தலைக்கு மேலே .

ஒரு ஆய்வின் படி மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால் ஒருவனுக்கு உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் ஏற்படலாம். 
என நினைக்க தோன்றுகிறது. தனக்குள் தானே ஆழ்தல் (Self Transcendence)  எனும் ஒரு தனிச்சான்றாண்மை இயல்பு (ஆளுமை இயல்பு  என்பதை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 
suran
சான்றாண்மை இயல்பு அல்லது ஆளுமை இயல்பு என்பது ஆன்மிக உணர்வு சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் ஒரு தெளிவற்ற அளவாகும். தனக்குள் தானே ஆழ்தல் என்பது தன்னுணர்வைக் குறைவாய் பிரதிபலிக்கின்றது. குறைவாய் சார்ந்திருக்கின்றது. ஒரு தனி ஆத்மா தன்னை இந்த பிரபஞ்சத்தின் ஒரு முழுமை பகுதியாய்க் கண்டு கொள்ளும் ஆற்றலையும் பிரதிபலிக்கின்றது. எனக்கருத்து தெரிவிக்கின்றார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அறுவைசிகிச்சை மூலம் மூளையில் ட்யூமர்க்கட்டி நீக்கப்பட்ட சிலரை அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் ஆராய்ந்திருக்கின்றார்கள்.அப்போது பின்மண்டைப் பகுதிகளில் மூளையில் ஏற்படும் பாதிப்பு தனக்குள் தானே ஆழ்தல் எனும் யோக நிலையை தூண்டும் மர்மம் தெரியவந்திருக்கின்றது. மூளை இயல்பாக செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கும், தனக்குள் தான் ஆழ்ந்து விடும். 
யோக நிலைக்கும் இடையிலுள்ள செய்விளைவு தொடர்பை எங்கள் ஆய்வு முதன்முதலாக நிரூபித்து காட்டியுள்ளது. என்று ஆய்வு விஞ்ஞானிகளில் ஒருவரான காஸிமோ உர்ஜெஸி கூறியிருக்கின்றார். 
பின் பக்கத்து மண்டை பகுதிகளில் மூளையில் ஏற்படுகின்ற பாதிப்பு அல்லது பழுது ஒரு தனிநிலை சான்றாண்மை வேகமான மாறுதல்கள் ஏற்பட தூண்டியுள்ளது. 
அது தனியான ஒரு சான்றாண்மை என்ற எல்லை பரிமாணத்தையும் தாண்டி ஆழ் உணர்வில் தொடர்பு கொண்டு பொதுவாகி, வெட்ட வெளியாகிவிடுவதை போன்றதாகும். ஆக, பழுதினால் பாதிக்கப்பட்ட மண்டை நரம்பு செயல்பாடு என்பது, உருதிரிந்த ஆன்மிக மத உணர்வுகளையும் உறுதிபடுத்தி தெரிவிக்கலாம். முன்பெல்லாம் நடந்து வந்த நியூரோ இமேஜிங் ஆய்வுகள் மூளையினுள்ளதாக திகழும் மண்டைப்பகுதிகள் முதலியவற்றை இணைக்கும் பெரிய ஒரு நரம்பு பின்னலினுள்ளே நிகழும் செயல்களை ஆன்மிக அனுபவங்களுடன் தொடர்புபடுத்தின. 
வலது மண்டைப் பகுதி மூளைத்தோடு நன் என்னும் உணர்வை விளக்குவதாகும். இந்த உணர்வை அதிகம் ஓட்டாமல் உணர்பவர்கள் ஆன்மிக ஆர்வம் கொண்டவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள்.

 ஆக மொத்தத்தில் மூளையில் எற்படும் பாதிப்புதான் கடவுளையே நமக்கு காட்டுகிறது .
இளம் வயதில் பெற்றோரும்,மற்றோரும் கடவுளை நம மனதில் புகுத்துவதால்தான் கடவுள் நம்பிக்கையே மனிதனுக்கு உண்டாகுகிறது.மற்ற உயிர்களிடம் அப்படி மூளைச்சலவை இல்லை.அவைகளுக்கு கடவுளும் இல்லை.இயற்கையோடு இணைந்து வாழ்ந்து இயற்கையுடன் மறைகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் முடி கரு,கரு வென அடர்த்தியாக இருந்தால் எப்படி இருக்கும் ?

* வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும்.
* நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும்.
* அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும்.
suran
* இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு தொல்லை போய் விடும்.
* உங்களுக்கென்று தனியாக சீப்பு வைத்துக் கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளை தவிர்க்கவும்.
* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை, தலையில் தடவி ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால், மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
* நேரமில்லை என்பவர்கள், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.
* விளக்கெண்ணையை போல உடலுக்கு குளிர்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* தலையில், ஆங்காங்கே சிறு பொட்டல் இருந்தால், சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால், மீண்டும் முடி வளரும்.
* தலை முடிக்கு, போஷாக்குத் தரும் ஷாம்பூவை, வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது.
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.
suran
* வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி; முடியும் உதிராது.
* தலைக்கு சீயக்காய்த் தூள் தேய்க்கும் போது, சீயக்காயுடன் தண்ணீருக்கு பதில், மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.


முடி பளபளப்பாக

வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி, ஒரு கப் அளந்து எடுத்து, அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில் சிறிது, யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்த சாறுடன், தேங்காய் எண்ணெய் கலந்து, மயிர் கால்களில் படும்படி நன்றாக, "மசாஜ்' செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால், முடி பளபளப்பாக மென்மையாக மாறும்.
Click Here
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?