யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்?


suran

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது.
 உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. 
அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.
ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன்.

suran

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்ளுகிறாள். அவள் எப்போதும் பாடிக்கொண்டும் பியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள். சில சமயம் நான் அவளுக்கு கணக்குப் போட உதவி செய்வேன். அப்போது அவளிடம், “இதெல்லாம் உன் குழந்தைக்காகவா?” என்று கேட்பேன். “ஆமாம், கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் மேதையாக ஆகும், இல்லையா?” என்பாள். குழந்தை பிறக்கும் வரை விடாது கணித புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.
கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது: பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பும், மற்ற கொட்டை வகைளும் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை  (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.
மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால் மீனின் தலை மூளைக்கு  நல்லதில்லையாம் கர்ப்பிணி பெண் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.
மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்..
உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.
suran

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும். இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.
இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர்……..யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.
முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிரார்கள்.
என் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் -  ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ, வயலின் முதலிய இசைக் கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு  கட்டாயம்
இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து, அவர்களை மேதைகள் ஆக்கும். இசை அதிர்வுகள் மூளையை தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.
முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை  படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது கலிபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின் தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்..

suran

யூதக்குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம்  சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும்  மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.
உயர் நிலைப் பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.
போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள், (projects) புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கழகங்களிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு  முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல் முறை திட்டத்தை நடைமுறைப் படுத்தி காட்ட வேண்டும்;  10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால் தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள் இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்து இருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு  மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.
இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை  (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை  தற்செயல் என்று சொல்லலாமா?
நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது. இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ்,கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடை பெறுகின்றன.
suran
யூத மருத்துவ பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனத்தின் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களில் மருத்துவ மனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.
2005 இல் சிங்கப்பூர் போயிருந்த போது ஓரு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இங்கு சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். 
இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது. 
ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான். 
சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.
இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான். 
 எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள்.
 பலன்? 
suran
லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்! அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள எத்தனை சிரமப் படுகிறார்கள். இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான். சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.
சற்று சிந்தித்துப் பாருங்கள். என்னுடைய ஆய்வறிக்கையில் நான் இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.

நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலி தலைமுறையை உருவாக்க முடியுமா?


written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan


--------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய மின் கட்டணம்;-
அடுக்குமாடிகுடியிருப்புக்கு பலன்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தற்காலிக மின் இணைப்புக்கான கட்டணத்தை மாற்றியமைத்துள்ளதன் மூலம், அடுக்குமாடிகுடியிருப்பு கட்டுவோர்அடுக்குமாடிகுடியிருப்பு கட்டுவோர் பலனடைகின்றனர். 
 புதிதாக வீடுகட்டும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

தமிழகத்தில் மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற, மின்வாரியத்தின் மனு மீது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.
 அதையடுத்து, புதிய மின் கட்டணத்திற்கான அறிவிப்பு, கடந்த ஜூன் 20ம் தேதி அறிவிக்கப்பட்டு, 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய மின் கட்டணத்தில், தற்காலிக மின் இணைப்பு (டேரிப்-6) வழங்குவதில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. மின் கட்டண சீராய்வுக்கு முன், குடியிருப்பு கட்டடத்தை விஸ்தரிப்பு செய்யவும், புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கும், தனி மின் இணைப்பு பெற வேண்டும்.
suran
 அதற்கு, வர்த்தக பயன்பாட்டிற்கான (டேரிப்- 5) மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது.வர்த்தக பயன்பாட்டிற்கு 100 யூனிட் வரையிலும் ஒரு யூனிட்டுக்கு 4.30 ரூபாயும், 100 யூனிட்டுக்கு மேல், ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அப்பார்ட்மென்ட், தொழிற்சாலைகள் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக மின் இணைப்பு (டேரிப் -6) பெற வேண்டும். இந்த இணைப்புக்கு தினமும் ஒரு கிலோ வாட் மின்பயன்பாட்டிற்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
மாதத்திற்கு குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.

மின் கட்டண சீராய்வுக்கு பிறகு, குடியிருப்பு கட்டடத்தை 2,000 சதுர அடிக்குள் விஸ்தரிப்பு செய்தால், தனி மின் இணைப்பு பெறத்தேவையில்லை. கட்டட அனுமதி நகலை ஒப்படைத்து மின்வாரியத்தில் அனுமதி பெற்று, வீட்டு மின் இணைப்பை (அதே கட்டணத்தில்) பயன்படுத்தலாம்.
இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் குடியிருப்பை விஸ்தரிப்பு செய்யவும், புதிதாக வீடு கட்டவும், 12 குடியிருப்புகளுக்கு மேலுள்ள அப்பார்ட்மென்ட் கட்டவும், தற்காலிக மின் இணைப்பு (டேரிப் -6) பெற வேண்டும். தற்காலிக மின் இணைப்பு கட்டணம், மாதத்துக்கு ஒரு கிலோ வாட்டுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் யூனிட் ஒன்றுக்கு 10.50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பார்ட்மென்ட்களுக்கு
ஒரு நாளுக்கு ஒரு கிலோவாட் அடிப்படையில் இருந்த மின் கட்டணம், ஒரு மாதத்திற்கு ஒரு கிலோவாட் என்ற அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.
சீராய்வுக்கு முன்பாக புதிதாக வீடுகட்டுவோர் "டேரிப் -5' மின்கட்டணத்தில் இருந்தனர். தற்போது, புதிதாக வீடு கட்டுவோருக்கும், அப்பார்ட்மென்ட் கட்டுவோருக்கும், ஒரே கட்டணம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மின் பகிர்மான கழகத்திற்கு மாதத்திற்கு குறைந்த பட்சம் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
ஏற்கனவே, 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் சிக்கித் தவிக்கும் மின் பகிர்மான கழகத்திற்கு, கூடுதலாக வருவாய் இழப்பு ஏற்படும் என, அனுபவம் வாய்ந்த மின் பொறியாளர்கள், தலைமைக்கு கருத்து தெரிவித்துள்ளனர். 
ஆனால், மின் கட்டணம் மறுசீராய்வு செய்து அறிவிக்கப்படாமல் உள்ளதால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஜூன் மாதம் அறிவித்த கட்டண விகிதமே கடைபிடிக்கப்படுகிறது.
 பழைய கட்டண அடிப்படையில் கணக்கிட்டால், அப்பார்ட்மென்ட் கட்டுவோர், மாதத்துக்கு குறைந்தபட்சம் 3000 ரூபாய் கட்டாயம் செலுத்தவேண்டும்.
 தற்போதைய கட்டண விகிதப்படி, மாதத்துக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் செலுத்தினால் போதும். அடிப்படை கட்டணத்தை குறைத்துள்ளதால், அப்பார்ட்மென்ட் கட்டுவோர் பலனடைகின்றனர். 
மின்பகிர்மான கழகம் தனியார் பில்டர்களுக்கு சாதகமாக முன்வைத்த மின் கட்டணம் விபரத்தை, ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
suran
சாதாரண மக்களுக்கு விரோதமாகவும், அப்பார்ட்மென்ட் உரிமையாளர்களுக்கு சாதகமாகவும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளதை, இதுவரை மாற்றி அமைக்கவில்லை. இதன்மூலம், மின்பகிர்மானக்கழகத்தினர் ஒட்டுமொத்தமாக அப்பார்ட்மென்ட் உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மின்கட்டண சீராய்வு என்ற பெயரில், அப்பார்ட்மென்ட் கட்டும் பில்டர்களுடன் மின்பகிர்மானக்கழகம் கைகோர்த்துக்கொண்டு, சாதாரண மக்களை புறக்கணித்துள்ளது.
இதற்குமுன், சாதாரண மக்கள் வீடு கட்டும் போது, 1,600 ரூபாய் டெபாசிட் செலுத்தி, வர்த்தக பயன்பாட்டு மின் இணைப்பு பெற்றனர். வர்த்தக பயன்பாட்டிற்கு 100 யூனிட் வரையிலும் ஒரு யூனிட்டுக்கு 4.30 ரூபாயும், 100 யூனிட்டுக்கு மேல் இருந்தால் ஒரு யூனிட்டுக்கு 7 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. 
தற்போது, மாற்றி அமைக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தால், புதிதாக வீடு கட்ட மின் இணைப்பு பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.
 புதிதாக கம்பம் போட்டு, லைன் இழுப்பதற்கு விண்ணப்பதாரரே பணம் செலுத்த வேண்டும். அதன்பின், ஆறு மாதத்துக்கு கணக்கிட்டு 22,680 ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். 
மின் உபயோக கட்டணமாக ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் கட்டணம் 300 ரூபாயுடன், பயன்பாட்டு கட்டணத்தை சேர்த்து செலுத்த வேண்டும். இதனால், புதிதாக வீடு கட்டுவோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 சொந்த உபயோகத்திற்கு வீடுகட்டுவோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் புதிய மின் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, மின்பகிர்மானக்கழகமும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?