சம்பா அரிசி மகத்துவம்.




--
சம்பா அரிசி மகத்துவம்.
 சம்பா அரிசி அதிலும் கைக்குத் தல் அரிசி .வயிறை மட்டும் நிரப்பாது.உங்கள் உடல் நலனையும் பாதுகாக்கும் .

அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். 

இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். 

ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. 

மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளன. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா! பெருங்குடல் புற்றுநோய்--கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். 

 கைக்குத்தல் அரிசியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது. வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone என்ற ஒரு வகை சுரப்பு நீர் அளவுகளை, அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது.

கொழுப்பை குறைக்கிறது -- கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.
இதய நோய் -- நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இரத்தக் ககுழாயில் பிளேக் என்கிற காரை உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை பராமரிக்க -- கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது.
ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கலை தடுக்க -- இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவு செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களைப் பெறலாம்.
நீரிழிவை கட்டுப்படுத்த -- கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும்.
எலும்புகள் வலுவடைய -- கைக்குத்தல் அரிசியில் எலும்புகளைப் பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக் கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21விழுக்காடு இருக்கிறது. மேலும், மெக்னீசியத்ன் மூலம்தான், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற தேவையான ஊட்டச்சத்தினை உறிஞ்சிக் கொள்கிறது.
மூச்சு இரைப்பு நோய் -- மெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, மூச்சு இரைப்பு நோயைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள மூச்சு இரைப்பு நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும்.
பித்தக்கற்கள் -- கைக்குத்தல் அரிசி போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாவது குறைகிறது என்று இரப்பை குடலியலுக்கான அமெரிக்க இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.
வலுவான நரம்பு மண்டலம்--கைக்குத்தல் அரிசி, வலுவான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, நரம்புகளை உரம் பெறச் செய்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
தண்ணீரில் விழுந்த செல் பேசியை  சரி செய்ய ?
------------------------------------------------------------------------
இன்றைய மிகத் தேவையான பொருட்களில் செல்லிடப் பேசி முதலிடம் வகிக்கின்றது. இதைப் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த செல்லிடப் பேசியை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக இரண்டு உதறு உதறி விட்டு உடனே மீண்டும் இயங்கச் செய்து விடுவார்கள். இப்படி செய்யவே கூடாது.
செல்லிடப் பேசியில் இருந்து சிம்கார்ட், மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது கைத் துடைக்கும் தாள் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.
suran
வீட்டைத் தூய்மைப்படுத்தும் மின் கருவியான Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode எனப்படும் உறுஞ்சும் நிலையில் வைத்து, செல்லிடப் பேசியை அதன் முன் காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.
Vaccum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம்.
 உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் செல்லிடப்பேசியை வைத்து செல்லிடப் பேசி தெரியாதபடி முழுவதுமாக மூடிவிடவும். இதனால் தண்ணீர் முழுமையாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும்.
ஆனால், இதற்கு பொறுமை மிக அவசியம்.
குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம்.
அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம்.
தலை முடியைக் காய வைக்கும் Hairdryer  முயற்சி செய்யலாம்.
செல்லிடப்பேசி நன்றாகக் காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்தி கொண்ட பின் அதை இயங்க செய்ய முயற்சிக்கவும்.
பெரும்பாலும் இயங்கத் தொடங்கிவிடும்.
இல்லை என்றால் செல்லிடப்பேசி சரியாகிவிட்டது. பேட்டரி பிரச்சினையாக இருக்கும். வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும்.
ஆனால் அப்போதும் இயங்கவில்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போகவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 
2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
" பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இது"வென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது.

ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது.

"கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சிக்கும் காரணம்" என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புள்ளிவிபரத்துறை அமைச்சின் தகவல்களின்படி, இந்திய தயாரிப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.6 ஐ தாண்டவில்லை. அத்தோடு விவசாய- பண்ணை உற்பத்திகள் 1.4 வீதத்தாலேயே வளர்ந்துள்ளன.
எனினும் இந்த குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த ஆண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 5 வீதமாக குறைத்துக் கொண்டுள்ளதாக கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தது.
இந்திய பொருளாதாரத்தின் இந்த இறங்குமுகம் 'தற்காலிகமானது தான், விரைவில் 8 வீதமாக உயரும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.
ஆனால், பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலை .கவலை தான்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?