளியானது. அதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமருக்கும், நிதி மந்திரிக்கும் தொடர்பு இல்லை என்று ஒருதலைப்பட்சமாக கூறப்பட்டுள்ளது . முழு அறிக்கை வெளியாகும் முன் காங்

சீனாவில் இன்ப உலா...?

படம்
பெயரைப்பார்த்தால் "கலைமகள்' .ஆனால் முகம்-உருவம்  சீன வடிவம்.உண்மைதான் அவர் சீன்ப்பெண் தான் .அவரின் பெற்றொர் வைத்த பெயர் "சா ஒ ஜி யாங் " கலைமகள் தமிழ் மொழி மீது கொண்ட ஆவலால் தானே சூட்டிக்கொண்ட பெயர். இங்குள்ள தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாயில் நுழையாத எந்த அர்த்தமும் இல்லாத தமிழலல்லாத பெயர்களை வைத்துக்கொண்டிருக்கும் போது அழகிய தமிழ் பெயரை சூட்டியுள்ளார். சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தஇவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார்.  இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக

" இளமை தரும் இளநீர்...."

படம்
 இப்போது கோடை காலம் மென்பானங்கள் மூலம் மனிதர்கள் தங்கள் வெப்பத்தை தணிக்கும் காலம். இன்று கடைகளில் கிடைக்கும் மென்பானங்கள் நமது பணத்தை மட்டும் போக்கடிக்கவில்லை.நமது உடல் நலத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகிறது.வெப்பத்தை தணிப்பது போல் முதலில் இருந்தாலும் நமது ஆரோக்கியத்தையும் தனித்து விடுகிறது. காரணம் அதில் கலந்துள்ள ரசாயனங்கள்.துத்த நாகம்,ஈயம் போ ன்றவற்றை  அந்த பகாசுர பணம் விழுங்கி கோலா நிறுவனங்கள் சேர்ப்பதுதான். தனது கோலாவை ,பானங்களை வாங்கும் அடிமையாக்கும் போதை சமாச்சாரங்களுக்காக வே அவை சேர்த்து விற்கப்படுகிறது. எனவே அது போன்ற விளம்பரங்களை அள்ளி விடும் -ஸ்பான்சர் பானங்களை அறவே ஓரங்கட்டுங்கள். அதை விடுத்து நமக்கு குளிர்ச்சி தரும் பானம் என்றாலோ கோடை க் காலம் என்றாலோ  இயற்கையாக முதலில் நமக்கு ஞாபகம் வருவது "இளநீர்" தான் .  மற்ற பானங்களை விட இளநீருக் கு மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர். மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே

"ரமணா" !

படம்
உண்மை கதை இதுதான்.........,!! மதுரையில் உள்ள ராம் நகரில் இருந்து ஒரு பத்துவயது வெங்கட்ரமணன் என்ற சிறுவன் திருவண்ணாமலைக்குப் போகிறான்.  அப்போது உண்ண உணவில்லாமல் பசியால் மயக்கம்போட்டுக் கீழே விழுந்து விடுகிறான். அருகிலிருந்தவர்கள் பார்த்து விட்டுத் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கிறார்கள். சோர்விலிருந்து மீண்ட சிறுவன் ஏதேதோ உளறுகிறான். அதை என்னவென்று புரியாத மக்கள் அவரை பால யோகி என்று மூடத்தன கொண்டு  திடீரென்று அந்தச் சிறுவன் காலில் விழுகிறார்கள்.  சிலர் விழுந்ததைப் பார்த்து பலர் விழுகிறார்கள்.  கூட்டம் கூடுகிறது. வெங்கட்ரமணன் பெயர் மாறி "ரமணா" ஆகிறான்.  கொஞ்சநாளில் ரமணரிஷி ஆகிறான்.  அப்பாவி மக்கள் பக்தர்களாகக் கூடுகிறார்கள்.  வழக்கம் போல் மக்கள் பலர் காணிக்கை என்ற பெயரில்  கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நிறையச் சொத்துகள் சேர்ந்து விடுகிறது.  கோடிக்கணக்கில் பெருகி விடுகிறது.  ஆசிரமம் அமைத்து ஒரு நல்ல நிலையில் அமர்கிறான்.மற்றவர்களுக்கு நல்ல வழி காட்டுகிறாரோ இல்லையோ சாமியார்களுக்கு நல்ல வழி பிறந்து விடுகிறது. உடனே ஊரில் இருந்து தன் தம்பியை

தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?

படம்
இந்திய சினிமா 100 ஆண்டுகள் முடித்ததை இந்திய அரசு சார்பில் கொண்டாட இருக்கிறார்கள். அது மட்டுமல்ல செய்தி. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இம்மாதம் 25-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தில்லியில் கொண்டாடஅறிவிப்பு வெளியிட் டுள்ளது. அதில்  இந்திய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படுவதாகவும் அது தொடர்பாக விவாதங்களும் தொடர்ந்து நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான  பட்டியல்  வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் இந்தி, வங்காளம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட  படங்கள் வரிசை தரப்பட்டுள்ளது. ஆனால், விழாவின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் திரைப்பட வெளியீடு குறித்தோ, விவாதங்கள் குறித்தோ எந்த விவரமும்இல்லவே  இல்லை. ஆக தமிழ் நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா?அங்கும் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகிறதா?என்ற கேள்வி எழுகிறது. ஈழத்தமிழர்கள் படுகொலையைத்தான் அடுத்த நாட்டு விவகாரம் என்று கூறிவரும் மத்திய அரசு இப்போது தமிழ் நாட்டையே வெளிநாடாக எண்ணுகிறதா? அல்லது ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இங்கு தயாரானவை திரைப்படங்கள் வரிசையில்

"வெற்றி-32"

படம்
வெற்றிக்கு வழிகள் 32 பற்றிய இடுகை என்று எண்ணிவிட வேண்டாம் . இந்திய இணையத்தளங்களில் ,இணைய இணைப்புகள் மூலம்   புதிதாக கணினி  வைரஸ் பரவி வருவதாகதெரிகிறது.  இது 'வின்32' அல்லது ' ராம்னிட்' என்று அழைக்கப்படுகிற கணினி  வைரஸ் வகையை சேர்ந்தது.   இணையம் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது.  இதனை நாம் கிளிக் செய்தால் அது நமது கணிப்பொறியில் உள்ள புரோகிராம் பைல்களை தாக்கும்.  இதன் மூலம் ரகசியமாக உள்ள நமது வங்கி கணக்கு எண், கடவுச் சொற்கள்  போன்ற தகவல்களை திருடிக்கொள்ளும்.அதன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்து கொள்ள முடியும். மற்ற வைரஸ் அழிக்கும் மென்பொருட்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்  விதமாக இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வைரஸில் இருந்து பாதுகாக்க  நாம் தரவிறக்கியுள்ள  மென் பொருட்களால் கூட இதனை கண்டுபிடிக்க முடிவதில்லை. பாதுகாப்பு மென்பொருட்களை அடிகடி புதுப்பித்து கொள்வது, இணையத்திலிருந்து நம்பகம் இல்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் இதன் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். உங்கள் வங்கிக்கணக்குகள

மின்பற்றாக்குறையைச் சமாளிக்க;

படம்
  "சூரியன் " கைகொடுக்கு ம், -------------------------------------------- -பேராசிரியர் கே.ராஜு தேசிய மின்சார விநியோகப் பாதைக் கட்டமைப்பின் கடைக்கோடியில் தமிழ கம் இருப்பதால் வடமாநிலங்களில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து நமக் குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடிவதில்லை.  தில்லி மாநிலம் உபரி என அறிவித்த மின்சாரத்தைக் கூட நாம் பெற முடியவில்லை. மத்திய அரசின் நிதி உத வியுடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மின்உற்பத்தி நிலையங் களிலிருந்து கிடைக்கும் மொத்த மின்சாரத்தையும் இடைக்கால ஏற்பாடாக ஓராண்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை யும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழக முதல மைச்சர் 2012 அக்டோபர் மாதம் அறிவித்த சூரியசக்தி மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி என்ற திட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்கள் அத் திட் டத்தை ஏற்பதற்கு அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. 500 மெகாவாட்டிற்கு மட்டுமே ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது. அந்த மின்சாரமும் 2013 இறுதியில்தான் கிடைக்குமாம்.

கைகண்ட [அனுபவ] மருத்துவம்

படம்
நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத். அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை." -"1937ல் ஒரு நாள் குருவிக்காரி ஒருத்தி “பசி’ என்று கேட்டு, என் வீட்டுக்கு வந்தாள். என் தலையில் ஏற்பட்டிருந்த சொட்டையை அவள் கவனித்தாள். அதற்கு மருந்தாக ஒரு கொட்டையைக் கொடுத்தாள். அவள் கூறியபடி அதை ஒரு சில நாட்கள் தொடர்ந்து தலையில் தேர்த்து வந்தேன். என் தலையில் சொட்டை விரைவில் மறைந்து விட்டது.அந்த மகிழ்ச்சியில் நன்றி உணர்வுடன் அவளுக்கு ரூபாய் ஐந்து அன்பளிப்பாகக் கொடுத்தேன். “மருத்துவ உதவிக்குக் கூலியா?’ என்று வியப்படைந்த அவள் அதை ஏற்க மறுத்துவிட்டாள்.பிச்சை கேட்கும் குருவிக்காரியின் நாகரிகமற்ற வெளித்தோற்றத்துக்குள்ளே ஒளிந்து கொண்டிருந்த உயர்பண்பாட்டை அறிந்து வியந்தேன்.பின்னர், பல இன்னல்களுக்கிடையே பழங்குடி மக்களைத் தேடிச் சென்று நான் அடைந்த அனுபவங்கள் பல. குறிப்பிட்ட ஒரு பச்சிலையைத் தடவி மூங்கில் குழாயில் பாலை ஊற்றி வைத்து, 3 அமாவாசை காலம் வரையில் பால் கெடாதபடி வைத்துக்