உலகம் சில படங்களில் ,




பூமியில் சுரங்கம் தோண்டி தங்கம், வைரம் என்று வெட்டி,வெட்டி எடுத்து இப்போது வெறும் மணலும்,பாரைகளும்தான் வருகிறது.
 ஏற்கனவே அதிகமாக சலித்து எடுக்கப்பட்ட அவற்றை  பூமியில் தேடுவதை விட விண்கற்களில் கிடைக்க வழி தேடுவது  முடிவுசெய்து விட்டது ப்ளானட்டரி ரிசோர்ஸஸ் என்ற நிறுவனம்.
அதனால் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் விண்கற்களில் புதைந்திருக்கும் கனிமங்களை பற்றி ஆய்வை துவக்கி விட்டது.

நம் பூமிக்கு அருகிலேயே பல விண்கற்கள், சிறிதும் பெரிதுமாக உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் சில இன்னொரு கிரகமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மிகப் பெரியவை.
ஆஸ்டிராய்ட் என்று அழைக்கப்படும் அந்த விண்கற்களைத் தோண்டினா ல், பூமியைப் போலவே தண்ணீர், பிளாட்டினம், வெள்ளி போன்ற உலோகங்கள் கிடைக்கலாம் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.சில ஆய்வுகள் அதற்கு வலிமை சேர்க்கிறது.

 500 மீட்டர் குறுக்களவு உள்ள சிறு கோள்களில் அதிக அளவில் பிளாட்டினம் இருப்ப தாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். அவற்றை வெட்டி எடுத்து காசு பார்க்க  திட்டமிட்டுள்ளது பிளானட்டரி ரிசோர்ஸஸ்.

விண்கலத்தோடு விண்கற்களை நெருங்குவதற்கு முன்பு எந்தெந்த விண்கற்களில் என்னென்ன மதிப்பு மிக்க கனிமங்கள் உள்ளன என்பதை பற்றி அறிய வேண்டும்.
 இதற்கான தொழில்நுட்ப பிரச்னைகள், செலவுகள், போக்குவரத்து ஆகியவற்றை அந்த நிறுவனமே கண்டு கொள்ளும். இன்னும் பத்தாண்டுகளில் சிறு கோள்களில் உள்ள கனிமங்களை  தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகிவிடும்.
கிரகங்களில் இருந்து கனிமங்களைத் தோண்டி எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டால், அது தொழிற் புரட்சியைப் போல் மனித குலத்திற்கு பெரிய அளவில் பலன் தரும் நிகழ்வாகி விடும் .
 சில கோள்களும் அளவில் சிறியதாக இருப்பதால் கனிம வளங்களை எடுப்பது சுலபம் என கருதுகின்றனர் பிளானட்டரி ரிசோர்ஸஸ் நிறுவனத்தினர்.
 இக்கோள்களுக்கு புவி ஈர்ப்பு சக்தி  இல்லாததால் ஒரு தானியங்கி வானூர்தி மூலம் கனிமங்களை எடுக்கலாம்.

விண்வெளியில் மிதக்கும் பாறைகளிலிருந்து தண்ணீரை எடுத்து அதை ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாக மாற்றிக்கொள்ள முடியும்.
 இதற்காக எரிபொருளை நிரப்பும் நிலையங்கள் விண்வெளியில் அமைக்கப்படும். வருங்காலத்தில் வரப்போகும் அப்படிப்பட்ட விண்வெளி ஏறி பொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை கனடாவைச்சேர்ந்த  வடிவமைப்பாளர் பிரயன் வெர்ஸ்டீஜ் என்பவர் வடிவமைத்திருக்கிறார். அதை கீழேயுள்ள  படத்தில் காணலாம்.
 இந்த கனவு திட்டத்திற்கு அதிகமாக செலவிட வேண்டும் .
அதனால் இத்திட்டத்திற்கு  கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பகாசுர நிறுவனங்களும்  ‘டைட்டானிக்’இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் நிதி உதவி அளிக்க முன் வந்திருக்கிறார்கள்.
பின் என்ன பூமியைச்சுற்றும் ஒரு விண்கற்களையும் விட்டு விடாதீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
"உலகம் சில படங்களில்" ,



"இவர்கள் மலை மீதிருந்து கீழே நகரத்தை பார்வையிட  வில்லை.பனாமா நாட்டில் காட்டில் உண்டான தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு படையினர்.பரவலாக விளக்கு வெளிச்சம் போல் தெரிவது காட்டில் ஆங்காங்கு எரியும் "தீ "கூட்டம்தான்."
 தன கடமையை செய்யத்தானே சென்றார்.







வணக்கம்.       "திரை".

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?