இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

" சூரிய" மோசடி விபரம்.!

படம்
ஒன்றும் பதற  வேண்டாம் . கல்லடி பட்ட உம்மன் சாண்டி யே பதற வில்லை.தனது தவறுதான் .என்று சொல்லி விட்டார்.கல்லெறிந்த கட்சி அச்சுதானநதனே நேரில் ஆறுதல் சொல்லி கல்லடியை குணமாக்கி விட்டார். நாம் இப்போது இவ்வளவு களேபரங்களுக்கும் காரணமான சூரிய சக்தி [சோலார் பேணல் ]மோசடியை பற்றி பார்ப்போம். கேரளத்தைச் சேர்ந்த சரிதா நாயர் தன்னுடைய ‘டீம் சோலார் எனர்ஜி கம்பெனி’ என்ற நிறுவனம் மூலம் சோலார் பேனல்களை விற்பனை செய்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘மின் தட்டுப்பாட்டை தடுப்பதற்கு கேரள அரசு சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வகுத்திருக்கிறது. அந்த திட்டத்தின் மூலம் தோட்டங்களிலும், பண்ணை வீடுகளிலும் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது.  அவ்வாறு கிடைக்கும் உபரி மின்சாரத்தை அரசே நியாய விலைக்கு வாங்கிக் கொள்ளும்.  இத்திட்டம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு மானிய விலையில் உபகரணங்களையும் வழங்க இருக்கிறது. இந்த திட்டத்துக்கான சோலார் பேனல்களை கேரளம் முழுவதும் விற்கும் உரிமையை கேரள முதல்வர் உம்மன் சாண்டி எங்கள் நி

வறுமை ஒழிப்பு தினம்

படம்
 உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.  வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. இந்தாண்டு "பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பது' என்பது இத்தினத்தின் மையக்கருத்து.  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம்  உருவாக்கப்பட்டது.  உலக மக்கள் தொகையில் 129 கோடி பேர் முற்றிலும் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர் 2008ல் "உலக வங்கி' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏழ்மை நிலையில் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் உள்ளன.  ஏழ்மை

"மோடி தாசன் '

படம்
தமிழருவி மணியன்  -------------------------------------- காந்திய மக்கள் இ யக்கத்தின்ஒரேதலைவரும்,தொண்டருமான  தமிழருவி மணியன்,இப்போது காவிக் கொள்கையில் கரைந்து விட்டார் போல் தெரிகிறது. பாஜகவின் அறிவிக்கப்படாத கொள்கைப் பரப்புச் செயலாளராக மோடிக்கு வாக்காலத்து வாங்கி மேடைகளில் மட்டுமின்றி எழுத்துக்களிலும் மோடியாயணம் பாடி வருகிறார். கடந்த 2 ம் தேதி மதுரையில் நடைபெற்ற காந்திய மக்கள் இயக்க 4 - ஆம் ஆண்டு துவக்க விழாவில் தமிழருவி மணியன் பேசிய பேச்சுகளுக்கு கிடைத்த எதிர்வினையைத் தொடர்ந்து தற்போது தனது எழுத்தை வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று இதழ் ஒன்றில் பில்டப் செய்துள்ளார். “ என்னைப் பொறுத்தவரை ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்றதற்குத் துணைபோன காங்கிரஸ் அரசு கருவறுக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் மாற்று அரசியல் வேண்டும் என்கிறேன்.  இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகியவற்றுடன் ஒரு வருடமாகப் பேசி வந்தேன். திருப்பூரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் இரண்டு இடதுசாரிக் கட்சிகளையும், வைகோவையும் இணைத்து மாற்று அணியாக அறிவிக்க எவ்வளவோ பாடுபட்டேன்.  சிபிஎம் கட்சியினர்

உயிர் காக்க...

படம்
ஒரு பயிற்சி! எங்கு வேண்டுமானாலும்,யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம். ஒருவர் நெஞ்சு வலி என்று மார்பைப் பிடித்துக் கொண்டதுமே,  அதை வாயுக்கோளாறு என்று நினைத்துக் கொள்கிறோம். வாயுக்கோளாறுக்கு நமக்குத் தெரிந்த மருத்துவத்தைச் சொல்கிறோம். செய்கிறோம். மாரடைப்பின் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும்  ஆபத்தாகிவிடும்.' முதலில் எல்லாம் வயதானவர்களுக்குத்தான் மாரடைப்பு வந்தது. இப்போது சிறுவர்களுக்கே மாரடைப்பு வந்துவிடுகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நெஞ்சு வலி வந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு தேவையான பரிசோதனைகள் செய்வார்கள். வாயுக்கோளாறா,  அசிடிட்டியா?  மாரடைப்பா?  எதனால் நெஞ்சு வலி என்பது உடற் பரிசோதனைக்குப் பிறகுதான் தெரிய வரும். அதற்குப் பின்பு உரிய மருத்துவம் செய்வார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம்?  நெஞ்சு வலி வந்தவருக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறோம். வாயுக் கோளாறு என்று நினைத்துக் கொண்டு சோடா கொடுக்கிறோம். மார்பில் தைலங்

ராதிகா சரத் குமாரால் சிக்கலில் சூர்யா?

படம்
மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்  இலவசமாக கொடுத்த நிலத்தில் பிரம்மாண்டமான கட்டிடத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இயங்கி வருகிறது.  இந்த வளாகத்தை கட்ட அனுமதி தந்து அடிக்கல் நாட்டியவர் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர்.  இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிறு திரை அரங்கம்  இருந்தது.  தற்பொது அது இடிக்கப்பட்டு அங்கே கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதற்குள் ஒரு  திரையரங்கம் அமைக்கப்படுகிறது.   இதைநவீனமாக  டிஜிட்டல்,குளுகுளு வசதியோடு வடிவமைத்து இருக்கிறார்கள். வர்த்தக சபை தொடர்பான விழாக்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் இதில் நடத்திக்கொள்ள முடியும். இத் திரையரங்கம்  கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாயை  வழங்கி இருக்கிறார் நடிகர் சூர்யா.சும்மா இல்லை இத் திரையரங்கத்திற்கு  நடிகர் சூர்யாவின் தாயார் லட்சுமி அம்மாளின் பெயரை சூட்டவும் வர்த்தக சபை நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளதால்தான் . அதில் ஒன்றும் இப்போது செய்தி இல்லை.இந்த சூர்யாவின் கனவு  ராதிகா வால்  கழிந்து விடும் போல் இருக்கிறது.   காரணம் .தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நட