இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்

   .
"மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் "
...

suran
தமிழக மக்களும் ,அவர்களை கடிவாளமிட்ட குதிரைகளாய் வழி நடத்தும் ஊடகங்களும் இந்த மகாகவி பாரதியாரை நினைவு படுத்துவதை கவனமாக தவிர்த்து மக்களுக்கும் ,சமுதாயத்துக்கும் இதுவரை நல்லவிதமான எந்த வாய்சும் கொடுக்காத .தனது தொழிலை ப்மட்டும் பார்த்து கல்லா கட்டும் நடிகர்களின் பிறந்த நாளை மட்டுமே முன்னிறுத்துகின்றன.
அவர்களின் சாதனை{?"}யை தனி மலர்களாக வெளியிட்டு புள காங்கிதமதியாகின்றன.அத்துடன் தங்கள் பணபபெட்டியையும் நிரப்பிக் கொள்கின்றன.
 உண்மை நாயகனான பாரதியார்  பற்றி அறியாமல் திரைக்கதாநாயகர்கள்
போலி வீரம்,பாரிவள்ளல் தன்மையை கண்டு பார்த்து இள சமுதாயமே எங்கோ செல்கிறது.
மது-புகை போன்ற பழக்கத்துக்கு இந்த திரை கதாநாயகர்கள் ஒரு இளைய சமுதாயத்தையே தள்ளி விட்டுள்ளார்கள்.
சட்டத்தையும் ,உறவின் மரியாதை யும் மீறுவதையே இன்றைய சமுதாயம் தான் தங்கள்  திரை நாயகர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளனர்.

நாட்டின் விடுதலைக்காக,மக்களின் முன்னேற்றத்துக்காக பாடு பட்ட பாரதியாரை ,மக்கள் நலனுக்காக உழைத்து வறுமையில் வாடி-மக்கள் உள்ளங்களை தட்டி
எழுப்பும் பாடல்களை பாடி மறைந்த பாரதியாரின் பிறந்த நாளை கேட்டால் இன்றையொருக்கு தெரியாது.ஆனால் ஊடகங்களால் மட்டுமே உயர்ந்துள்ள ரசினி காந்தின் பிறப்பின் மகத்துவம் மட்டுமே தெரியும்.
அதுதான் இன்றைய நிலை.
ஆனால் இது போன்ற நிலையை எல்லாம் எதிர் பார்த்துதான் மகாகவி பாரதியார்

     "தேடிச்  சோறு நிதந்தின்று -பல 
      சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் 
      வாடி துன்பமிக உழன்று -பிறர் 
     வாடப் பல செயல்கள் செய்து -நரை 
     கூடிக்  கிழப் பருவமெய்தி   -கொடுங் 
     கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல 
     வேடிக்கை மனிதரைப் போலே -நான் 
     வீழ்வேனென்று நினைத்தாயோ ?"

பாடியுள்ளார்.
அவர் கூறியபடி கிழவனாகாமல் -நரை பார்க்காமல் மரணித்தார்.காரணம் அவர் இறக்கும் போது வயது 39 முடியவில்லை.
 அவரின் கவிதைவரிகளுக்கும்  கிழப்பருவம் கிடையாது.

மகாகவி பாரதியாரின் வரலாற்று சுருக்கம்.


1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி கார்த்திகை 27ஆம் தேதி  பாரதிபிறந்தார் . பிறப்பிடம் எட்டயபுரம் .
தந்தை; சின்னச்சாமி
 தாய்; லட்சுமி அம்மாள்.
பெற்றோர் வைத்த  பெயர் சுப்பிரமணியன்.
செல்லப் பெயர்; சுப்பையா.
1887 : தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5.
1889 : தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.
1893 : 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ் சபையில் சோதித்து, வியந்து, பாரதி (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.
1894 முதல் 1897 : திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப் பண்டிதருடன் சொற்போர்கள்.
1897 : ஜூன். 14 1/2 வயது பாரதிக்கும் 7 வயதுச் செல்லம்மாவுக்கும் திருமணம்.
1898 : ஜூன்; தந்தை மரணம். பெருந்துயர், சஞ்சலம்.
1898 முதல் 1902 : காசியில் அத்தை குப்பம்மாளுடன் வாசம். படிப்பு அலகாபாத் ஸர்வ கலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேர்வு. காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம், ஹிந்தி பயின்றார். கச்சம், வால் விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம்.
1902 முதல் 1904 : எட்டயபுரம் வாசம். மன்னருக்குத் தோழர். விருப்பமில்லா வேலை. மதுரை விவேகபாநுவில் தனிமை இரக்கம் என்ற முதல் பாடல் அச்சேறுகிறது.
1904 : ஆகஸ்ட் - நவம்பர்; மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தற்காலிகமாகத் தமிழ்ப் பண்டிதர்.
1904 : நவம்பர்; சென்னை சுதேச மித்திரன் உதவியாசிரியர். ஜி. சுப்பிமணிய அய்யரிடம் சிட்சை. சக்கரவர்த்தினி மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு.
1905 : வங்கப் பிரிவினை. சமுக சீர்திருத்தவாதி பாரதி அரசியல் தீவிரவாதியாகிறார். காசி காங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்தித்து, ஞான குருவாக ஏற்றல்.
1906 : ஏப்ரல்: சென்னையில் புரட்சிகரமான இந்தியா வாரப் பத்திரிகை உதயம். பாரதி பொறுப்பாசிரியர். மண்டயம் ந. திருமலாச்சாரி, எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி, சா. துரைசாமி அய்யர், வி. சக்கரைச்செட்டி, வ.உ.சி நட்பு. விபின சந்திரபாலர் சென்னை விஜயம். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிகை ஆரம்பம்.
1907 : டிசம்பர்; சூரத் காங்கிரஸ், திலகரின் தீவிரவாத கோஷ்டிக்கு ஆதரவு. வ.உ.சி., மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியுடன் சென்னைத் தீவிர இளைஞர் கோஷ்டியைச் சூரத் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸில் பிளவு. திலகர், அரவிந்தர், லஜபதி, பாரதி சந்திப்பு.
1907 : அரசியல் எதிரி, பழுத்த மிதவாதி வி. கிருஷ்ணசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப் போகிறார். சுதேச கீதங்கள் என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலு பக்கப் பிரசுரம் நிறைய வெளியிட்டு, இலவசமாய் விநியோகிக்கிறார் கிருஷ்ணசாமி அய்யர்.
1908 : சென்னை தீவிரவாதிகள் கோட்டை. சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. பின்னர் மூவர் கைது; வ.உ.சி., சிவாவுக்குத் தண்டனை, சிறை வாசம், வழக்கில் பாரதி சாட்சியம் சொல்கிறார்.
1908 : சுதேச கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியைப் பாரதி வெளியிடுகிறார். முதல் நூல்.
1908 முதல் 1910 : இந்தியாவும் புதுமை வந்து, பிரெஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் நுழையாதபடி, பிரிட்டிஷ் சர்க்கார் தடுக்கின்றனர். இந்தியா நின்று போகிறது.
1909 : ஜன்மபூமி என்ற இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடு.
1910 : விஜயா தினசரி, சூர்யோதயம் வாரப் பதிப்பு, பாலபாரத ஆங்கில வாரப்பதிப்பு, கர்மயோகி மாதப் பதிப்பு - யாவும் நின்று போகின்றன. சித்ராவளி ஆங்கில - தமிழ் கார்ட்டூன் பத்திரிகைத் திட்டம் நிறைவேறவில்லை.
1910 : ஏப்ரல் : பாரதி ஏற்பாடு செய்ய, அரவிந்தர் புதுவை வருகிறார். வேதநூல் ஆராய்ச்சி.
1910 : நவம்பர் : கனவு என்ற ஸ்வயசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணி வாசகம் நூல் வெளியீடு. வ.வே.சு அய்யர் வருகை.
1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆஷ் கொலை. புதுவைத் தேச பக்தர்கள் மீது சந்தேகம். போலீஸ் கெடுபிடிகள்; புதுவையிலிருந்து தேச பக்தர்களை வெளியேற்ற முயற்சிகள். பாரதியின் சிஷ்யகோடிகள் பெருகுகின்றனர்.
1912 : உழைப்பு மிக்க வருடம். கீதை மொழி பெயர்ப்பு, கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரம்.
1913 முதல் 1914 : சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி மறைந்து போகிறது. சுப்பிரமணிய சிவத்தின் ஞானபாநு பத்திரிகைக்கு விஷயதானம். தென் ஆப்பிரிக்கா நேடலில் மாதா மணிவாசகம் நூல் பிரசுரம். முதல் மகாயுத்தம் ஆரம்பம். புதுவைத் தேச பக்தர் தொல்லைகள் அதிகரித்தல்.
1917 : கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி சு. நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.
1918 : நெல்லையப்பர் சுதேச கீதங்களை நாட்டுப்பாட்டு என்று வெளியிடுகிறார்.
1918 : புதுவை வாசம் சலித்துப்போய், புதுவையை விட்டு நவம்பர் 20 ஆம் தேதி பாரதி கிளம்புகிறார். கடலூர் அருகே கைது. ரிமாண்டில் 34 நாள். முடிவில், வழக்கில்லையென விடுதலை. நேரே மனைவியின் ஊர் கடயத்துக்குச் செல்கிறார்.
1918 முதல் 1920 : கடயம் வாசம். திருவனந்தபுரம், எட்டயபுரம், காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக் கவிகள் பயனில்லை. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட விருப்பம்; நடைபெறவில்லை.
1919 : மார்ச்; சென்னைக்கு விஜயம். ராஜாஜி வீட்டில் காந்திஜி சந்திப்பு.
1920 : டிசம்பர் : சென்னையில் சுதேசமித்திரனில் மீண்டும் உதவியாசிரியர் வேலை. ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆசிரியர். பாரதி கட்டுரைகள் நிறைய எழுதுகிறார்.
1921 : ஜூலை - ஆகஸ்ட்; திருவல்லிக்கேணி கோயில் யானை ஒதுக்கித் தள்ள, யானை காலடியில் கிடக்கிறார். குவளை காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார் கவிஞர்.
1921 : செப்டம்பர்; யானை அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும் வயிற்றுக் கடுப்பு நோய் பீடிக்கிறது.
1921 : செப்டம்பர் 11; நோய்க்கடுமை. மருந்துண்ண மறுப்பு.
1921 : செப்டம்பர் 12 அதி  காலை 1.30 மணி க்கு மறைவு.

பாரதியார் மரணமடையும் போது அவருக்கு  39 வயது  நிறைவடைய வில்லை.
----------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு கடவுச் சொல் களவாடப்படுகிறது?


  • இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டாக இருக்கும் பலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் ஜி மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்களை திருடி அதனை தவறான நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். 

    அப்படி திருடப்பட்ட கடவுச்சொற்க்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாகவும் புதியதான கடவுச்சொற்கள் எதுவும் இல்லை எனவும் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கர்கள் கடவுச்சொற்க்களை திருடுவதற்க்கு ஏதுவாக நாமே கடவுச்சொற்க்களை ஒரே மாதிரியாக கொடுத்து விடுகிறோம். அப்படி முட்டாள் தனமாக கொடுத்த பலரின் கடவுச்சொற்க்கள் முறையை இங்கு காணலாம்.

    வார்த்தைகளை கடவுச்சொற்க்களாக கொடுப்பது 

    2012 ல் Splashdata என்ற சாப்ட்வேர் டெவலப்பர் யாகுவில் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் ஒரே மாதிரியான கடவுச்சொற்க்களை கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஒரே மாதிரியான கடவுச்சொற்க்களை கொடுப்பதால் ஹாக்கர்கள் மிக எளிதான முறையில் நமது கடவுச்சொற்க்களை திருடி விடுவார்கள். அதனால் இப்படிப்பட்ட கடவுச்சொற்க்களை கொடுக்காக கூடாது என்று பல செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்கள் கூறியுள்ளனர்.

    அடுத்தடுத்த எண்கள் 

    அடுத்தடுத்த எண்கள் அதாவது 1234 என்ற கடவுச்சொல்லைக் கொடுத்தால் மிக எளிதாக கண்டிபிடித்து விடலாம் என்றும் கூறியுள்ளனர். அதனால் இப்படிப்பட்ட கடவுச்சொற்க்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறது.

    ஒரே கடவுச்சொல்லை வெவ்வேறான இணையதளத்திற்க்கு கொடுப்பது 


    ஒரு கடவுச்சொல்லை வெவ்வேறான இணையதளத்திற்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது ஏனெனில் ஹாக்கர் ஒரு அக்கவுன்ட்டுக்கான கடவுச்சொல்லை கண்டுபிடித்தால் போதும் மற்ற அனைத்தையும் அவர் எளிதாக கண்டுபிடித்து பயன்படுத்திவிடலாம். அதனால் இப்படிப்பட்ட கடவுச்சொற்க்களை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

    பயன்படுத்துபவரின் பெயர் 

    சமூக இணையதளத்தினை பயன்படுத்துபவர்கள் அவர்களின் கடவுச்சொல்லை பயன்படுத்துபவரின் பெயராக தேர்ந்தெடுத்தால் அதனை ஹாக்கர்கள் மிக எளிதான முறையில் கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் இதுபோன்ற கடவுச்சொல்லையும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுத்தப்படுகிறது.

    உண்மையான பெயர் 

    உங்கள் உண்மையான பெயரை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதும் பாதுகாப்பற்றது தான் . ஏனெனில் ஹாக்கர்கள் உங்கள் பெயரை நகல் எடுத்து போட்டால் போதும் உங்கள் அக்கவுன்ட் அவர்கள் கைகளுக்கு போய்விடும்.

    ஷார்ட் கடவுச்சொற்க்கள் 

    ஷார்ட்டான கடவுச்சொற்க்கள் ஆன ‘test' மற்றும் ‘qwerty' இதுபோன்ற கடவுச்சொற்க்களைப் பயன்படுத்தினால் எளிமையான முறையில் ஹாக்கர்கள் இதனை கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில் இதுபோன்ற கடவுச்சொற்க்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

    உங்கள் குழந்தையின் பெயர்கள் 

    உங்கள் குழந்தைகளின் பெயர்களை கடவுச்சொல்லாக பயன்படுத்தினால் உங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால் இதுபோன்ற கடவுச்சொற்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறது.

    செல்லப் பிராணிகளின் பெயர் 


    செல்லப் பிராணிகளின் பெயர்களை கடவுச்சொல்லாக கொடுப்பது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு சில பெயர்கள் தான் செல்லப்பிராணிகளுக்கு உள்ளது. ஒவ்வொன்றாக அதன் பெயர்களை போட்டு முயற்ச்சிதால் எளிமையாக கடவுச்சொல்லை கண்டுபிடித்து விட முடியும்.


    அனைவருக்கும் தெரிந்த பெயர்கள் 

    அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் பெயர்களான ‘welcome', ‘ninja', ‘monkey' மற்றும்‘jesus' போன்ற பெயர்களை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிற்ப்பது நல்லது.

    ஹாக்கர்களை தவிர் ப்பது

    எவ்வாறு கடவுச்சொல்லை தேர்ந்தெடுக்க ரேன்டமாக சில எழுத்துகள் மற்றும் தனிப்பட்ட எழுத்துக்கள் ஆன @, _ , மற்றும் 1334 போன்றவற்றை பயன்படுத்தினால் ஹாக்கர்கள் கடவுச்சொற்கள் திருடுவதை நாம் தவிர் க்கலாம்.
  • நன்றி :தினகரன்.
  • --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------MSN Blog: World gathers for Mandela memorial---------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?