முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதரவு உருவாக்குவது - தேடுவது எப்படி?

இது மணிமேகலைப் பதிப்பக புத்தகத் தலைப்பல்ல.


இன்று இந்தியாவில் கலக்கி வரும் மோடியின் திடீர் பிரபலத்தின் அடித்தளம் பற்றிய சில விபரங்கள் .

மோடி இன்று பெற்று வரும் புகழ்-பரபரப்பான ஆதரவுகள் ,தானாக வந்ததல்ல.
வரவைக்கப் பட்டவை.அது எவ்வாறு ?என்பதுதான் நாம் பார்க்கப்போவது.
                 "கோப்ராபோஸ்ட் (cobrapost) என்கிற இணையதளம் நடத்திய புலனாய்வில், பல ஐடி நிறுவனங்கள், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களை, அரசியல்வாதிகளின் செல்வாக்கை போலியாக உயர்த்தவும், அவர்களுக்கு வேண்டாதவர்களை
எதிர்க்கவும் பயன்படுத்துகின்றன என தெரிய வந்து ள்ளது.
 
இதில் பாஜக கட்சியின் பிரதமர் நாற்காலிக்கான வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், பாஜக கட்சிக்கும் பல நிறுவனங்கள் வேலை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
 
புளூ வைரஸ் (blue virus) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில், இந்தியா முழுவதும் உள்ள, ஏறக்குறைய 24 ஐடி நிறுவனங்களைப் பற்றித் தெரியவந்துள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கான சமூக வலைதள விளம்பர நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் இத்தகைய நிறுவனங்கள், குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு ஆயிரக்கணக்கான அபிமானிகள் இருப்பதைப் போலவும், வேறொருவரது கணக்கை ஹேக் செய்து, அவர் பேசுவது போல தரக்குறைவான பதிவுகளை இடுவது போலவும் பல மோசடிகளை செய்து வருவது தெரியவந்துள்ளது.
இவையனைத்தும், அந்தந்த கட்சி சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பெரிய நிறுவனங்களுக்காக செய்வதாகவும், பணம்தான் இதன் குறிக்கோள் என்றும் கோப்ரா போஸ்ட் இணையதளம் தெரிவிக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய கோப்ரா போஸ்டின் ஆசிரியர் அனிருத்தா பஹால், "இணையதளத்தின் இணை ஆசிரியர் சையத் மஸ்ரூர் ஹசன், இருபதுக்கும் மேற்பட்ட ஐடி கம்பெனிகளை அணுகினார். தனது தலைவர் நேதாஜி என்பவர், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்க விரும்புவதாகவும், அவருக்கு எதிரானவர்களின் பெயரைக் கெடுக்க, செய்திகள் பரப்ப வேண்டும் என்றும் சையத் தெரிவித்துள்ளார்".
"அவர் அணுகிய அனைத்து கம்பெனிகளுமே, ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், போலியாக பல அபிமானிகள் இருப்பதாக காட்டலாம்.
இதனால் எதிர்கட்சியினரின் நற்பெயர் கெடுப்பதைப் போல செய்திகளும் பரப்பலாம் என்றே கூறின".
Modi, Miley, Pope in race for Time’s Person of the year
 
"இந்த புலனாய்வில கிடைத்த தகவலின் படி, பாஜக மற்றும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே, அதிக அளவில் சமூக வலைதளங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாகத் தெரியா வந்துள்ளது.
அவருக்காக பல நிறுவனங்கள், இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றன".
வெறும் நரேந்திர மோடியின் பெயர் மற்றுமே புலானய்வில் வெளியாகியதைப் பற்றி கேட்ட போது, நடந்த 5-6 புலான்ய்வு ஆபரேஷன்களில், அவரைப் பற்றித் தான் மீண்டும் மீண்டும் தெரிய வந்தது என்று அனிருத்தா கூறினார்.

சையத் அணுகும் போது, இந்த கம்பெனிகள், முஸ்லிம்களின் பெயரில் போலி அக்கவுன்டுகளை ஆரம்பித்து, அவர்கள் நேதாஜியைப் பற்றி நல்லவிதமாக பேசுவதைப் போலவும், அவர்கள் கட்சியின் புகழ்பாடும் வீடியோக்களை, யூடியூபில் பல பேர் பார்த்தது போன்று உருவாக்கவேண்டும் என்றதற்கு அவ்வாறு எளிதாக உரு வாக்கிட  முடியும் என்றும் கூறியுள்ளனர்" என்றார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி சட்டம் உட்பட பல சட்டங்களை, இத்தகைய மோசடிகள் மீறுகின்றன. இவை அனைத்தும் தண்டைனக்குரியவை என்றும் பஹால் தெரிவித்தார்.

இது சாதாரண விஷயமும் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு மோசடி நடக்கிறபோது, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம்.
அவ்வளவே. ஆனால், இந்த நிறுவனங்கள், வேறு எந்த கட்சிக்கும் வேலை செய்யவில்லை என்பதையும் உறுதியாகக்  கூற முடியாது.காரணம் அவர்களுக்கு பணத்தைக் கொடுத்து யார் வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்ளலாம் .இப்போது முன்னணி மக்கள் நம்பும் ஊடகங்கள் கூட பணத்துக்காக தனிப்பட்டவர்களை புகழ்ந்து விளம்பரங்களை நம்மபத்தக்க செய்திகளைப் போல் போட்டு மக்களை ஏமாற்றுகின்றன.அச்செய்திகளின் கீழ் விளம்பரம் என்று போடுவதை விளம்பரதாரர் விரும்புவதில்லை.அதிகப்பணம் வாங்க்கிக் கொண்டு பத்திரிகைகளும் செய்தியாகவே வெளியிடுகின்றன.இதற்கு பத்திரிக்கை கவுன்சில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் ".
இணையங்களில் இது போன்ற செய்திகளில் எதிர்வினை பதிவுகளை அழித்தல், அரசியல்வாதிகள் இடும் பதிவுகளை பல பேர் விரும்புவது [லைக் ]போல் மாற்றுதல், ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்குதல் எனப் பல சேவைகளையும் வழங்குவதாக, அந்த ஐடி கம்பெனிகள் தெரிவித்துள்ளன.
like
 
இது போன்ற பதிவுகள் எங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை மறைக்கும் வகையில், எதிராளியைப் பற்றிய தவறான பதிவுகள் இடுகையில், அவை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்ததாக பதிவெற்றப்படும்.
அதே போல, பயன்படுத்தப்படும் கணிணியின் பாகங்களும், பல கடைகளிலிருந்து வாங்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வேலை முடிந்த பின்னர் அழிக்கப்படும்.
இருக்கும் இடம் தெரியாமல் இருக்குமாறு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிராக்ஸி கோடுகள் மாற்றப்படும்.
இவை, தடம் தெரியாமல் இருக்க, அந்த கம்பெனிகள் பின்பற்றும் முறைகள்ஆகும் .
தகவல் தொழில் நுட்பம் மூலமாக எப்படியெல்லாம் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
சமுக வலைத்தளங்களை தங்களுக்கு ஏற்ப எப்படியெல்லாம் வளைக்கிறார்கள்.
இதேபோல் ஒன்றிணைப்பு மூலம்தான் இந்தியாவில் தங்கத் தாரைகைகளும்,உலகமுன்னணி தலைவர்களில் 100 பேர்களில் ஒருவராகவும் ஒருவர் வர முடிகிறது.அடிப்படையில் அனைத்துக்கும் தேவை பணம்.அரசியலில் அதற்கு என்ன பஞ்சம் ?

எதிர் கட்சிகளுக்கு வைக்க ஆப்பு.?
 -------------------------------------------------------------------------
   இ து அப்போ.....! 
------------------------------------------------
முதல்வர் ஜெயலலிதாவில் இருந்து  தற்பொதைய அரசியல் அடிமைகளி ல் முதல்வருமான  சரத் குமார் வரை மின் தட்டுப்பாட்டுக்கு முந்தைய திமுக அரசையும் இன்றைய மத்திய அரசையும் சுட்டிக் காட்டிவருகிறார்கள்.

அத்துடன் தாங்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறை வேற்றி சொல்லாததையும் நிறைவேற்றி விட்டு இப்போது நிறைவேற்ற ஒன்றுமே பாக்கியில்லாமல் தேடிவருவதாக ஏற்காட்டில்  வாக்குகளை வாங்கிட பரப்புரை செய்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கும்,தா.பா.வுக்கும்,ராம கிருஷ்ணானுக்கும் அத்துடன் நடிகை ராதிகாவின் கணவரும் ,நடிகர்களின் தலைவரும் ,மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைவரும் ,மாமேதையும் ,ஊடகவாதியுமான சரத் குமாருக்கும்
ஜெயலலிதா அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி -2011 புத்தகத்தில் இருந்து மின்தடை அதிகாரம் ,10ம் வசனத்தில் இருந்து சில வரிகள்[படித்து முடித்ததும் கிழித்துப் போடவும்.அல்லது ஆமென் சொல்லவும்.] :
                        " இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும்....

வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 ஆறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்றப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 ஆறு உருவாக்கப்பட்டு 3000 ஆறு மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.

காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும் மற்றும் அணுசக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் (Bio mass) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.
கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.


மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?