தங்கம்......கடன் வழங்ககூடாது !

ரிசர்வ் வங்கி உத்தரவு !!.

தங்கம் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக 50 கிராம் எடைக்கும் அதிகமான தங்க நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் பேரில் கடன் வழங்ககூடாது என ஊரக வங்கிகளுக்கும்  ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

விலை மிகவும் சரிவடைந்திருந்ததையடுத்து மே மாதத்தில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக மிகவும் உயர்ந்து இருந்தது. தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் நம்நாடு முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் கிராமங்களில் போதுமான அளவிற்கு வங்கி வசதி இல்லை. இந்தியாவில் விற்பனையாகும் தங்கத்தில் கிராமங்களின் பங்கு 60 சதவீதமாக உள்ளது. எனவே தங்க நாணயங்கள் மீது கடன் வழங்குவதில் ஊரக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்கனவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தங்க பரஸ்பர நிதி திட்ட யூனிட்டுகள் பேரில் கடன் வழங்ககூடாது என்று வங்கிகளுக்கு ஏற்கனவே தடை உள்ளது. மத்திய அரசும் தங்கம் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதமாக அண்மையில் உயர்த்தியது.

 அனைத்திந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் கூட்டமைப்பும் தனது 42,000 உறுப்பினர்களை தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் விற்பனையை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு தங்கம் இறக்குமதி முக்கிய காரணமாகும். 
இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் நாள் ஒன்றிற்கான தங்கம் இறக்குமதி தற்போது 3.60 கோடி டாலராக (ரூ.216 கோடி) குறைந்துள்ளது. 
 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் இது 13.50 கோடி டாலராக இருந்தது. ஆக தற்போது இறக்குமதி பன்மடங்கு குறைந்துள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 விடுதலைப் புலி- மூத்த போராளி மர்மமான முறையில் சாவு!
போர்க்களத்தில் விழுப்புண் அடைந்ததால் சுமார் இரு தசாப்தங்களுக்கு மேல் விடுதலைப் போராட்டத்திற்கு தன் வாழ்வை வாழ்வை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த மூத்த போராளி ஒருவர் சித்திரன் கந்தசாமி.
தனது இறுதி காலத்தில் அவரது உடல்நிலை காரணமாக விடுதலைப் போராட்டத்திலிருந்து தன்னை விடுவித்து வாழ்ந்து வந்தார்.
ஆயினும், முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற பின் அவரையும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் சிறைப்பிடித்தன.
 பின்னர், புனர்வாழ்வு என்ற பெயரில், தொடர்ச்சியான மனஉளைச்சலை இவருக்கு உண்டுபண்ணியதோடு, சித்திரவதைகளையும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு இவர் மீது மேற்கொண்டது.
 
இதனால் , மனக்குழப்பத்துக்கு உள்ளான இவரை தடுப்பிலிருந்து விடுவித்தனர் சிறீலங்காப் படையினர். அதன் பின்னர் 49 வயதுடைய  இந்த மூத்த போராளி தனது குடும்பத்தினருடன், வடமராட்சியின் இமையாணன் பகுதியில்ல்வசித்து வந்தார்.
 
இந்நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சாவு ஒரு மர்மம் நிறைந்ததாக உள்ளதாக ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது.
 
சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என போராளிகள் நலன் காக்கும் அமைப்பென தம்மை அடையாளப்படுத்தியுள்ள தரப்பினர் பரிஸ்தமிழ்.கொம்மின் வடமராட்சி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?