ராணுவத்தையும் தனியாரிடம்.....,

suran
இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்
தைசமாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதியதிருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது.
இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் போலீசார் எல்லைப் பகுதி அருகே சென்று பார்த்தனர். அப்போது கூடாரம் அமைப்பதற்காக மியான்மர் ராணுவ வீரர்கள் தரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
பின் வழமை போல்  மியான்மரிடம் பணிவாக பேசி அவர்களை வெளியெ போகச்செய்ததாம்.
இத்துடன் விட்டால் போதும்.இப்போதைய காங்கிரசு அரசின் மன்மோகன் சிங் ஆட்சியில் இந்திய பாதுகாப்பு உலக நாடுகளிடையே சிரிப்பு ராணுவமாக இந்திய ராணுவத்தை ஆக்கி விட்டது.
மியான்மர் வந்தாயிற்றூ இன்னமும் இலங்கை,வங்க தேசம்,திபெத் ராணுவங்கள் உள்ளே வர வேண்டியதுதான் பாக்கி.
இந்திய ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு ரொம்ப பாதுகாப்பாக இருக்கிறது.

suran

அவ்வப்போது வந்து பாகிஸ்தான் படையினர் சுட்டு தள்ளிவிட்டு இந்திய வீரரின் தலையை கொய்து கால்பந்து விளையாடி விட்டு போகிறார்கள்.
சீனா இந்திய குடியரசுத் தலைவர் வீடூ வரை தார் சாலையை அமைக்கிறது.பாராளுமன்றத்தில் இறங்க்கும்வரையில் ஹெலி காப்டர் தளம் அமைக்கிறது .இதுதான் காங்கிரசின் தேச பாதுகாப்பு கொள்கை.
இந்திய ராணுவ வீரர்கள் தேசத்துக்காக உயிரை கொடுப்பதில்,பாதுகாப்பில் யாருக்கும்-எந்த நாட்டுக்கும் குறைந்தவர்கள் அல்ல.ஆனால் அவர்களை கட்டுப்படூத்தும் கொள்கைகளை வடிவமைப்பவர்கள்தான் குறிப்பாக ,இன்றைய ஆட்சியாளர்கள்தான் இன்றைய எல்லை பாதுகாப்பின்மைக்கு பொறுப்பாளர்கள்.ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் இருந்து எல்லாவற்றிலும் முறைகேடுகள் .
நமத்துப்போன குண்டுகள்,துருவேறிய டாங்குகள் செயல்பட முடியா வெளியுறவு கொள்கைகள் .இதுதான் இன்றைய இந்திய ராணூவத்தின் கரங்களை கட்டி வைத்துள்ள கயிறுகள்.
பாகிஸ்தான்,சீனா ராணுவ செயல்பாடுகள் நாட்டின் பாதுகாப்பை முக்கியமாக கொண்டுள்ளது.
நேரு-இந்தி ரா காலத்தில் இந்திய ராணூவத்தின் செயல்பாடுகள் போல் இன்று இல்லாததுதான் மிகப்பெரிய குறை.

கப்பல் தளம்,முதல் அனைத்திலும் தனியாரை,அந்நிய நிறுவனங்களை வரவழைத்து ஒப்படைக்கும் மன்மோகன் அரசு ராணுவத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கலாம்.தாவூத் இப்ராஹிம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக  இருக்கிறார்.

suran


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியா மூன்றாவது,

---------------------------------

சர்வதேச அளவில் 2012 காலண்டர் ஆண்டில், இணையதள பயன்பாட்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என ஆராய்ச்சி நிறுவனமான காம்ஸ்கோர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 7.39 கோடியாக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 31 சதவீதம் அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டில் ஜப்பானை விட கூடுதலாக 1.76 கோடி பேர் நம்நாட்டில் இணையதளத்தை பயன்படுத்தி உள்ளனர்.
சர்வதேச அளவில் இணையதள உபயோகிப்போர் எண்ணிக்கையில் சீனா மற்றும் அமெரிக்கா முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
அதிகரித்து வரும் செல்போன் வாடிக்கையாளர்கள், சமூக ஊடகங்கள் காரணமாக இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2013 மார்ச் நிலவரப்படி, ஆசிய–பசிபிக் பகுதிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இணையதளம் உபயோகிப்போர் மொத்த எண்ணிக்கை 64.40 கோடியாக உள்ளது. இதில் சீனாவின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
இந்நாடு 54 சதவீத பங்களிப்புடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 11.5 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் மூன்றாவது இடத்தில் 11.4 சதவீத பங்களிப்புடன் உள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் இதர ஆசிய–பசிபிக் பகுதி முறையே 9.6 மற்றும் 13.5 சதவீத பங்களிப்புடன் உள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?