தரமானதுதானா... தனியார் கல்வி?

                                                                                                                                     என்.பகத்சிங்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் துவங்கியுள்ளன.
தாத்தா - பாட்டி முதல் அத்தை - மாமா வரை எல்லோரும் பிள்ளைகள் பெறும் மதிப்பெண் கள் மீதே கவனமாக இருந்து, எதிர்பார்ப்பு களில் வெற்றிகண்டவர்களாகவும், ஏமாந்த வர்களாகவும் இருப்பர்.

 மதிப்பெண்கள் பெறு வதும் மட்டுமே கல்வியின் இறுதி வெற்றியாக கருதும் மனோபாவம் இவர்களுக்கு எங் கிருந்து வந்தது? என்ற கேள்வி நெடு நாளாகவே இருந்து வருகிறது.
 ஒரு மாண வரின் அறிவுத்திறனை எங்கிருந்தோ, யாரோ ஒருவரால் வழங்கப்படும் மதிப்பெண்கள் சரியாகத் தீர்மானிக்குமா? அந்த அளவுகோல் சரியானது தானா?
மதிப்பெண்கள் மட்டுமா : மதிப்பெண் பெற்றுத்தரும் சமூக அங்கீ காரம் மிக முக்கியமாக மாற்றப்பட்டதின் விளைவுதான் மதிப்பெண்ணை மட்டுமே முன்னிறுத்தும் இன்றைய மனோநிலை. மத்திய தர, உயர் மத்திய தர வகுப்பினரின் வீடு களில் மதிப்பெண் அதிகமாகவும், குறைவாக வும் பெற்ற மாணவர்களைவிட அவர்தம் குடும் பத்தினர் தேர்வை யுத்தகளமாகவும், மதிப் பெண்ணை வெற்றிச் சின்னமாகவும் கருது கின்ற மனப்பாங்கு கொண்டவர்களாகவே மாறியுள்ளனர்.
 பள்ளியிறுதி தேர்வில் பிள்ளைகள் 1,150க்கு மேல் மதிப்பெண் பெற்றால்தான் பெற் றோர்கள் நிம்மதியாக மூச்சுவிடுகின்றனர். மதிப்பெண்ணுக்குப் பின்னால் ஒரு மாயை யை ஏற்படுத்தி அதைக் கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நடப்புச் சூழலில் ஒரு மாணவருக்கு பின்னால் இந்த வகுப்பினரின் முழு குடும்பமும் உழைக்கிறது.
அதிக மதிப்பெண் பெறுவதே தரமான கல்வி என்ற முடிவுக்கு வருபவர்களின் இந்த மனோ பாவத்திற்கான ஊற்றுக்கண் இந்தியாவின் கல்விக் கொள்கை, வேலைவாய்ப்புக் கொள் கை, தொழிற்கொள்கை, பொருளாதாரக் கொள் கை ஆகியவற்றாலேயே நிகழ்ந்துள்ளது. தர மான கல்வி பற்றிய சிந்தனையோட்டத்தை ஊடகங்களும் திறமையாக, கல்வி குறித்த பேட்டிகள், கல்வியாளர்களின் விளக்கம், கல்விமலர், கல்வி கண்காட்சியென உரு வாக்கி நடத்துகின்றன.

தனியார் பள்ளிகள் : ஓசூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, நாமக் கல், பெருந்துறை, ஈரோடு முதலிய பகுதி களில் புற்றீசல்கள் போல தனியார் பள்ளிகள், பள்ளியிறுதித் தேர்வுக்கான மாணவர்களை மட்டுமே தயார் செய்து வருகின்றன.
அதிலும் நாமக்கல் பகுதியில் கோழிப் பண்ணைகள் நடத்தும் உரிமையாளர்கள், பண்ணைகளை உபதொழிலாக சுருக்கிக் கொண்டு பள்ளிகள் நடத்துவதை முதன்மைத் தொழிலாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
 பஸ், லாரி கட்டும் பெரும் முதலாளிமார்களும் இத்தகைய பள்ளிகளில் பாகஸ்தர்களாக சேர்ந்துள்ளனர். நாமக்கல் பகுதியே கல்விச் சேவையில் கல்லாகட்டி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் பத் தாம் வகுப்புத் தேர்வு முடிவுதான் இவர்களின் பள்ளி கல்வித் தொழிலுக்கான திறவுகோல். இந்தாண்டு பத்தாம் வகுப்பில் 460க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் முன்னு ரிமை. 480க்கு மேல் எடுத்து முதலில் வரும் 100 பேருக்கு கல்விக் கட்டண சலுகை என கவர்ச்சியான விளம்பரங்கள் நாமக்கல் வெளி யிடும் பள்ளிகளில் பிளஸ் 2க்கு முதலாம் ஆண்டு கட்டணம் ரூ. 1,78,000/- (விடுதி கட் டணம், கல்விக் கட்டணம் உட்பட) இரண் டாம் ஆண்டுக்கு ரூ.2,00,000 இந்தத் தொகை யையும் டிடியாகவோ, செக்காகவோ கட்ட முடியாது. பணமாகத்தான் கட்ட வேண்டும்.

இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் நாளொன்றுக்கு பதினாறு மணி நேரத்திற்கும் மேல் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும். விடுதிகளில் தங்கி வேலை செய் பவர்களுக்குத்தான் இங்கு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. 50 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என பணியமர்த்தப்படுகிறார்கள். காலை 5 மணிக்கு இவர்களின் பணி துவங்கி யோகா, உடற்பயிற்சி, காலை படிப்பு, வழிபாடு, உணவு, வகுப்புகள், உணவு, விளையாட்டு, சலவை, குளியல், சிற்றுண்டி, மாலை படிப்பு, வீட்டுப்பாடம், இரவு உணவு, இரவு படிப்பு என அட்டவணை ஒன்றின்படி இரவு 11 மணி வரை இவர்களின் பணிநீள்கிறது. இவர் களுக்கு விடுப்பு என்பதே கிடையாது. ஞாயிற் றுக்கிழமைகளில் தங்கள் கீழ் உள்ள மாண வர்களைப் பார்க்க வரும் பெற்றோர்களுக்கும், தொலைபேசியில் அழைக்கும் பெற்றோர் களுக்கும் பிள்ளைகளின் கல்வி, நலன் தொடர்பான விசாரணைகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஓய்வு என்பதே கிடையாது.
 மாண வர்களுக்கும் இதேநிலைதான். தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள், இரவுபடிப்பு, காலை படிப்பு, வகுப்புகள் என மாணவர்களும், ஆசிரி யர்களும் கசக்கி பிழியப்படுகின்றனர். இத னால்தான் மாநில அளவிலான இடங்களை இந்தப் பள்ளிகளால் பெற முடிகிறது. இந்த மாணவர்கள் மருத்துவம், பொறியியலிலும் அதிக இடங்களை ஆக்கிரமிக்கின்றனர். கலை அறிவியல் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.

ஆங்கில மோகம் : மெக்காலோவின் கல்விக் கொள்கை ஆங்கிலத்தை அறிவுசார் மொழியாகவும், ஆங்கிலேயர்களை அறிவு சான்றவர்களாக வும் அன்றைக்கு முன்னிறுத்தியது. இதனால் மேலை நாட்டுச் சிந்தனை, பொருள் உற்பத்தி நுகர்வு, உணவுமுறை, கண்டுபிடிப்பு, பழக்க வழக்கம், விளையாட்டு, கொண்டாட்டம் என அனைத்தும் உயர்வானதாக நமக்குள் திணிக் கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் வெற்றிக்கான மொழி என ஒரு பிரிவினரால் நம்பப்படுகிறது. ஆங்கில மோகம் மிக வேகமாகப் பரவியதற்கு அது சமூக மதிப்பாக மாறிப் போனது மட்டு மல்ல, கல்வி உலகளாவிய வணிகமானதும் தான் காரணம்.1970களில் தமிழகத்தில் பள்ளிக் கல்விக்குள் தனியாரை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது. சிறு முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும், பள்ளிக் கல்வி யில் முதலீடு செய்வது லாபகரமானது என பள்ளிகளைத் தொடங்கினர். இன்று கார்ப்ப ரேட்டுகளும் இத்தொழிலில் ஈடுபடுகின்ற னர். 2001ல் இப்பள்ளிகளுக்கு தனி இயக்கு நரகம் உருவாக்கிய பிறகு தனியார் பள்ளிக ளின் எண்ணிக்கை 15,657 ஆக உயர்ந்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு களில் 2000 முதல் 2010 வரையிலான பத்து ஆண்டுகளில் 210 மாணவர்களும், 2010 முதல் 2012 வரையிலான இரண்டு ஆண்டு களில் மட்டும் 64 பேரும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இவர்களில் 203 மாணவர்கள் தனியார் பள்ளி களில் பயின்றவர்கள். 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில இடம்பிடித்த 13 பேரில் 12 பேரும், பத்தாம் வகுப்பில் மாநில இடம்பிடித்த 198 பேரில் 179 பேரும் தனியார் பள்ளி மாணவர்கள்.
கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 92 சதவீத தனியார் பள்ளி மாணவர்களே பெற்றுள்ளனர் என்பதி லிருந்தே பள்ளிக் கல்வித்துறையில் தனியார் களின் ஊடுருவலை விளங்க முடியும்.சில ஊடகங்கள் இந்தத் தேர்வு முடிவுக ளை வைத்துக் கொண்டு கல்வி நிறுவன முத லாளிகளுக்குச் செய்யும் சேவை வெகுதுரிதம். உயர்கல்வியில் மருத்துவமும், பொறியியலும் அதி உன்னத கல்வியாக இவர்களால் உரு வகப்படுத்தப்படுகிறது. பள்ளி தேர்வு முடிவு களை ஒட்டி இந்த பணிகளை ஊடகங்கள் துவக்குகின்றன.

மதிப்பெண்களை மட்டும் முதன்மைப்படுத்தி பேசுவதும், கல்வி ஆலோ சகர்கள் என்ற சிலரைக் கொண்டு உரைகள் நிகழ்த்தப் பெறுவதையும், கண்காட்சிகள், வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்துவதையும், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் இருக் கும் போட்டிகளை விவரிப்பதும், விண்ணப் பிக்கும்முறை, வேலைவாய்ப்பு முதலியன பற்றி திரும்ப திரும்பச் சொல்வதுமாக மிகப் பெரிய சித்தரிப்புகளைச் செய்கின்றன.


வசதிபடைத்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களாக (கடன் வாங்கி) தங்களை கருதி கொள்கிற பெற்றோர்கள் ஒரு புறம். ஏழை, எளிய மக்களின் பிரதிநிதிகளான பெற் றோர்கள் ஒருபுறமென கல்வி இருவேறு கூறு களாகப் பிரிந்து கிடக்கிறது. முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிக செலவு செய்து தங்கள் பிள்ளைகளை பொறியாளர்களாகவும், மருத்து வர்களாகவும் உருவாக்க முயல்கின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பிள்ளைகள் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயின்று அர சுத்துறை பணித்தளங்களான கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, வங்கித்துறை போன்ற துறைகளில் பணிகளில் சேருகின் றனர்.
முதலாம் பிரிவைச் சேர்ந்த மருத்துவர் களும், பொறியாளர்களும் தனியார்த்துறை களிலேயே பணிகளில் சேருகின்றனர். ஆக பணியமர்வு தளங்களும் இரு வேறு கூறுக ளாக தனியார் பள்ளிகளால் பிரிக்கப்படுகிறது. இப்படி உருவாகும் பொறியாளர்களும், மருத் துவர்களும் பணத்தைக் கொட்டி செயற்கை யாக, ஊதி பெரிதாக்கப்பட்டு மனப்பாட முறை களால் உருவாக்கப்படுவதால் அவர்களின் சிந்தனையோட்டம் இந்திய இயல்பு களுக்குள் பொருந்தாமல் வேறுபட்டு நிற் கிறது.
ஆங்கில மோகம், அன்னியர்களுக்கு சேவை என்ற அடித்தளங்களிலேயே இவர் களின் இத்தகைய பள்ளிக் கல்வி இவர்களை உருவாக்குகிறது.கண்ணுக்குத் தெரியாமல் இவ்வாறு உரு வாக்கப்படும் இருவேறு சமூகம், ஏற்றத் தாழ்வுகளை இன்னும் அதிகரிக்கவே வழி வகுக்கும். புதிய சிக்கல்களை உருவெடுக்க வைக்கும். இவற்றினைக் களைவதுதான் உண்மையான கல்வியாளர்களின் நீண்ட பணியாக இருக்கும்.


கட்டுரையாளர் : அகில இந்திய இன்ஷ்யூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------   
முகனூலில்  முத்திரை பதிந்தவை.
----------------------------------------------------
 நன்றி :எதிரொலி

கனவுக்கன்னியும் காகிதப்புலிகளும்!


தமிழக முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு ஜப்பானிய சர்வதேச கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவியை நாடியிருக்கிறார்.


இதுகுறித்து அந்த குறிப்பிட்ட ஜப்பானிய அமைப்பின் அதிகாரிகள் தன்னை நேரில் சந்தித்தபோது ஜெயலலிதா தனது கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு கூறுகிறது. மேலும் அந்த செய்திக்குறிப்பில் "2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு" என்கிற ஜெயலலிதாவின் "கனவு திட்டத்தின்" இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அந்த இரண்டாம் பாகத்தில் ஜெயலலிதா பட்டியலிடப்போகும் திட்டங்களுக்கு ஜப்பானிய நிதி உதவி தேவை என்று ஜெயலலிதா கோரியதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.


http://m.thehindu.com/news/national/tamil-nadu/jayalalithaa-seeks-jica-aid-for-infrastructure-projects/article4833407.ece/?maneref=http%3A%2F%2Fm.thehindu.com%2Fnews%2Fnational%2Ftamil-nadu%2F%3Fmaneref%3Dhttp%253A%252F%252Fwww.thehindu.com%252F%253Fmstac%253D0


இந்த செய்திக்குறிப்பில் ஜப்பானிய நிதிஉதவியுடன் தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் பல்வேறு உள்கட்டுமான பணிகளும் பட்டியலிடப்பட்டு, இதற்கு ஜப்பானின் நிதி உதவி அளிக்கப்பட்டதற்கு ஜெயலலிதா சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இப்படி பட்டியலிடப்பட்டிருக்கும் முக்கியமான உள்கட்டுமானப்பணிகள் எல்லாம் எந்த ஆட்சியில் துவக்கப்பட்டவை என்று கூர்ந்து பார்த்தால் அவை ஒன்று திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை அல்லது திமுக ஆட்சியில் வேகப்படுத்தப்பட்டவை என்பது புரிபடும். இந்த பட்டியலில் இருக்கும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டாலே தமிழ்நாட்டின் உள்கட்டுமான நிர்மாணிப்பில் திமுக அரசின் பங்களிப்பு என்ன என்பது புரிபடும்.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் எப்படி புறக்கணிக்கப்பட்டது என்பதையும், தற்போதைய ஜெயலலிதா அரசால் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் எப்படி பின்னுக்குத் தள்ளப்பட்டு, உலகில் வேறு எங்குமே உருப்படாத மோனோரயில் திட்டம் எப்படி பலவந்தமாக சென்னையில் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் ஒருவர் ஒப்பிட்டு பார்த்தாலே, திமுக என்கிற கட்சியும், கருணாநிதி என்கிற அதன் தலைவரும் என்ன செய்தார், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எப்படியெல்லாம் பயன்பட்டார் என்பதையும், ஜெயலலிதா என்கிற திரைப்பட நடிகை எப்படி அரசியலையும், ஆட்சியையுமே மிகப்பெரிய கண்காட்சியாக மாற்றி மோசடி செய்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
இப்போது கூட சென்னையின் மிகமுக்கிய உள்கட்டுமான திட்டமான மதுரவாயல்—சென்னை துறைமுக மேம்பால விரைவு சாலைத்திட்டத்தை தனது முட்டாள் தனத்தால் முடக்கிப் போட்டிருப்பவரும் சாட்சாத் ஜெயல்லிதா தான். இந்த லட்சணத்தில் இந்த ஜெயலலிதா புதியதாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட ஜப்பானிய நிதிஉதவி கேட்கிறார் என்றால் எதனால் சிரிப்பது என்று தான் தெரியவில்லை.


அதுவும் இவர் ஜெப்பானிடமிருந்து எதற்காக நிதிஉதவி கேட்கிறார் என்றால், இவர் வெளியிடவிருக்கும் “2023இல் தமிழ்நாடு” என்கிற “கனவு திட்டத்தின்” இரண்டாவது பாகத்தில் இனிமேல் சொல்லவிருக்கும் திட்டங்களுக்கு நிதிதேவை என்று கேட்டாராம்.


ஜெயலலிதாவின் “கனவு” திட்டத்தின் இரண்டாவது பகுதி இனிமேல் தான் வரப்போகிறது என்றால் இவர் ஏற்கெனவே வெளியிட்ட “கனவு” திட்டத்தின் முதல்பகுதியின் நிலை என்ன என்று உங்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பு. அவரது “கனவின்” முதல் பாகத்தை அவர் மிகுந்த விமரிசையாக சென்ற ஆண்டு வெளியிட்டார். வழக்கம்போல இந்திய தமிழக ஊடகங்களெல்லாம் “ஆஹா அம்மா கனவு கண்டுவிட்டார்; தமிழ்நாடு ஓஹோவென முன்னேறப்போகிறது” என்று கொண்டாடி மகிழ்ந்தன.

http://www.ndtv.com/article/tamil-nadu/tamil-nadu-cm-releases-vision-tamil-nadu-2023-document-188860


“அம்மா கனவின்” முதல் பாகம் வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகி, அந்த கனவின் எந்த பகுதி நிறைவேறி பொதுமக்களுக்கு பயன்பட்டிருக்கிறது என்பதை “அம்மாவின் அடிமைகள்” யாராவது தயவு செய்து விளக்கிச் சொன்னால் தேவலாம். எதிரொலியின் பார்வைக்கு அம்மா கண்ட கனவின் எந்த பகுதியும் நிதர்சமானதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.


மாறாக இந்த ஒரு ஆண்டில் சென்னையில் துவங்கப்பட்ட மலிவுவிலை இட்லிக்கடைகள் மாநிலமெங்கும் விரிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டமாக இப்போது மலிவு விலை காய்கறிக்கடைகள் திறந்திருக்கிறார். இவையும் மாநிலமெங்கும் விரிவடையும் என்று எதிர்பார்க்கலாம். இதெல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா? வீழ்ச்சியின் அறிகுறியா என்பதை சுயமாக சிந்திக்கத் தெரிந்த சுயமரியாதை உள்ள தமிழர்களின் சுயமுடிவுக்கே எதிரொலி விட்டுவிடுகிறது.
மற்றபடி, “அம்மா கனவின்” முதல் பாகத்துக்கே மலிவு விலை இட்லிகடையும், காய்கறிகடையும் திறக்கும் சூழல் உருவாகியிருக்கிறது என்னும்போது, அவர் “கனவின்” இரண்டாவது பாகத்தை வேறு விரைவில் வெளியிடப் போகிறேன் என்கிறார். அப்படி அவர் வெளியிட்டால் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் மலிவாக கிடைக்குமோ என்று எதிரொலிக்கு பயமாக இருக்கிறது.


ஆனாலும் என்ன, வெள்ளித்திரையின் இந்த முன்னாள் கனவுக்கன்னியின் ஆட்சியை, வாங்கும் அரசு விளம்பர காசுக்காக புகழ்ந்து தள்ள காகிதப்புலிகளாம் தமிழ்நாட்டு ஊடகங்கள் காத்திருக்கும்வரை, ஜெயலலிதா செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.


நாளுக்கொன்றாக காட்சியை மாற்றினாலே போதும். நேற்றைய காட்சியும் இன்றைய காட்சியும் ஒன்றுக்கொன்று முரண்பட்டால்கூட அவருக்கு ஒரு பிரச்சனையும் வராது. காரணம் இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்கள் தான், இந்த முன்னாள் கனவுக்கன்னியின் நாளைய கனவு என்னவாக இருக்கும் என்று பொழிப்புரையை எழுதியே இன்றைக்கு அவரை காப்பாற்றும் காகிதப்புலிகளாயிற்றே! கைவிடமாட்டார்கள். அவர் தொடர்ந்தும் “கனவு” காணலாம்! கரம்பாய்ப் போவது தமிழ்நிலம் தானே?

-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?