விலை உயரும் அபாயம்





இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 இதையடுத்து பெட்ரோல்,டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்து அத்யாவசிப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

 சர்வ‌தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ‌ஏற்பவும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது.

 சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

 காலை நேர வர்த்தகத்தின் போது ரூ.59.78 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு பகல் நேர வர்த்தகத்தின் போது மேலும் கடுமையாக சரிந்து ரூ.60.24 ஆக ஆனது.
 இது இந்திய பங்குச் சந்‌தைகளையும், ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான தொழில்களையும் கடுமையாக பாதித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 எண்ணெய் நிறுவனங்கள் கூறுகையில், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 இதனால் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.

இதன்படி தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
அதே போன்று டீசல் விலையை லி.50 பைசா உயர்த்துவதற்கு பதில் மேலும் அதிகமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 மேலும் சமையல் கேஸ் விலையும் கணிசமான அளவுக்கு உயரக்கூடும் சூழ்நிலை உள்ளது.
.
இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகள் அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் .

 ஜூலை 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வரலாம் .

 இப்படி எரிபொருட்களின் விலை  உயர்த்தப்பட்டால் பயணிகள், சரக்கு போக்குவரத்து கட்டணம் மட்டுமின்றி- அத்யாவசிய பொருட்களான அரிசி, பருப்பு ,காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை பன்மடங்கு எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



--------------------------------------------------------------------------------------------------------------------------------------
'மஞ்சள் பூசிய முகம்'
-------------------------------

மஞ்சள் பூசிய பெண்கள் ரசாயன "கிரீம்' மோகத்தில், மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்... பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன. அரைத்த மஞ்சளை பூசாமல், "டியூப்புக்குள்' அடைத்திருக்கும், ரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர்  பெண்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, இளம்பெண்களின் மஞ்சள் பூசிய முகத்தை பார்க்க முடிந்தது.
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு, பூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, காயவைத்து அரைக்க வேண்டும்.
 முகம், கை, கால்களில் பூசினால் தங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்தவெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம் குறையும்.
* கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.
* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும். சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும்.
* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.
 வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு கலந்து பூசலாம்.
* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ, காய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, கார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை, அதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.

* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக அலசினால் முடி பளபளக்கும்.

* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது.

 நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.




---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?