"இயற்கை "யான மருந்துகள்.

 நமது வாழ்க்கை எவ்வளவோ  வசதிகளுடன் முன்னே றிக்கொண்டிருக்கிறது.அதே அளவு நமது உடலை தாக்கும் நோய்களும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இன்று பிறந்த குழந்தைகளுக்கும் கூட ரத்த அழுத்தம்,நீரழிவு ,மஞ்சள் காமாலை பொன்ற வியாதிகள் உண்டாகிறது.
இவை போன்ற செய்திகள் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் கேள்வியே படாதவை. ஆச்சரியம் தருபவை.
காரணம் .
நமது உணவு,கலாச்சார பழக்கங்கள்.மாற்றம்தான் இவைகளுக்கு முதல் காரணம்.
நமது நாட்டின் பருவகால எற்ற தாழ்வு களுக்கெற்ற உணவு முறையை மறந்து அந்நிய கலாச்சார அவர்கள்  உணவுகளை ஆட்டையை  போட்டு நாம் கையகப் படுத்திக்கொன்டதே இவ்வளவுக்கும் மூலம்.
இன்று நாம் முன்பு அதிகம் உட் கொண்ட இப்பொது மறந்து விட்ட தாவரமான முருங்கையை பார்ப்போம்.
முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது.
 இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை அடியோடு குணமாகும்.அவ ர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
பல் ஈறுகள் உறுதியாகும்.
 தோல் வியாதிகள் தீரும்.
முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது.
முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது.
 உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும்.
 கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம்.
 காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் முருங்கை இலைக்கு உண்டு.
பெண்களுக்கு உள்ள முக்கிய  பிரச்னை முடி கொட்டுதல் தான்.
 தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
 பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு உடலில் அனைத்து சத்தும் உண்டாக்கும்  ஆகாரமாக இருக்கும்.
இவைகளுடன் ஆண்மையை பெருக்கி,தாது உற்பத்திக்கும் பெரும் பங்கை முருங்கை வகிக்கிறது.முந்தானை முடிச்சை கொஞ்சம் ஞாபகப் படித்திக்கொள் ளுங்கள்.
 அடுத்து வருவது மங்களம் தரும் மஞ்சள் .

மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி பொருள். 
இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது. இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பலபிரச்சனைகளைப் போக்கலாம். 
முன்பு  பெண்கள் அனைவரும் பேர் அன் லவ்லிக்கு பதில்  தங்கள் அழகைப் பராமரிக்க மஞ்சள் தூளைத் தான் பயன்படுத்தினார்கள்.
இதனால் சரும நோய்களில் இருந்து விடுதலைப்பெற்றதொடு முகப்பொலிவும் பெற்றார்கள்.தேவையற்ற முடிகள் வளர்வதையும் மஞ்சள் தடுக்கும்.

இப்போது வரும் பல அழகுப் பொருட்களில் மஞ்சள் தூளும் ஒரு பொருளாகசெர்க்கப்பட்டுத்தான் வருகிறது.
 இப்போது இயற்கையாக முறையில் வீட்டிலேயே மஞ்சள் தூளைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்று பார்க்கலாம்.
தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூளை சம அளவில் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.
 உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.
இப்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் முகப்பரு பெரும் பிரச்சனையாக உள்ளது. மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..

 பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.
 மஞ்சள் தூளில் எலுமிச்சை சாற்றை  கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் கருத்து போன சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென்மையாக மாறும். 
இதனை தினமும் செய்து வந்தால் நாளடைவில் நீங்களே எதிர்பார்க்காத அளவு உங்கள் உடல் பள,பளப்பையும் -அழகையும் பெற்று விடும்.
தேவையற்ற ரசாயனங்களால் சருமம் ஒவ்வாமை உண்டாவதையும் தவிர்கலாம் .
இப்போதைய பேர் அன் லவ்லி உபயோகிக்காத நாள் உங்கள் முகம் இருக்கும் அழகை ஒருமுறை கண்ணாடியில் பார்த்தால் நீங்களே மஞ்சலி மகிமைக்கு மாறிவிடுவீர்கள். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?