‘நாய்க்கறி’

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இருந்து நாய்கள் கடத்தப்பட்டு அவை வியட்நாம் ஓட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
 இப்படி கடத்தப்படும் நாய்கள் ஆண்டுக்கு 2 லட்சம் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சாதாரணமாக நம்மூர்காரங்க  தெருநாய்களை பிடிச்சுட்டுப்போய் விஷ ஊசி போட்டு கொல்லும் செய்தியே நம்மை உலுக்குகிறது.
ஆனால் தாய்லாந்தில் வீட்டு நாய்கள், தெரு நாய்கள் எல்லாமே அடக்கம். இதை தடுத்து நிறுத்தக் கோரி தாய்லாந்து, வியட்நாமில் செயல்பட்டு வரும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் போராடி வருகிறது.
நாய்களின் கறி உடலுக்கு வெப்பத்தை கொடுப்பவை.
அதனால் வியட்நாமுக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்கள் குளிர் காலங்களில் நாய்களின் கறியை விரும்பி சாப்பிடுகின்றனராம்.
 இதனால் வியாட்நாம் ஓட்டல்களில் ‘நாய்க்கறி’க்கு  அதிகம். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் தாய்லாந்தின் வடகிழக்கு பகுதிகளிலிருந்து மீகாங் ஆற்றின் வழியாக நாய்களை கடத்தி வந்து வியட்நாம் ஓட்டல்களில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர். 10 அல்லது 20 நாய்களை பிளாஸ்டிக் வலை போன்று இருக்கும் பைகளில் போட்டு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து வழக்குத் தொடர்ந்தாலும் தண்டனைக் காலம் சில மாதங்களே என்பதால் திரும்ப வந்து அதே தொழிலை செய்கின்றனர் நாய் கொள்ளையர்கள். அதோடு, தாய்லாந்தில் நாய்களைக் காக்க வலுவான சட்டங்களும் இல்லை என்கின்றனர் பாதுகாப்பு அமைப்பினர்.

கடத்தி வரும் நாய்கள், ஒவ்வொன்றாக மற்ற நாய்களின் முன்னாடியே வெட்டி கறியாக்குகின்றனர். அப்போதுதான் வெட்டப்படாத நாய்களுக்கு மன அழுத்தமும், பயமும் கூடுவதால் நாய்களுக்கு ஒருவிதமான ஹார்மோன் சுரக்குமாம். அந்த நேரத்தில் வெட்டப்படும்போது கறிக்கு ருசி கூடுகிறது என்று நம்புகின்றனர் ஒட்டலுக்கு கறி வெட்டுபவர்கள். இப்படி கொல்லுவது மிக கொடூரமான முறை என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் விலங்கு ஆர்வலர்கள்.

நாய்களை வெட்டும்முறை இப்படி என்றால், இதை தாய்லாந்தில் பிடிப்பது இன்னொரு தனிக்கதை.
சில நாய்களை வீடுகளிலேயே வளர்ப்பதற்கு வாங்குவது மாதிரி வாங்கி விடுகின்றனர். மற்ற நாய்களை பூங்காக்கள், மக்கள் கூடும் இடங்களிலிருந்து பிடிக்கின்றார்களாம். இதைத் தவிர்த்து தெருவோரங்களில் சுற்றித் தெரியும் நாய்களையும் விடுவதில்லை.


தாய்லாந்தில் 10 டாலருக்கு வாங்கப்பட்டு, வியட்நாமில் 60 டாலருக்கு விற்கப்படுகிறது நாய்கள். ஆனால் நாய்கள் வாங்குவதும், விற்பதும் இன்னும் சட்டபூர்வமாக்கப்படவில்லை.

விலங்குகள் உரிமையை சார்ந்த இயக்கத்தை சேர்ந்தவர் தரும் தகவலை கேட்டால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. வியட்நாமில் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் நாய்கள் உணவுக்காக கொல்லப்படுகின்றன என்கிறார். இதில் வீட்டு நாய்கள், தெரு நாய்கள் எல்லாமே அடக்கம். விலங்குகளிலேயே நாய்கள்தான் அதி புத்திசாலியானது.
அதை தொடர்ந்து கொடுமையாக கொன்று குவித்தால் அதனுடைய இனம் என்னாவது? என்று கேட்கிறார்.
நாய் கறி தின்பதால் நன்றி உணர் ச்‌சி மனிதனுக்கு அதிகரிக்கிறதா?
இதில்லாமல் ஆண்டுக்கு 2 லட்சம் நாய்கள் தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க தாய்லாந்து நாடாளுமன்றத்தில் விலங்குகள் நலவாழ்வு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று தி சோய் பவுண்டேஷன் என்னும் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.


 
த. ஜெயகுமார்  நன்றி;விகடன்  
-------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நகர்புறங் களில் வசிக்கும் இந்தியர்களில் நூறில் 17 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீரம் தொடர்பான நோய்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 6 சதவீதம் பேர் மூன்றாம் நிலை சிறுநீரக நோய்க்கு ஆளாகி உள்ள தாகவும், இவர்கள் கட்டாய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும், மேலும் சிலர் அதிகம் செலவாகும் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை பெற வேண்டிய நிலையிலும் உள்ள தாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 12 நகரங் களில் உள்ள 13 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறுநீரக நோய்கள் தெடர்பான ஆய்வு நடத்தப் பட்டது. இதில் கிராமப்புறங்களை விட நகரபுறங்களில் வசிக்கும் நூறு பேரில் 17 பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த ஆய்வில் மருத்து வர்களை பெரிதும் அதிர வைத்த தகவல், ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டவர்களில் பெரும்பாலானோர் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக நோயுடன் இருப்பதாகும். குரோனிக் கிட்னி டிசீஸ் எனப்படும் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக நோய் களைக் கொண்டவர்கள் அதற்கு முன் சிறுநீரகம் தொடர்பான எந்த ஒரு சோதனையையும் மேற்கெள்ள வில்லை என தெரிவித்துள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நூலிலிருந்து...
-------------------------
கட்டுண்டு கிடக்கும் இந்து மனம்
இந்துக்களின் சமூகப் பழக்க வழக்கங்களையும், நடத்தையையும் மதமே வழிநடத்துகிறது. மதத்தின் இந்தச் செல்வாக்கு, அடிப்படையில் மனம் சார்ந்தது. ஏனெனில், செயல்கள் எண்ணங்களின் விளைவே. இந்து மனத்தின் மீது உருவாக்கப்பட்ட முதன்மையான பாதிப்பு அடிமைத்தனம். முதலில் அது பணிய வைக்கப்பட்டது. பிறகு தன் வயமிழந்தது, இறுதியாய் அடிமையாக்கப்பட்டது. கட்டளைக்கு முழு மனத்துடன் கீழ்ப்படிய அது தயாராக உள்ளது. ஒரு வழிகாட்டியின்  பின்னால் கண்களை மூடிக்கொண்டு எங்கும் பின்தொடர அது தயாராக உள்ளது. தனது சுதந்திரத்தை இழந்ததால் அது பார்வையையும் இழந்துவிட்டது. முன்னும் பின்னும் என்ன இருக்கிறது என்றுகூடப் பார்க்காது. அந்த மனம் முழுவதும் கற்பனையால் நிரம்பியிருக்கிறது. தனது சுற்றுப்புறம் பற்றிய எந்த உணர்வும் இல்லை. அவனுக்குக் கற்பனையும் உண்மையும் ஒன்றுதான். அவனது உலகம் முழுவதும் கற்பனையானது, உண்மை அல்ல. எதை நம்ப வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதை அவன் நம்புகிறான். கேள்வி கேட்பதில்லை, முடிவுகள் பற்றிய குழப்பமும் அவனுக்கில்லை. தானே விரும்பி அடிமைத்தனத்தை ஏற்கும் ஒருவன், அதிகபட்ச அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறான். காரண காரியங்களை அறிதல், முடிவெடுத்தல், நியாய உணர்வு, பொது அறிவு என எல்லாவற்றையும் ஏன் அறிவார்ந்த ஆண்மையையே விட்டுக் கொடுத்துவிடும் ஒருவன், விடுதலை பெறாத தென்அமெரிக்க கறுப்பின அடிமையைக் காட்டிலும் வலுவான விலங்குகளால் கட்டப்படுகிறான்.
இந்து மனதின் அப்பாவித்தனமும் அடிமைப்பண்பும் அதிகாரத் தாகம் கொண்ட தந்திரசாலிகளான பிராமணர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தன. அவர்கள் தங்கள் திறமையைக் காட்டத் தயங்கவில்லை. அவர்கள், மக்கள் தங்கள் கட்டளைகளுக்கு ஆட்டு மந்தையைப்போல் கீழ்ப்படிவதைக் கண்ணுற்றனர்.
அவர்கள் பிற இனத்தவரோடு தங்களை அய்க்கியப்படுத்திக் கொள்ளவில்லை. பிற இனத்தவர் தங்களைத் தீண்டுவதே தங்களை மாசுபடுத்துவதாகக் கருதி விலகி நின்றனர். உலக வரலாற்றில் எங்கும் காணப்படாத மிக உயர்ந்தபட்ச கொடுமை இதுவாகும் (1881 மறுபதிப்பு 1974:மிமிமி, 225_226). இந்துக்களின் மதம் சார்ந்த மனப்பான்மையை எவ்வாறு பிராமணர்கள் வர்ணாசிரம மற்றும் ஜாதிய முறைகளை நிறுவப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும், தங்கள் நாட்டின் சக மனிதர்களது அப்பாவித்தனம், அறியாமை, கல்லாமை மற்றும் அடிமை மனப்பான்மையைத் தங்கள் நலனுக்காக அவர்கள் பயன்படுத்திக் கொண்டதையும் ஷெர்ரிங் விளக்கினார்.
எதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிடும் ஒரு இந்துவின் மதம் சார்ந்த மனப்பான்மை அவனுக்கு நன்னெறியை, தனது சக மனிதனை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைப் போதிக்கவில்லை. மதநம்பிக்கை மனிதர்களுக்குள்ளிருந்து உன்னதங்களை வெளிக்கொணரவில்லை. (குஷ்வந்த் சிங் 2002 : 50, 51). இந்தியர்களின் அடிமை மனப்பான்மையே அவர்களது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எதிரொலிக்கிறது. இந்துமதம், மரபு வழியான மூடநம்பிக்கைகளையும், பிறரைக் கொடுமைப்-படுத்தும் மனப்பான்மையையும் வளர்க்கின்றது. அறிவு வளர்ச்சியைத் தடுக்கிறது.
மத்திய காலத்தில், அய்ரோப்பாவில், மக்கள் மத குருக்களின் பிடியில் இருந்தபோது, அங்கு அறியாமையும், சமத்துவமின்மையும் இருந்தன. தேசத்தின் அதன் மக்களின் வாழ்க்கையில், மதமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஜெர்மானிய மதச் சீர்திருத்தம், 1789இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சி, 19ஆம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி ஆகியவற்றால்  அய்ரோப்பாவில் அறிவு வளர்ச்சியும் நவீனத்துவமும் வளர்ந்தன. சிறுபான்மையாகிவிட்ட மடாலயங்கள் மதநம்பிக்கையைத் திணிப்பதில் வெற்றி பெற இயலவில்லை. ஆனால், இந்தியாவில் மக்கள்-தொகையில் (1931 கணக்கெடுப்பின்படி) 6.4 விழுக்காடேயான பிராமணர்கள், பிராமண இந்துத்துவத்தை உருமாற்றி, புத்துயிரூட்ட முடிந்தது. பொய்யான மரபு, போலிப் பண்பாடு என்னும் போர்வைகளில் வர்ணாசிரமத்தையும், ஜாதி முறையையும் திணிக்க முடிந்தது. உலகில் வேறெங்கும் பூசாரிகள் இந்த அளவுக்கு எல்லையற்ற சமூக அதிகாரங்களையும், உரிமைகளையும், மக்கள் மத்தியில் மதிப்பும் துய்க்க இயலவில்லை. இன்றைய சமத்துவ, ஜனநாயக சமூகத்திலும் இது தொடர்கிறது-. எல்லா விஷயங்களிலும், தனிநபர் சார்ந்த, சமூக மற்றும் மத விஷயங்களில் அப்பூசாரிகளது ஆலோசனை கேட்கப்படுகின்றது. அவரது கூற்றே சட்டமாகிறது, எவ்விதக் கேள்வியோ மாற்றமோ இன்றி அவரது வார்த்தை சட்டமாக ஏற்கப்படுகிறது.
வடமேற்குப் பிராந்தியம் மற்றும் ஔத் பகுதியின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்பார்வை-யாளராகப் பணியாற்றிய ஜே.சி. நெஸ்ஃபில்ட் (J.C. Nesfield ICS) என்னும் அய்.சி.எஸ்., அதிகாரி, இந்தியாவின் ஜாதி முறை அமைப்புக் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளை நிகழ்த்தினார். அவர் சரியாகவே சொன்னார்:_ நாம் இரு உண்மைகளை ஏற்போமானால், இந்தியாவில் ஜாதி முறை தோன்றியது எவ்வாறு என்பது பற்றிப் புரிந்து கொள்ளுவது அரிதல்ல. ஒன்று, ஜாதி என்பது தொழில் அடிப்படையில் இயற்கையான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் உருவானது, பிறப்பின் அடிப்படையிலோ அல்லது உறவின் அடிப்படையிலோ அல்ல. இரண்டாவது, பிராமணன் பிற எல்லா வகுப்பினரது மனங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தினான். அவர்கள் அறியாமை-யிலும் மூடநம்பிக்கைகளிலும் ஆழ்ந்திருந்த-தால் அவர்களுக்கு தங்கள் பூசாரிகள் சொல்வதை ஏற்பதைத் தவிர வேறு வழியிருக்க-வில்லை. கருணையற்ற ஆக்கிரமிப்பாளரைக் காட்டிலும் அதிகப் பங்கினை மக்களை அடிமையாக்குவதில் பூசாரிகளும், மதகுருக்களும் ஆற்றியுள்ளனர். ஒரு கொடுங்கோல் அரசனை மக்கள் ஒரேநாளில் வீழ்த்தி விடலாம். ஆனால், மூடநம்பிக்கைகளால் இருண்டுவிட்ட மனம் தனது பார்வையை இழந்து விடுகிறது. இந்துக்களின் மூடநம்பிக்கை என்னும் ஆடையைப் பிராமணர்களே தயாரித்துத் தருகின்றனர்.

நூல்: இந்தியாவில் மட்டுமே சாதிகள் இருப்பது ஏன்?

ஆசிரியர்: ஆங்கிலத்தில்: டாக்டர். வெ. கண்ணு(ப்பிள்ளை) அய்.பி.எஸ்., (ஓய்வு)

தமிழில்: மு. குமரேசன்

வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம் 
96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-600041

செல்பேசி: 9444244017 பக்கங்கள்: 160   விலை: ரூ.120/-

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆயிரம்வருடங்களுக்குப் பின்,
பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்து ஹாலிவுட்டுக்கு சென்று உலகப்புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் மனோஜ் நைட் ஷியாமளன். "பிரேயிங் வித் ஆங்கர்', "தி சிக்ஸ்த் சென்ஸ்', "அன்பிரேக்கபிள்', "தி வில்லேஜ்', "லேடி இன் தி வாட்டர்' போன்றவை இவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்த படங்கள்.
2010ல் வெளிவந்த இவரது "தி லாஸ்ட் ஏர்பெண்டர்' படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அதனையடுத்து இவரது இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் "ஆஃப்டர் எர்த்'.
புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் அவரது மகன் ஜாடன் ஸ்மித்தும் இந்தப் படத்தில் தந்தை மகனாகவே நடித்துள்ளனர்.

"மென் இன் பிளாக்' (2002) படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து ஹாலிவுட்டில் அறிமுகமான ஜாடன் ஸ்மித் அதன் பின்னர் வெளிவந்த "தி கராத்தே கிட்' படத்தில் ஜாக்கி சானோடு இணைந்து நடித்திருந்தார். "இன் பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்' படத்தில் ஏற்கெனவே வில் ஸ்மித்தும் ஜாடன் ஸ்மித்தும் தந்தை மகனாகவே நடித்துள்ளனர்.
 ஒரு காரில் தந்தையும் மகனும் பயணம் செய்யும்போது அந்த கார் விபத்துக்குள்ளாகிறது.
அதிலிருந்து ஆயிரம்வருடங்களுக்குப் பின் என்ன நடக்கிறது என்பதும் தந்தையும் மகனும் எப்படி உயிர் பிழைத்து வந்தார்கள் என்பதும் இந்த விஞ்ஞானப் படத்தின் மீதிக் கதை.
 இந்தக் கதையை உருவாக்கியிருப்பவர் வில் ஸ்மித்தான். திரைக்கதை எழுதியிருப்பவர் கிரே விட்டா.
 தான் எழுதாத ஒரு கதையை மனோஜ் நைட் ஷியாமளன் இயக்குவது இதுவே முதல் முறை. தமிழில் இப்படம் "அபாய கிரகம்' என்ற பெயரில்  வெளியாகிறது.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இவர் நம்ம ஹாரிபாட்டர்  தான்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?